உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றினார் சந்திரபாபு நாயுடு: ஜூன் 9ல் முதல்வராக பொறுப்பேற்பு

ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றினார் சந்திரபாபு நாயுடு: ஜூன் 9ல் முதல்வராக பொறுப்பேற்பு

அமராவதி: ஆந்திரா சட்டசபை தேர்தலில் தெலுங்கு தேசம், பா.ஜ., ஜனசேனா கூட்டணி கட்சிகள் 162 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இதனால் இக்கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது. மேலும், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மட்டும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ளது. ஜூன் 9ல் அவர் முதல்வராக பதவியேற்க உள்ளார். அவருக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ujxsjodm&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஆந்திரா மாநிலத்தில் உள்ள 175 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த மே 13ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. பா.ஜ., மற்றும் பவன் கல்யாண் கட்சியுடன் இணைந்து தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு களத்தில் இறங்கினார்.ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டன. தேர்தலில் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி இன்று (ஜூன் 04) நடந்து வருகிறது. ஒரு கட்சி மெஜாரிட்டி உடன் ஆட்சி அமைக்க 88 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.

தற்போது நிலவரப்படி,

தெலுங்கு தேச கட்சி + பா.ஜ.,+ பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி- 162 தொகுதிகள்ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் - 13 தொகுதிகள்காங்கிரஸ்- 0

ஜூன் 9ல் பதவியேற்பு

இதில் தெலுங்கு தேசம் கட்சி மட்டும் 130 இடங்களுக்கு மேல் முன்னிலை வகிக்கின்றன. இதனையடுத்து அக்கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. ஜூன் 9ல் சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவியேற்க உள்ளார். அவருக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தனர்.பிரதமர் மோடிக்கு, சந்திரபாபு நாயுடு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார்.

2019ல்...!

கடந்த 2019ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 175 தொகுதிகளில் 151 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியைப் பிடித்தார். சந்திரபாபு நாயுடு கட்சியால் வெறும் 23 தொகுதிகளில் வெல்ல முடிந்தது. காங்கிரஸ் மற்றும் பா.ஜ.,வால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Sivaraman
ஜூன் 05, 2024 04:33

ஆந்திராவில் பாஜக வளர்த்துள்ளதால் நாயுடு பாஜகவை எதிர்க்க முனையமாட்டார். எதிர்த்தால் ஜெகன் கைகோக்க தயாராக உள்ளார்.


Ramesh Sargam
ஜூன் 04, 2024 12:14

இந்தமுறை சந்திரபாபு வெற்றிபெற்று ஆட்சி அமைத்தால், மீண்டும் தலைநகரை மாற்றுவேன் என்று பலகோடி மக்கள் வரிப்பணத்தை வீண் செலவுசெய்து மீண்டும் அமராவதியில் தலைநகரை மாற்ற நினைத்தால், அத்துடன் அவர் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வரும். ஆகையால் அதுபோன்ற வீண் செலவுகளை அவர் தவிர்க்கவேண்டும் - அரசியலில் நிலைத்து நிற்கவேண்டுமென்றால்.


Sai Shriram
ஜூன் 04, 2024 12:07

நாயுடு இப்போது king maker. நிதிஷ் இந்தியா கூட்டணி தலைவராக தொடர்ந்திருந்தால் இந்தியா கூட்டணி தலைவராக பிரதமராக வாய்ப்பு கிடைத்து இருக்கும். இப்போது மோடியின் லகான் நாயுடு நிதிஷ் கையில்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை