உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரஜினி பட தயாரிப்பாளர் விபரீத முடிவு

ரஜினி பட தயாரிப்பாளர் விபரீத முடிவு

மும்பை: ரஜினிகாந்த் நடித்த கபாலி படத்தை தெலுங்கில் தயாரித்த கே.பி.சவுத்ரி, 44, கோவா விடுதியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.பிரபல தெலுங்கு பட தயாரிப்பாளர் சங்கர கிருஷ்ண பிரசாத் சவுத்ரி என்கிற கே.பி.சவுத்ரி, 44.இவர், ரஜினி நடித்து வெளியான கபாலி படத்தை தெலுங்கில் தயாரித்து புகழ் பெற்றவர்.இவர், கோவா மாநிலத்தின் வட பகுதியில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தார். அவரது அறை திறக்கப்படாமல் இருப்பதை கண்டு, அங்கே இருந்தவர்கள் சந்தேகம் கொண்டனர்.உள்ளே சென்று பார்த்தபோது அவர் துாக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தார். அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. என்ன காரணத்தால் தற்கொலை செய்தார் என்று போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை