உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மோசமான நிர்வாகத்தால் சபரிமலை பக்தர்கள் அவதி: பிரதமர் மோடி வேதனை

மோசமான நிர்வாகத்தால் சபரிமலை பக்தர்கள் அவதி: பிரதமர் மோடி வேதனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திரிச்சூர்: ‛‛ சபரிமலையில் நடக்கும் மோசமான நிர்வாகத்தால் , பக்தர்கள் அவதி அடைந்துள்ளனர். இதுவே மாநில அரசின் இயலாமைக்கு சாட்சி'' என திரிச்சூரில் நடந்த பா.ஜ., மகளிர் அணி மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார்.லட்சத்தீவில் இருந்து சிறப்பு விமானம் மூலம் கேரளாவின் நெடும்பசேரிக்கு வந்த பிரதமர் மோடிக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிறகு அவர் அங்கிருந்து காரில் பேரணியாக சென்றார். வழிநெடுகிலும் மோடியை, பா.ஜ.,வினர் மலர்தூவி வரவேற்றனர்.பா.ஜ.,வின் மகளிர் அணி மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது: என்னை வாழ்த்த ஏராளமான பெண்கள் கூடி உள்ளது பெருமை அளிக்கிறது. சுதந்திரத்திற்கு பிறகு, பெண்கள் சக்தியை, இடதுசாரி மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசு பலவீனமாக கருதியது. இதனால், அக்கட்சிகள், லோக்சபாவிலும், சட்டசபைகளிலும் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு தடையை ஏற்படுத்தின.பெண்களின் வாழ்க்கையை எளிதாக்க கடந்த 10 ஆண்டுகளில் நாங்கள் ஏராளமான திட்டங்களை முன்னெடுத்தோம். உஜ்வாலா திட்டத்தின் கீழ் 10 கோடி காஸ் இணைப்பு வழங்கப்பட்டது. 11 கோடி குடும்பங்களுக்கு குழாய் வழியாக குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது.நாட்டில், இன்று பெரிய சாலைகள், நவீன விமான நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. ஆனால், கேரளாவில், மோடி எதிர்ப்பை மட்டுமே கொண்டுள்ள ‛இண்டியா' கூட்டணி அரசால் எந்த பணிகளும் நடக்கவில்லை. கொள்ளையடிப்பதற்கு கேரளாவில் முழு சுதந்திரம் தேவை என அக்கட்சிகள் நினைக்கின்றன. ஏழை மக்களுக்காகவும், உள்கட்டமைப்பு திட்டங்களுக்காகவும் மத்திய அரசு அளிக்கும் நிதி குறித்து கேள்வி கேட்பதை அவர்கள் விரும்புவதில்லை. அவர்கள் மத்திய அரசின் திட்டங்களை மறைக்க முயற்சி செய்கின்றனர்.‛இண்டியா' கூட்டணிக்கு ஒரு விஷயம் தான் தெரியும். அக்கூட்டணியினர் நமது நம்பிக்கையை காயப்படுத்துகின்றனர். நமது கோயில்கள், பண்டிகைகளை கொள்ளையடிப்பதற்கான மையமாக மாற்றியுள்ளனர். இது மாதிரியான அரசியல், ‛திரிச்சூர் பூரம்' விழாவில் நடப்பது வேதனை அளிக்கிறது. சபரிமலையில் நடக்கும் மோசமான நிர்வாகத்தால் பக்தர்கள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். இதுவே மாநில அரசின் இயலாமைக்கு சான்றாகும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

g.s,rajan
ஜன 04, 2024 20:56

Is it ....???.


Mani . V
ஜன 04, 2024 04:41

அப்புடியா?


hari
ஜன 04, 2024 07:54

ஏன் சிங்கப்பூர்ல இன்னும் விடியலையா


Ramesh Sargam
ஜன 04, 2024 00:17

உண்மையில் கேரளா அரசின் இயலாமைதான் சபரிமலையில் பக்தர்களுக்கு மிகுந்த சிரமத்தை கொடுக்கிறது. நான் எப்பொழுதும் கூறுவதுபோல், கேரளா அரசு மற்றும் சபரிமலை கோவில் நிர்வாகிகள், திருப்பதி சென்று, அங்கு எப்படி அங்குள்ள அதிகாரிகள், அங்கு ஆண்டுமுழுவதும் வரும் மிகப்பெரும் கூட்டத்தை சமாளிக்கிறார்கள் என்று training எடுத்துக்கொள்ளவேண்டும்.


Mohan das GANDHI
ஜன 03, 2024 22:49

கேரளா ஒரு காலத்தில் GOD OWN COUNTRY என்றிருந்தது அது இன்று கமியூனிஸ்ட்டு திருடர்களால் நாசமாகவும் நரகமாகவும் ஆக்கிவிட்டார் அல்லேலூயா பிரனாயி விஜயன் 45 கிலோ தங்க கட்டி கடத்தல் கோமாளி கேரளத்தை ஆள்வதால் நாசமாக உள்ளதென்பதே எடுத்துக்காட்டு. கேரளத்தில் வைக்கோல் முதல் பத்மநாப கோவில் வரை இந்த கமியூனிஸ்ட்டு திருடர்கள் திருடுகிறார்கள் இந்துக்களை மதிப்பதே இல்லை கேரளா முதலமைச்சர் என்பதே உண்மை. இன்று கேரளத்தில் தான் அதிக மாபியா, மக்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள் அனைத்து விலைவாசிகளும் ஏற்றம் காரணம் கமியூனிஸ்ட்டுகளால் என்பதே உண்மை இனி வரும் MP 2024 பாராளுமன்ற தேர்தலில் பாஜக பாரத பிரதமர் மோடிஜி யை ஆதரித்து வாக்களித்து பாஜகவை வெல்ல வைப்பது கேரளா மக்களின் கடமை பின் பாருங்கள் கேரளாவின் முன்னேற்றத்தை JAI SRI RAM.


venugopal s
ஜன 03, 2024 21:56

ஏன், நீங்கள் தான் அயோத்தியில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை எடுத்து வாரி வழங்கி வசதிகள் செய்து கொடுத்தது போல் சபரிமலையிலும் செய்யுங்களேன் யார் வேண்டாம் என்கிறார்கள்? வட இந்தியா என்றால் இனிக்கும் தென் இந்தியா என்றால் கசக்குமே உங்களுக்கு தான்!


Sivak
ஜன 03, 2024 23:39

அப்புறம் என்னத்துக்கு கோயில் அரசாங்கம் கிட்ட இருக்கு?


panneer selvam
ஜன 04, 2024 00:26

Do not get agitated with Modi statement . Central can not interfere with state subject since Travancore Devaswom Board is a department of Kerela government . Please check with devotees about suffering at Sabarimala . Before write something , please do investigation of the subject


hari
ஜன 04, 2024 07:55

வேணு ரொம்ப கரிசனம் காட்டி கம்பி கட் ர வேலை எதுக்கு....200 ரூபா கு டுமீல் நாடு லிமிட் போதும் உனக்கு


அப்புசாமி
ஜன 03, 2024 19:16

அயோத்யா ராம் மங்திர் கட்டறதுக்கு முன்னாடியே உங்க ஆளுங்க வசூல் பண்ணி ஆட்டையப்.போடறாங்க தெரியுமா?


அப்புசாமி
ஜன 03, 2024 19:14

சபரிமலை, திருப்பதி இங்கேயெல்லாம் கள நிலவரம் தெரியாமல் அரசியலுக்காக பேசுகிறார். சபரிமலையில் சேர்வது சீசன் கூட்டம். ஒரு லட்சம் ரெண்டு லட்சம் பேர் வந்த இடத்தில் 10 லட்சம் பேராயிட்டாங்க. ஆனா பதினெட்டாம்.படி நுழைவு அப்பிடியேதான் இருக்கு. ஒண்ணு அதை எட்டுவழிப் படியா மாத்தறேன்னு சொல்லுங்க. இல்லே பக்தர்களை உள்ளூர் ஐயப்பன் கோவில்களுக்கு போகச் சொல்லுங்க. அப்படியே சபரிமலைக்கு கோட்டயம் வரை ஐநூறு ஸ்பெசல் ரயில் விடுங்க.


Bye Pass
ஜன 03, 2024 21:04

ஹஜ் யாத்திரையில் பல லட்சம் மக்கள் கூடுகின்றனர் .சவுதி அரசாங்கம் பதர்களிடம் பணம் வசூலித்து துப்புரவாக கழிப்பிடம் குடிநீர் தாங்கும் இடம் மற்றும் மருத்துவ வசதி செய்து தருகிறது .குறை சொல்லும் முறையில் இல்லை .


Gsanky
ஜன 03, 2024 21:34

பல கோடி பேர் கூடின கும்பமேளாவுக்கு எப்படி முன் ஏற்பாடு பண்ணினாங்கன்னு தெரியுமா? யாருக்கு கள நிலவரம் தெரியாது?


panneer selvam
ஜன 04, 2024 00:45

Please understand the overcrowding is at Sannithanam ( sanctorum ) at Temple not at the road . Crowd management is very poor and it confirms the inability of Devaswom board . Already Temple area is overflowing with devotes. As per your advice , If Central runs another 500 special trains to Sabarimala , then Temple will be burst out . The modification of existing 18 steps are not accep to Devaswom board quoting tradition . Have you seen Pambai river , it is more dirty and its banks are littered with left over clothes. Central can not interfere with State government department Travancore Devaswom Board . Dravidian parties are running out of ideas of crowd management .


mindum vasantham
ஜன 03, 2024 18:20

Inge Theni Cumbum ,sabaramalai sellum paathayil traffic police theevira vasool bulk àka oruvuar sema vasool


aaruthirumalai
ஜன 03, 2024 18:15

உண்மை. செய்திகளை பார்த்தால் அப்படிதான் தெரிகிறது.


g.s,rajan
ஜன 03, 2024 18:08

It is a Pity.....


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை