உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,362 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்

தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,362 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மத்திய பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,363 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது '' என மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் கூறியதாவது: காங்., ஆட்சி காலத்தை விட, தமிழக ரயில்வே திட்டங்களுக்கு 7 மடங்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,362 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 1,302 கி.மீ., தொலைவிற்கு புதிய ரயில் பாதைகள் அமைக்கப்பட்டு வருகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=wrxsx8u7&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ரூ.33,467 கோடி செலவில் 2,587 தொலைவுக்கு புதிய ரயில்வே திட்டங்கள் நடக்கின்றன. 10 ஆண்டுகளில் 687 பாலங்கள், ரயில்வே சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டு உள்ளது.1,302 தொலைவிற்கு தண்டவாளங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.சென்னை கடற்கரை - எழும்பூர் 4வது வழித்தட திட்டத்திற்கு நிலம் கையகபடுத்துவதில் தமிழக அரசு தாமதம் செய்கிறது . மாநிலத்தில் பல்வேறு ரயில் திட்டங்களை நிறைவேற்ற 2 ஆயிரம் ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. தற்போது வரை 879 ஏக்கர் நிலம் மட்டுமே கையகபடுத்தப்பட்டு உள்ளது.சென்னை கடற்கரை, எழும்பூர், செங்கல்பட்டு, கிண்டி உள்ளிட்ட 77 ரயில் நிலையங்கள் ‛ அம்ரித்' திட்டத்தின் அதிநவீன வசதிகளுடன் நவீனமாக மாற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

Saai Sundharamurthy AVK
ஜூலை 25, 2024 10:03

இவ்வளவு கோடிகள் ஒதுக்கப்பட்டும் தமிழக திமுக அரசு இன்னும் திட்டத்துக்கான நிலங்களை கையகப்படுத்தி மத்திய அரசுக்கு தரவில்லை. இதனால் திட்டங்கள் நிறைவேற்றுவதில் காலவிரயம் ஏற்படுகிறது. இந்த திமுக அரசு எப்போது நிலங்களை கையகப்படுத்தி தருவார்கள் என்று மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.


தி.ச.திருமலை முருகன்
ஜூலை 25, 2024 05:22

தமிழ்நாட்டு இரயில்வேக்கு இந்த ₹.6000/- கோடி கடந்த 10 ஆண்டுகளுக்கு ஒதுக்கப்பட்டது. இந்த ஆண்டு?


Indian
ஜூலை 24, 2024 21:38

எல்லாம் பொய் .


GUNA SEKARAN
ஜூலை 24, 2024 21:23

252000 கோடி ரயில்வே பட்ஜெட்டில் இச்ப்பி ல் உற்பத்தி செய்யப்படும் வந்தே பாரத் உட்பட அத்துணை பெட்டிகளும் சேர்ந்ததே.


Bhaskaran
ஜூலை 24, 2024 21:16

நான் சிறுவனாக இருந்த போது தூத்துக்குடி மதுரை புதிய ரயில் பாதை விளாத்திகுளம் அருப்புக்கோட்டை வழியாக போடுவதற்கு சர்வே செய்தார்கள் 50ஆண்டுகள் ஆகியும்.திட்டம் தொடங்கி நட்டாற்றில் கிடக்கிறது.எம்பி எம் எல் ஏக்கள் என்னதான் செய்கின்றனர்


S. Narayanan
ஜூலை 24, 2024 21:12

கஞ்சா சாராயம் விக்கிறவனுக்கு எதுக்கு கொடுக்கணும்.


T.sthivinayagam
ஜூலை 24, 2024 21:01

இறைவனின் பிறப்பிடமான தமிழ்நாட்டை வஞ்சிக்கும் அரசை கடவுள் மன்னிக்க மாட்டார்


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 24, 2024 21:57

இறைவன் தமிழ்நாட்டுல எந்த ஊருல பொறந்தார் ? எந்த வகுப்புல பொறந்தார் ?


Murugesan
ஜூலை 24, 2024 22:56

குடிகாரர்களின் பிறப்பிடமாக்கிய தெலுங்குக்கு திராவிட பித்தலாட்ட அயோக்கியர்கள் இருக்கிற வரை தமிழகம் உருப்படாது குடிகார உபி,மக்களுக்கான பணத்த திருடி தின்கிற அயோக்கியனுங்க


Anu Sekhar
ஜூலை 24, 2024 20:48

இந்த லஞ்ச பெருச்சாளியிடம் ஒரு பைசா கொடுக்காதீங்க. நீங்களே எல்லா ப்ராஜெக்ட் செய்ங்க.


Vijay D Ratnam
ஜூலை 24, 2024 20:33

பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் அரியலூரில் இருந்து கீழப்பழூர், திருவையாறு வழியாக தஞ்சாவூர் ஜங்க்ஷன் வரை 40 கிமீ தூரம் ரயில் பாதை அமைக்க திட்டமிட்டு அதற்கான முயற்சி எடுக்கும் போது இந்தியா சுதந்திரம் அடைந்தது. அரியலூருக்கும் தஞ்சாவூருக்கும் ரயில் விடப்போறாங்களாம் என்று சுதந்திரம் அடைந்த புதிதில் 1947 ஆம் ஆண்டு வாக்கில் எங்க முப்பாட்டன் எங்க தாத்தாவிடம் சொன்னாராம். 1960 ஆம் ஆண்டு வாக்கில் எங்க தாத்தா எங்கப்பாவிடம் சொன்னாராம். 1983 ஆம் ஆண்டு வாக்கில் எங்கப்பா என்னிடம் சொன்னாரு. 2008 ஆம் ஆண்டு வாக்கில் நான் என் மகனிடம் சொல்லிவிட்டேன். இன்னும் பத்து ஆண்டுகள் கழித்து என் மகன் உறுதியாக என் பேரனிடம் சொல்வான் என்று அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. வார்த்தை மாற மாட்டார்கள் எங்கூர் அரசியல்வியாதிகள் 77 வருடங்களாக வார்டு கவுன்சிலர் முதல் பிரதமர் வரை சொல்லும் ஒரே வார்த்தை உடுவோம் ரயிலு அறியலூருக்கும் தஞ்சாவூருக்கும் என்று அசராம உடுவாய்ங்க. டெல்ட்டா மக்களான நாங்க அந்த உதாரை நம்பி ஜோரா கைதட்டுவோம். ஒட்டு போடுவோம். பிகாஸ் பேசிக்கா பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்து அடிமேல் அடி வாங்கி சூடு சொரணை கம்மியாயிடுச்சி.


தாமரை மலர்கிறது
ஜூலை 24, 2024 20:29

எவ்வளவு கொடுத்தாலும், ஒண்ணுமே கொடுக்கல என்றுதான் திமுக காரனுங்க புலம்ப போறானுங்க. இவனுங்களுக்கு ஒன்னும் கொடுக்காம விடுறது தான் நல்லது.


Indian
ஜூலை 25, 2024 00:51

நீ அப்படியே உன் மாநிலமான பிஹாருக்கு ஓடி போயிடு .


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி