உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புதிய எம்.பி.,க்களின் பதிவு துவங்கியது

புதிய எம்.பி.,க்களின் பதிவு துவங்கியது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : லோக்சபா தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில், புதுமுக எம்.பி.,க்களும், மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.,க்களும் உள்ளனர். வழக்கமாக, தேர்தலில் வெற்றி பெறும் எம்.பி.,க்களின் விபரங்களை பதிவு செய்யும் நடைமுறை பழைய பார்லி., கட்டட வளாகத்தில் நடக்கும். அப்போது, காகிதத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.,க்களின் விபரங்கள் பதிவு செய்யப்படும்.தற்போது, புதிய பார்லி., கட்டடத்தில் நடக்கிறது. அதுமட்டுமின்றி, இந்த முறை புதிய மற்றும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.,க்களின் விபரங்கள் ஆன்லைனில் பதிவு செய்யப்பட உள்ளன. இதற்காக பிரத்யேக மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது. இந்த தகவல்களை பதிவு செய்ய, தனிக்குழுவையும் தேர்தல் கமிஷன் அமைத்துள்ளது.புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.பி.,க்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு, அவர்களுக்கு தங்குமிடம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி தரப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ravichandran S
ஜூன் 05, 2024 14:21

தொகுதியில் இருந்து தேர்ந்தெடுத்தப்பட்டு ஐந்து வருடம் டில்லியில் இருக்கட்டும். தொகுதிப்பக்கம் வந்து நல்லது செய்யாமல் இருந்தால அடதத முறையும் தேர்ந்தெடுப்போம்


மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ