வாசகர்கள் கருத்துகள் ( 4 )
உங்கள் கருத்துக்களை நாங்கள் நல்ல நகைச்சுவையாகவே பார்க்கிறோம். உங்கள் மீது மக்கள் நம்பிக்கை இழந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. பல உதாரணங்களை குறிப்பிட முடியும். திரு பொன்முடி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தண்டனை உறுதி செய்து பதவி பறிப்பு செய்தது. உங்கள் உச்சநீதிமன்றம் எந்த விதமான விசாரணையும் இல்லாமல் அதற்கு ஏன் தடை விதித்தது? மற்ற அமைச்சர்களின் வழக்குகளை கீழ் நீதிமன்றம் விடுதலை செய்தது தவறு என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. விசாரணை ஆரம்பித்த உடன் உங்கள் உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு தடை விதித்தது. செந்தில் பாலாஜி அவர்கள் ஜாமீன் கிடைக்காது என்று அறிந்து அமைச்சர் பதவி ராஜினாமா செய்தார். உங்கள் உச்சநீதிமன்றம் உடனே ஜாமீன் வழங்கியது. ஜாமீன் பெற அமைச்சர் பதவி ராஜினாமா செய்தார். ஜாமீன் கிடைத்தது உடனே அமைச்சர் பதவி ஏற்றார் . இவர் செல்வாக்கு மிக்க அமைச்சர். தமிழ் நாட்டில் இவருக்கு எதிராக யார் சாட்சி சொல்ல முடியும்? இந்த சிந்தனை கூட இல்லாமல்தான் உங்கள் உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. திரு உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மம் ஒழிக்க வேண்டும் என்று பேசிய வீடியோ ஆதாரம் தந்தும் அதை பார்த்து விட்டு வழக்கை மாதக்கணக்கில் தள்ளி வைக்கிறது உங்கள் உச்ச நீதிமன்றம். மக்கள் கருத்து என்பதை மேற்படி வழக்குகளில் நீங்கள் கண்டு கொள்ளவே இல்லை. இது போல் தத்துவம் எல்லாம் பேச வேண்டாம்.
முதலில் உண்டான அரசியல் அமைப்பு கொலீஜியும் முறையை உண்டாக்கியதா .சட்டப்படி அது செல்லுமா
பொதுமக்கள் நலன் கருதி நீதித்துறை வேலை செய்கிறதா? நியாயமாக தீர்ப்புகள் உள்ளதா? காலம் தாழ்த்தாத தீர்ப்புகள் உள்ளனவா? பாகுபாடு அற்ற தீர்ப்புகளாக இருக்கிறதா? மனசாட்சியை கேட்கவும். கடவுளை கேட்டு தீர்ப்பு என்ற கதைகள் எதற்கு?
ரிடையர்மெண்ட்டுக்கு இன்னும்.கொஞ்ச நாள் இருக்கு போலிருக்கு.