உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / செலக்டிவ் அம்னீசியாவா...: சசி தரூருக்கு கம்யூ., பதிலடி

செலக்டிவ் அம்னீசியாவா...: சசி தரூருக்கு கம்யூ., பதிலடி

புதுடில்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பின், 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற பெயரில், பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதலை துவக்கியது. இந்தியாவின் தாக்குதலை கண்டித்த துருக்கி, பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்தது. அதையடுத்து, அந்நாட்டுடன் அனைத்து வித உறவுகளையும் இந்தியா துண்டித்து வருகிறது.இதற்கிடையே, கேரள மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி., சசி தரூர், கேரளா மாநிலத்தை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறித்து கூறும் போது, 'துருக்கி நாட்டில், 2023ல் ஏற்பட்ட நிலச்சரிவுக்கு கேரளா மாநில அரசு, 10 கோடி ரூபாயை கொடுத்தது. அந்த பரிவு தவறாகி போனதை இரண்டாண்டுகளுக்கு பின் கம்யூனிஸ்ட் கட்சி அறிந்திருக்கும். ஏனெனில், கேரளாவின் வயநாடு பகுதியில் நடந்த நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த தொகை அதிக உதவி செய்திருக்கும்' என்றார்.இதற்கு பதிலடியாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த, ராஜ்யசபா எம்.பி., ஜான் பிரிட்டாஸ் கூறும் போது, ''ஆப்பரேஷன் தோஸ்த் என்ற பெயரில், துருக்கி நாட்டுக்கு மத்திய அரசு பல கோடி ரூபாயை கொடுத்த போது, சசி தரூர் எங்கே சென்றிருந்தார்... அப்போது, மவுனமாக இருந்தது ஏன்... செலக்டிவ் அம்னீசியாவா,'' என கேட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Bhaskaran
மே 27, 2025 12:07

உண்டியல் குலுக்கி காம்ரேடுகளை இந்தியாவிலிருந்து ஒழிக்க வேண்டும்


ஆரூர் ரங்
மே 27, 2025 11:24

துருக்கிக்கு வாரிக் கொடுத்தா துருக்க வாக்கு வங்கி நிச்சயம். வயநாடு கூட கிடைக்கலாம்.


Keshavan.J
மே 27, 2025 10:47

பூகம்பத்தால் பாதிக்க பட்டபோது இந்தியா உதவி செய்தது. ஆனால் கேரளா கம்யூனிஸ்ட் government 10 கோடி ரூபாய் ஆபரேஷன் சிண்டூர் நடக்கும் பொது கொடுத்தது. இடத்தி தான் ஷாஷி தரூர் சுட்டி காட்டியுள்ளார்.


Ramesh Sargam
மே 27, 2025 11:31

சரியான கருத்து. வாழ்த்துக்கள்.


Sundar R
மே 27, 2025 09:42

சசி தரூர் அவர்களும், ஜான் ப்ரிட்டாஸ் அவர்களும் தோள் மேலே கைகளைப் போட்டுக்கொண்டு நன்றி கெட்ட துருக்கி நாட்டை வாய்க்கு வந்த வார்த்தைகளைச் சொல்லி திட்டுவதை விட்டு விட்டு......


venugopal s
மே 27, 2025 09:04

பாவம், சசி தரூரும் பதவி இல்லாமல் எத்தனை வருடங்கள் தான் இருப்பார்? அவருக்கும் பசிக்கும் அல்லவா?


Thiru, Coimbatore
மே 27, 2025 08:57

கம்யூனிஸ்ட் என்பது இங்கே காலாவதியாகி போன தேவையேயில்லாத ஒன்று.. இன்னும் சில வருடங்களில் கேரளாவிலிருந்தும் வெளியேற்றப்படும் இந்த காகிதப்புலிகள்


xyzabc
மே 27, 2025 08:42

இந்த கம்யூனிஸ்ட்களுக்கு மண்டையில் மூளையே இல்லையா?


RAJ
மே 27, 2025 08:23

Communist is a cancer to india.


V RAMASWAMY
மே 27, 2025 08:22

நம் நாடு செய்த உதவியை மறந்து நமது எதிரிக்கு ஆதரவு அளிக்கும் துருக்கியை மன்னிப்பதா? இதனை மறந்து போன கம்யூனிஸ்டுகளுக்கு தான் செலெக்ட்டிவ் அம்னீஷியா. அவர்கள் இந்நாட்டுக்கு ஆதரவாளர்களா, துருக்கிக்கா?


கம்பி கட்டும் கம்மிகள்
மே 27, 2025 08:15

அயலகத் துறை நடுவண் அரசின் அதிகாரத்தில் இருக்கும். அதெப்படி ஒரு மாநிலம் அடுத்த நாட்டிற்கு செய்யலாம்? தங்க கடத்தல் துரிக்கி மூலம் வருமா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை