உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை

மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: மேற்குவங்கம் மாநிலம் சந்தேஷ்காலியில் திரிணமுல் காங்கிரஸ் நிர்வாகி மீது எழுந்துள்ள பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. பல இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அம்மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என ஜனாதிபதியிடம் தேசிய பட்டியலினத்தவர்கள் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள சந்தேஷ்காலி பகுதியைச் சேர்ந்த ஆளுங்கட்சி நிர்வாகி ஷாஜகான் ஷேக் மற்றும் அவரின் உதவியாளர்கள் மீது ஊழல் மற்றும் பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் எழுந்தன. ஷாஜகானை கைது செய்ய வலியுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சியினர் மற்றும் பெண்கள் அமைப்பினர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.இதையடுத்து ஏற்பட்ட பதற்றத்தால், சந்தேஷ்காலி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் விதமாக, சந்தேஷ்காலி உட்பட ஏழு கிராம பஞ்சாயத்துகளில், வரும் 19ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தக்கோரி ஜனாதிபதியிடம் தேசிய பட்டியலினத்தவர்கள் ஆணையத் தலைவர் அருண் ஹல்தர் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

Sridhar
பிப் 17, 2024 12:39

விவசாயின்னு நாலு ரௌடி ஊர்வலமா தலைநகரை நோக்கி வந்தாலே இந்த அரசு பயந்து நல்ல சீர்திருத்த சட்டங்களையே வாபஸ் வாங்கிடுது, ஏன், ஊழல் செஞ்சு மாட்டிக்கிட்ட ஒரு முதலமைச்சர் கோர்ட் கூப்பிட்டாலே வரமாட்டேங்கறாரு, அதுக்கே இந்த அரசு சும்மா வேடிக்கை பாத்துக்கிட்டுதான் இருக்கு. கோர்ட்டினால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட ஒருவன் பெயிலில் இருக்கும்போதே நாடெங்கும் யாத்திரை போவது மட்டுமில்லாமல், போராட்டங்களிலும் கலந்துகொள்கிறான். அதைக்கூட கண்டுக்காமல் இந்த அரசு வேடிக்கைதான் பார்க்கிறது. இந்த அரசா ஒரு மாநில அரசை டிஸ்மிஸ் செய்யப்போகிறது?ஹ்ம்ம்..


Dharmavaan
பிப் 17, 2024 04:27

மோடி துணிய வேண்டும் .கொலீஜியும் முறை நீக்கப்பட வேண்டும் இல்லையேல் நாட்டில் நீதி இருக்காது


(null)
பிப் 16, 2024 21:53

Most of the Affected women are from SC, don�t expect condemn by Thiruma, because it was done by Arabic slaves


venugopal s
பிப் 16, 2024 20:37

ஏன், உச்ச நீதிமன்றத்திடம் வாங்கிய குட்டு மத்திய பாஜக அரசுக்கு போதவில்லையா? தைரியம் இருந்தால் செய்து தான் பார்க்கட்டுமே!


ராஜா
பிப் 16, 2024 21:04

நியாயமா பாத்தா திமுக, காங்கிரஸ் தான் வாங்கிருக்கு. கலைத்தால் என்ன செய்வாய்? காங்கிரஸ் ஆட்சின்னு நினைத்தாயோ? இது மோடி சர்க்கார்.


sridhar
பிப் 16, 2024 21:19

அட வெட்கம்கெட்ட உ பி. அங்கே பெண்கள் படும் கஷ்டம் உனக்கு வேடிக்கையாக இருக்கா.


krishna
பிப் 16, 2024 21:46

VENUGOPAL NEENGAL MANIDHA JENMAMAA.KEVALAM.IPPADI UNGAL VEETU PENGALUKKU NADANDHU IRUNDHAAL EPPADI IRUKKUM.OOH 200 ROOVAA COOLIKKU EDHAI VENA VIRKKUM PAKKAM 21 DESIGNAA NEENGAL.SUPER.


RAMAKRISHNAN NATESAN
பிப் 17, 2024 08:55

திமுக அடிமைகள் மாமேதைகளாக உள்ளனர் ...... ஆட்சிக்கலைப்பு என்பது கவர்னரின் பரிந்துரையில் ஜனாதிபதி (தேவைப்பட்டால் உள்துறையின் கலந்தாலோசனையுடன்) எடுக்கும் முடிவு ..... இதில் நீதிமன்ற முறையீட்டுக்கு இடமிருக்காது ..... இருந்தாலும் ஜனாதிபதியின் முடிவில் தலையிடமாட்டோம் என்று தான் நீதிமன்றம் கூறும் .....


Barakat Ali
பிப் 17, 2024 11:53

....... ஆட்சி போனால் கோர்ட் படிக்கட்டுகளில் ஏறும் எண்ணம் உள்ளதா சர்வாதிகாரிக்கு ???? வேட்டி தடுக்கும் ......


Sudarsanr
பிப் 16, 2024 20:34

மக்களே கவனிக்கவும் இதை பரிந்துரை செய்தது ஆளுநர் இல்லை.


rajen.tnl
பிப் 16, 2024 20:11

தேசிய பட்டியலினத்தவர்கள் ஆணையத் தலைவர் அருண் ஹல்தர் என்ன ஆக போறாரோ ...


rajen.tnl
பிப் 16, 2024 20:08

லோகத்தில் ஒரு அசுரகுல பெண்மணி உண்டெங்கில் அது மேற்கு வங்க பெண்மணியாக்கும்


Rangarajan Cv
பிப் 16, 2024 20:34

Right description


AMSA
பிப் 16, 2024 20:05

இந்தியாவில் இந்த பெண்மணி ஆட்சியை கலைத்தால், கலைத்தவருக்கு கோடி புண்ணியம்


Rajagopal
பிப் 16, 2024 19:44

எப்போதும் வன்முறை, கலவரம், ஒத்துழைப்பின்மை, சட்டங்களை மதிக்காமல் மிரட்டுவது, ஒழுக்கமின்மை, முன்னேற்றத்தில் ஈடுபாடின்மை, உழைக்காமல் ஊழலில் பணம் சேர்த்து உல்லாசமாக வாழ்வது என்றுதான் கலாச்சாரம் இருக்கிறது. அடிபட்ட காய், கால்கள்போல, நாட்டை வேகமாக முன்னேற விடாது. இந்த மக்களுக்கு சட்டம், ஒழுங்கை மதிக்க கற்றுக்கொள்ளும் வரை, ஜனநாயக முறைகள் ஒத்து வராது.


ராஜா
பிப் 16, 2024 19:27

ஜனாதிபதி ஆட்சியை அமல் செய்து விட்டு அங்கிருக்கும் கலவரக்கார கள்ள குடியேறிகளை கணக்கெடுத்து அவர்கள் நாட்டுக்கு பத்திரமாக அனுப்பிவிட்டு ஜனநாய முறைப்படி தேர்தல் நடத்த வேண்டும்.


rajen.tnl
பிப் 16, 2024 20:08

உண்மை...


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை