உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கூட்ட நெரிசல் சம்பவம் எதிரொலி; பெங்களூரு கிரிக்கெட் அணி நிர்வாகி உட்பட 4 பேர் கைது

கூட்ட நெரிசல் சம்பவம் எதிரொலி; பெங்களூரு கிரிக்கெட் அணி நிர்வாகி உட்பட 4 பேர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: பெங்களூருவில் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த வழக்கில் பெங்களூரு கிரிக்கெட் அணி நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.ஆர்.சி.பி., எனப்படும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கூடினர். கூட்ட நெரிசலில் சிக்கி, ஐந்து பெண்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். இது குறித்து ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=d8vvq44r&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த விவகாரத்தை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. 'பெங்களூரு அணியின் வெற்றியை கொண்டாட, ரசிகர்கள் கூட்டம் அதிகமாக வரும் என்று தெரியாதா? ஒரே நேரத்தில் விதான் சவுதா, சின்னசாமி மைதானம் ஆகிய இரண்டு இடங்களில் நிகழ்ச்சி நடத்தியது ஏன்? மாநில அரசு சார்பில் செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ன?' என, நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதற்கிடையே, கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்ததை, இயற்கைக்கு மாறான மரணம் என்று, கப்பன் பார்க் போலீசார் முதலில் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து கப்பன் பார்க் இன்ஸ்பெக்டர் கிரிஷ் அளித்த புகாரின்படி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு நிர்வாகம், டி.என்.ஏ., என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட், கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க நிர்வாக கமிட்டி மீது, போலீசார் நேற்று மாலை வழக்குப்பதிவு செய்தனர்.பெங்களூரு கிரிக்கெட் அணியின் நிர்வாகி நிகில் சோஸ்லே, டி.என்.ஏவின் சுனில் மேத்யூ உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

கைது செய்ய தடை

இதனிடையே, பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்ததை எதிர்த்து கர்நாடக கிரிக்கெட் சங்க நிர்வாகிகள், அம்மாநில ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அவர்களை கைது செய்ய தடை விதித்தனர். மேலும், நிர்வாகிகள் நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் எங்கும் செல்லக்கூடாது. விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Kalyan Singapore
ஜூன் 06, 2025 17:55

உண்மையாக இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்க வேண்டியவர் ஷ்ரேயஸ் ஐயர். அவர் மட்டும் மூன்றாவது பந்தில் வெளியாகாமல் இருந்திருந்தால் RCB வெற்றி பெற்றிருக்காது . கொண்டாட்டம் நடந்திருக்காது. அப்பாவிகள் இறந்திருக்க மாட்டார்கள் . அதனால் அவரைத்தான் முதலில் கைது செய்ய வேண்டும்.


Amar Akbar Antony
ஜூன் 06, 2025 16:06

கோலியாவது தலா இருபத்தைந்து இலட்சம் தந்திருக்கலாம்.


N S Sankaran
ஜூன் 06, 2025 15:10

முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் கலந்து கொண்டு பரிசளிப்பார்களாம், கூட்டத்தை கட்டுப்படுத்த தவறிய போலீஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்வாராம் முதலமைச்சர் ஆனால் வெற்றி அணியின் நிர்வாகி, முதலியோர் கைது செய்யப்படுவார்களாம். பொலிடிகல் ஆதாயத்துக்காக, கூட்டம் பயங்கரமாக வரும் என்று தெரிந்தே நிகழ்ச்சி நடத்தியது முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் தான். அவர்களை நீதிமன்றம் கைது செய்யுமா?


ponssasi
ஜூன் 06, 2025 14:41

இவர்கள் ஒன்றும் கால்பந்து உலக கோப்பையை வென்று வரவில்லை, இது ஒரு உள்ளூர் போட்டி இவர்கள் போட்டியிட்டது எல்லாம் மாமன், மச்சான், அண்ணண் தம்பி சகலை போன்றவர்களுடன்தான், இதற்க்கு ஏன் இவ்வளவு அலப்பறை. கிரிக்கெட் ஒன்றும் உலக நாடுகள் விளையாடும் விளையாட்டு அல்ல, உலகில் கிரிக்கெட் ஆடும் நாடுகள் 10 முதல் வரைதான் எல்லாம் பணம் படுத்தும் பாடு.


Ramesh Sargam
ஜூன் 06, 2025 13:38

மக்கள்தொகை அதிகம் உள்ள - இன்று உலகத்திலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு இந்தியா - நாடுகளில், குறிப்பாக இந்தியாவில் இதுபோன்ற விபரீத வெற்றி கொண்டாட்டங்களுக்கு அனுமதி கண்டிப்பாக மறுக்கப்படவேண்டும். மக்களும் திருந்தமாட்டார்கள். ஆட்சியில் உள்ளவர்களும் புத்தியுடன் செயல்படமாட்டார்கள். அவலம்.


SUBRAMANIAN P
ஜூன் 06, 2025 13:15

ஊருக்கு இளிச்சவாயன் பிள்ளையார் கோவில் ஆண்டி. சரி.. விசாரணை நடத்தி என்ன பண்ணுவீங்க.. அதிக பட்ச தண்டனை வாங்கி கொடுத்துடுவீங்களா..? கோலியையோ, சித்தவையோ , சிவகுமாரையோ கைது பண்ணமுடியுமா உங்களால? எல்லாம் மக்களை ஏமாற்றும் கண்துடைப்பு நாடகம்.. இந்த கூறுகெட்ட மக்களுக்கும் தெரியல.. எவனுக்கு ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கணும்னு. தத்தி முண்டங்கள்


venugopal s
ஜூன் 06, 2025 15:24

அப்படி பார்த்தால் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை எத்தனை தடவை கைது செய்வது? 2004 ஜூலை ஹாத்ரஸ் என்ற ஊரில் போலே பாபா என்ற சாமியார் நடத்திய கூட்டத்தில் நூறுக்கும் மேற்பட்ட மக்கள் கூட்ட நெரிசலில் இறந்தனர். கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் முப்பதுக்கும் மேற்பட்ட மக்கள் இறந்தனர். இதெல்லாம் மறந்து போய் விட்டதா?


R Hariharan
ஜூன் 06, 2025 13:01

நிச்சயம் தவறு செய்து விட்டார்கள். ர் சி பி இரண்டு வ்ருதுக்கு விளையாடக்கூடாது. மும்பை, கொல்கத்தா, சென்னை போண்டோர் வெற்றி பேட்ட பிரகள இப்படி கொண்டாட வில்லை. இதில் ர் சி பி நிர்வாகம் முழு பொறுப்பு ஏற்க வேண்டும். அரசுக்கும் கோர்ட் சரியான தண்டனை வழங்க வேண்டும்.


RAMESH
ஜூன் 06, 2025 12:54

சித்தராமையா வுக்கு இதே தேவை இல்லாத பணி.....இதை வைத்து அரசியல் செய்யலாம் என்று நினைத்தார்கள்..


Ramesh Sargam
ஜூன் 06, 2025 12:27

சிறிது காலத்திற்கு கிரிக்கெட் விளையாட்டு இந்தியாவில் தடை செய்யப்படவேண்டும்.


Kanns
ஜூன் 06, 2025 12:20

Police Advised Correctly Not to have Fanatic/ Crowds of Karnataka to have RoadShowEtc Celebrations BUT Cheap Karnataka Politicians incl KRS Chauvinists-etc Stoked Fanaticisms& Permissions for Such Violent Celebrations Just for Name Bengalore in RCB, Though Most TeamMemers Were Outsiders. SACK-ARREST-PUNISH ALL Politicians-Officials etc esp PartyHopperPowerMisusing FANATIC STOKER Siddaramaih. SHAME


புதிய வீடியோ