ரூ.2.20 லட்சம் கஞ்சா பறிமுதல்
தங்கவயல்: தங்கவயல் -- பேத்தமங்களா சாலையில் உள்ள படமாக்கனஹள்ளியில் கஞ்சா விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டார்.கோலார் -- பேத்தமங்களா சாலையின் வனப்பகுதியில் உள்ளது படமாக்கனஹள்ளி கிராமம். இங்கு நாகராஜ், 42, என்பவர், கஞ்சா விற்பனை செய்து வருவதாக தங்கவயல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதன் பேரில் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர். நாகராஜ் வசம் இருந்த 2 கிலோ 720 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 2.20 லட்சம் ரூபாய். அவரை, போலீசார் கைது செய்தனர்.