உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இட்லிக்காக வரிந்துகட்டிய சசி தரூர்: சமூக வலைதளத்தில் ஆவி பறந்த விவாதம்

இட்லிக்காக வரிந்துகட்டிய சசி தரூர்: சமூக வலைதளத்தில் ஆவி பறந்த விவாதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''இட்லி ஒரு உன்னதமான படைப்பு. பீத்தோவனின் சிம்பொனி, தாகூரின் கவிதை, ஹூசைனின் ஓவியம், டெண்டுல்கரின் செஞ்சுரிக்கு இணையானது. அதை வெறுப்பவர்களை நினைத்து வருந்துகிறேன்,'' என, காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் தெரிவித்துள்ளார். தென்னிந்திய உணவான இட்லி - தோசை, இவற்றில் எது சிறந்தது என்ற விவாதம் சமூக வலைதளத்தில் சூடு பறக்க நடந்தது. அதில், ஒருவர் 'தோசை பற்றி கூற வார்த்தைகளே இல்லை; மதிக்கிறேன். ஆனால், நன்கு வேகவைக்கப்பட்ட இட்லியை கண்டு வருந்துகிறேன்' என கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்து, காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் வெளியிட்ட பதிவு: குறை காண்பவர்களால் நிச்சயம் நல்லதை அனுபவிக்கவே முடியாது. உண்மையிலேயே இட்லி ஒரு சிறந்த உணவு. வெண் மேகம் போன்றது. மனித நாகரிகத்தின் பரிபூரணத் தன்மையை வெளிப்படுத்தும் ஒரு முழுமையான கனவு. அது ஒரு உன்னதமான படைப்பு. அரிசியும் உளுந்தும் கலந்த லேசான உணவு. நாவில் பட்டதும் உருகிவிடும் அளவுக்கு பஞ்சு போல மென்மையாக ஆவியில் வேக வைக்கப்பட்டது. பீத்தோவனின் சிம்பொனி, தாகூரின் கவிதை, ஹூசைனின் ஓவியம், டெண்டுல்கரின் செஞ்சுரிக்கு இணையானது. இப்படிப்பட்ட உணவைக் குறை கூறுவோர் ஆன்மா இல்லாதவர்கள். தென்னிந்திய கலாசாரத்தின் மிக அற்புதமான சாதனைக்கு ஒரு பாராட்டு கூட தெரிவிக்க முடியாதவர்களை நினைத்து பரிதாபப்படுகிறேன். இவ்வாறு அதில் குறிப்பிட்டார். இந்த பதிவுடன் ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி ஆவி பறக்கும் இட்லியை சமையல் அறையில் இருந்தபடி சமைப்பது போன்ற படத்தையும் அவர் வெளியிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

தத்வமசி
செப் 29, 2025 12:39

இட்லியா தோசையா என்றால் எனது ஓட்டு இட்லிக்கே. இரண்டிலும் ருசி இருந்தாலும், இட்லியில் எண்ணெய் கிடையாது. குழந்தை, வயோதிகர், இளைஞர் என்று யாரும் இதை எப்போதும் சாப்பிடலாம். எந்த பருவகாலத்திலும் சாப்பிடலாம். ஆனால் தோசை உடல் நலம் குன்றியவர்களுக்கு சரியல்ல. இதில் உள்ள எண்ணை சில நேரங்களில் நெஞ்சில் எரிச்சலை உண்டாக்கும். அது கூட கிடையாது இட்லியில். ஆவியில் நன்றாக வேக வைத்ததால் அதன் சத்து மிகவும் அதிகாகி உடல் நலத்தை பேணிக் காக்கிறது. உடலுக்கு ஊட்டச் சத்து நிறைந்தது. மேலும் இட்லி சாப்பிட்டால் வயிறு நன்றாக நிறையும். பத்து இட்லி சாப்பிட்டாலும் சாப்பாட்டு ராமன்களுக்கும் போதும். ஆனால் தோசை... அது ஒரு மாயை. எத்தனை சாப்பிட்டாலும் வயிறு நிறையாது.


suresh Sridharan
செப் 29, 2025 11:22

சசிதரு mp சொன்னதில் எந்த குறையும் இல்லை ஏனென்றால் இட்லி முதியவர் சிறியவர் சிறு குழந்தை யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம் தோசை அப்படி அல்ல வயதானவர்கள் குழந்தைகள் அதை சாப்பிட முடியாது அதையும் தெரிந்து கொள்ளுங்கள் இது சண்டையும் வேண்டாம்


sivakumar Thappali Krishnamoorthy
செப் 29, 2025 11:17

இட்லி, விதம் விதமா இருக்கு, பலவிதமான தோசை... தனி தனியான ருசி ...இரண்டையும் விட முடியாதுப்பா...ரெண்டுமே சாப்பிட சொர்கம் ....


R.MURALIKRISHNAN
செப் 29, 2025 07:13

ஏலே, டிரம்புக்கு கேக்காம சண்டை போடுல, அவிக ஊர்ல இதுக்கு வரி போட்டிர போறான்.


சண்முகம்
செப் 29, 2025 01:39

அண்ணன் தம்பிக்குள்ளே என்னப்பா சண்டை? யாரு அண்ணன்னா?


Moorthy
செப் 29, 2025 00:45

இட்லி தோசை இரண்டுமே இரு கண்கள் போன்றவை இதில் எது உயர்ந்தது என்ற கேள்விக்கே இடமில்லை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை