உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பீஹாரிகள் தாக்கப்படும் போது அலட்சியம் காட்டுவதா? ராகுல் மீது பிரசாந்த் கிஷோர் பாய்ச்சல்

பீஹாரிகள் தாக்கப்படும் போது அலட்சியம் காட்டுவதா? ராகுல் மீது பிரசாந்த் கிஷோர் பாய்ச்சல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: 'டில்லியில் பீஹார் மக்களை கேலி செய்கிறார். பல்வேறு மாநிலங்களில் பீஹாரிகள் தாக்கப்படும்போது ராகுல் அலட்சியம் காட்டுகிறார்' என தேர்தல் வியூக நிபுணரும், ஜன் சுராஜ் கட்சி தலைவருமான பிரசாந்த் கிஷோர் தெரிவித்து உள்ளார்.பீஹாரின் நாளந்தாவில் நடந்த நிகழ்ச்சியில் பிரசாந்த் கிஷோர் பேசியதாவது: நிதிஷ் குமார் செய்த நல்ல பணிகளால், மக்கள், குறிப்பாக நாளந்தா மாவட்ட மக்கள், அவரை 20 ஆண்டுகளாக முதல்வராக ஆக்கினர். ஆனால் இன்று, நிதிஷ் குமாரின் உடல் மற்றும் மனநிலை சரி இல்லை. அவர் முதல்வராக நீடிக்க முடியாது. அவருக்கு வயதாகி விட்டது. அதனால் தான் மக்கள் இப்போது நிதிஷ் குமாரை தாண்டி, வேறு யாரையாவது யோசித்து பார்க்க வேண்டும்.

வேலைவாய்ப்பு

நிதிஷ் குமாரின் ஆட்சிக் காலத்தில், சாலைகள் மேம்படுத்தப்பட்டன, மின்சாரம் வழங்கப்பட்டது, ஆனால் மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. பீஹாரில் இருந்து மக்கள் வேறு மாநிலத்திற்கு இடம்பெயர்ந்து செல்வது நிற்கவில்லை. மற்ற மாவட்டங்களை விட நாளந்தா நிச்சயமாக வளர்ச்சியடைந்துள்ளது, ஆனால் இங்குள்ள மக்களின் வறுமை ஒருபோதும் ஒழிக்கப்படவில்லை. இதுவரை, இங்குள்ள மக்களின் குழந்தைகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை. தேஜஸ்வி யாதவ் பேசுவதற்கு எந்தப் பிரச்னையும் இல்லை; தேர்தல் கமிஷன் மக்களின் பெயர்களை நீக்குகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பீஹார் மக்கள் வேலைவாய்ப்பை விரும்பு கிறார்கள். வெற்றுப் பேச்சுகளை அல்ல என்று முடிவு செய்துள்ளனர். யாரும் பொய்யான வாக்குறுதிகளை நம்ப போவதில்லை.

எஜமானர் அல்ல

பட்டியலில் பெயர்கள் இல்லாதவர்கள் தேர்தல் கமிஷனை எதிர்த்துப் போராடுவார்கள், தேர்தல் கமிஷன் எஜமானர் அல்ல; மக்களே எஜமானர்கள். மக்கள் யாருக்கு வாக்களிக்கிறார்களோ அவர்கள் வெற்றி பெறுவார்கள். ராகுல் டில்லியில் பீஹார் மக்களை கேலி செய்கிறார். பல்வேறு மாநிலங்களில் பீஹாரிகள் தாக்கப்படும்போது அலட்சியம் காட்டுகிறார். இவ்வாறு பிரசாந்த் கிஷோர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

xyzabc
ஆக 10, 2025 23:07

தயாநிதி கேவலமாக பேசியதை மறக்க முடியாது.


vbs manian
ஆக 10, 2025 21:40

பிஹாரி குறித்து தமிழக அரசியல் பிரபலங்கள் மோசமாக பேசியவை ஊடகங்களில் உள்ளன. அவற்றை உள்ளூர் மொழியில் பிஹாரில் வெளியிட வேண்டும். இந்தி கூட்டணி வண்டவாளம் தண்டவாளம் ஏறும்.


தாமரை மலர்கிறது
ஆக 10, 2025 21:01

பிஹாரில் சாலைகள் போட்டது, தடையில்லா மின்சாரம் கொடுத்தது நிதிஷ் அல்ல. மத்திய அரசு தான். வேலைவாய்ப்புகளை உபி, பிஹார், ராஜஸ்தான், எம்பிக்கு கொண்டுவர, தென் இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகளை வடஇந்தியாவிற்கு வந்தால், வரி கிடையாது என்று உத்தரவாதம் அளிக்க வேண்டும். இலவச மின்சாரம், தண்ணீர், நிலம் கொடுக்கவேண்டும். மேலும் பொருளாதார சலுகைகள் கொடுக்க வேண்டும். அப்படி செய்தால், பீகார் தொழிலாளிகள் தமிழகத்திற்கு வரவேண்டிய அவசியம் இருக்காது. இடம் பெயர்வது இயற்கைக்கு எதிரானது. அதனால் வருமானவரியை முற்றிலும் நீக்கி, தென் இந்தியாவில் ஜிஎஸ்டியை நாற்பது சதவீதமாக உயர்த்தி, வடஇந்தியாவில் இருபது சதவீதமாக குறைத்தால், நிச்சயம் கம்பெனிகள் வடஇந்தியாவை நோக்கி படையெடுக்கும். இதை செய்யவேண்டியது மத்திய அரசின் கடமை. தமிழர்கள் வேலை செய்ய முடியாத அளவிற்கு தமிழத்தில் வேலைவாய்ப்புகள் பெருகிவிட்டன. இந்த வேலைகளை வடஇந்தியாவிற்கு திருப்பிவிட்டால், அங்குள்ள தொழிலாளிகள் குடும்பத்தை விட்டு இங்குவரவேண்டிய அவசியம் இருக்காது.


Priyan Vadanad
ஆக 11, 2025 01:41

என்னா நல்லெண்ணம். தாமரை அலறுகிறது.


vivek
ஆக 11, 2025 08:17

சாம்பிராணி கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு ..வடை சுடாதே


சாமானியன்
ஆக 10, 2025 20:55

பிரசாந்த் குமார் சொல்வதில் 80% உண்மை இருக்கிறது. அதே சமயம் தேர்தல் கமிஷன் நடவடிக்கைகள் ஆச்சரியமாக உள்ளது. புலம் பெயர்ந்தவர்கள் ஓட்டுரிமை இழக்கக்கூடாது. வெகு விரைவில் வலைதளம் வழியாக ஓட் போடும் வசதி வரும்.


T.sthivinayagam
ஆக 10, 2025 20:12

கிஷோருக்கு தெரிந்த பிரபஞ்ச சூஷ்மம் ராகுலுக்கு தெரிய வாய்ப்பில்லை


SUBBU,MADURAI
ஆக 10, 2025 20:50

திமுககாரனுக பீஹாரிகளை பீடா வாயன்கள் என்று எள்ளி நகையாடுவது இந்த பிரசாந்த் கிஷோருக்கு தெரியாதா?


vivek
ஆக 11, 2025 11:24

அப்போ ராகுல்....


தமிழ்வேள்
ஆக 10, 2025 19:44

இந்த ஆள் ஒருத்தர் தான் இதுவரை பப்புவை கழுவி ஊற்றாமல் இருந்தவர்.. கடைசியில் இவரிடமிருந்தும் பப்புவுக்கு பாதரக்ஷை சேவையா?....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை