உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / திருடிட்டு வருந்தினால் சரியாகிடுமா? சித்தராமையா விவகாரத்தில் சிக்சர் அடித்த குமாரசாமி

திருடிட்டு வருந்தினால் சரியாகிடுமா? சித்தராமையா விவகாரத்தில் சிக்சர் அடித்த குமாரசாமி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: திருடிட்டு வருந்தினால் சரியாகிவிடுமா? என்று மூடா விவகாரத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவை குமாரசாமி விமர்சித்துள்ளார்.கர்நாடகாவில் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் சார்பில் நில ஒதுக்கீடு செய்யப்பட்டதில் 4000 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம், மூடா மோசடி வழக்கு என்று அழைக்கப்படுகிறது.இந்த வழக்கில், முதல்வர் சித்தராமையா மனைவி பார்வதியின் பெயரில் 14 வீட்டுமனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது, சலசலப்பை ஏற்படுத்தியது. சித்தராமையா மீது வழக்கு பதிவு செய்யப்பட, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விசாரணை நடத்த உத்தரவிட்ட நிலையில் சித்தராமையா மீது வழக்கு தொடரப்பட்டது. பெரும் சிக்கலை தொடர்ந்து, கணவர் தான் முக்கியம் என்று கூறி சித்தராமையா மனைவி பார்வதி தமக்கு ஒதுக்கப்பட்ட 14 மனைகளை திருப்பி தருவதாக அறிவித்தார்.இந்நிலையில் திருடிவிட்டு, அதற்காக வருந்தினார் என்றால் எப்படி? அதுதான் மிகச்சிறந்த நகைச்சுவை என்று மத்திய அமைச்சர் குமாரசாமி விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறி இருப்பதாவது: மனைகளை திருப்பி தருவதாக அறிவித்த விஷயத்தில் முதல்வர் சித்தராமையா தாம் சிறந்த அரசியல் புத்திசாலி என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார். இந்த விஷயத்தில் காங்கிரஸ் மற்றும் சித்தராமையா இவர்களில் யார் பொய்களை சொல்கின்றனர் என்று அனைவருக்கும் நன்றாக தெரியும்.சித்தராமையா மீது மேலும் 2 வழக்குகள் உள்ளன. இப்போது அவர் தம்மை காக்க வேண்டும் என்று சாமுண்டீஸ்வரியை வணங்க அங்கு செல்வார். இவ்வாறு குமாரசாமி கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

Sridhar
அக் 02, 2024 15:37

சரி, உங்க கூற்று படியே, ஒரு குற்றவாளி தப்பிச்சிட்டாங்க, அதுனால, எல்லா குற்றவாளிகளையும் வெளியே விட்ருலாமா? அப்போ சமூகம் என்னதுக்காகும்?


Nallavanaga Viruppam
அக் 02, 2024 14:33

இது என்னவோ காங்கிரஸ் கட்சிலயே நடந்த உள்குத்து வேலையாக இருக்க வேண்டும்.DK Shivakukmar போட்ட ஸ்கெட்ச் தான்.


Sridhar
அக் 02, 2024 14:27

இந்த ஆளு மூடா கேசுல தப்பிச்சாலும், ஐடியா கொடுத்ததற்கு நம்ம செந்தில் பாலாஜிக்கு ராயல்டி கொடுத்தே ஆகவேண்டும்.


சோழநாடன்
அக் 02, 2024 14:02

1991-96ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராய் இருந்த ஜெயலலிதா டான்சிக்குச் சொந்தமான நிலத்தை வாங்கினார். இது நில பேர மோசடி என்று 2001இல் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேல்முறையீட்டில் ஜெயலலிதா டான்சியில் தான் வாங்கிய நிலத்தை மீண்டும் அரசிடம் ஒப்படைத்துவிடுகிறேன். என்னை மன்னித்து விடுதலை செய்யவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதன்படி அவர் விடுதலை செய்யப்பட்டார் என்ற முன்னுதாரணம் உள்ளது. ஜெயலலிதாவுக்கு ஒரு நீதி, சித்தராமையாவுக்கு ஒரு நீதியா? குமாரசாமி பதில் சொல்லட்டும்.


Lion Drsekar
அக் 02, 2024 13:12

முதலில் எனக்கும் எதற்கும் தொடர்பே இல்லை, பிறகு எனக்கு வேண்டாம் அரசுக்கே திருப்பி கொடுத்து விடுகிறேன், ,வருத்தம் இவைகள் எல்லாமே மறப்போம் மன்னிப்போம் நிலையையும் தாண்டிய ஒரு நிலைப்பாடு, என்ன தவறு செய்தாலும், அபராதம் கட்டிவிட்டால் கொள்ளையடித்த பல லட்சம் கோடி திருடியவருக்கே என்பதை உலகம் கண்டு வருகிறதே , அப்படி இருக்க இதுவும் பல நாடகங்களில் ஒரு நாடகம் பாவம் நல்லவர்கள்


Barakat Ali
அக் 02, 2024 13:10

இந்த விசயத்துல எங்க மஹா மன்னரின் தில்லாலங்கடி குடும்பம்தான் கொடுத்து வைத்த குடும்பம் .... சட்டம் அவங்க குடும்பத்தை தொட்டிருக்கலாம் .... ஆனால் தட்டித் தூக்கியதில்லை .... காரணம் சமரசம் ....... மூன்றாம் நபர் அறியாமல் எதிரியுடன் சமரசம் செய்துகொள்வதில் வல்லவர்கள் ..... தொண்டன்/கு ண்டன் யாருக்கும் தெரியாது என்ன நடந்திச்சு ன்னு ..... ஒரே ஒரு உதாரணம் ...... 2014 தேர்தல் முடிவுகள் வந்துகொண்டிருந்த பொழுதே ஸ்பைஸ்ஜெட் விற்கப்பட்டது .....


பாமரன்
அக் 02, 2024 14:17

ஸ்பைஸ்ஜெட் 2014 தேர்தலுக்கு முன்பே பணப்பிரச்சினையினால் ஒரிஜினல் ஓனருக்கு... அதாவது பாஜக புள்ளிக்கு கைமாற்றி விடப்பட்டது...


Subbarao V
அக் 02, 2024 12:46

,Most of the Critics Are questioning the Honesty of Kumaraswami instead of justifying gor punishment to Siddharamiah , the CM . It seems that they are not for punishment for corruption in Goveernance may be that they like and welcome corruption in Government First let there be a Court proceedings now in this . Again on Kumaraswami when time occurs . Any way our Judiciary is asfast as Tortoise, and we can see waste of Government money and time of several Judges plush great income to special leasing Lawyers .


Subbarao V
அக் 02, 2024 12:35

பலருடைய கருத்து குமாரசாமி யோக்யரா என எதிற் கேள்விதான் . யாருக்கும் அரசியலில் குற்றம் செய்தவன் நிச்சயம் தண்டனை அடையவேண்டும் என்னும் உருதியான மன மில்லை இவர்கள் அனைவரும் தொடர்ந்து குற்றம் புறிபவர்களோ குமாரசாமி குற்றவாளியாக இருப்பின் பின்னர் வழக்கு போட்டு தண்டிக்கலாமே தண்டனை அவசியமில்லையோ?


Ramesh Sargam
அக் 02, 2024 12:11

குமாரசாமி மற்றும் அவர் குடும்பத்தினர் ஏதோ மஹாத்மா காந்தி, லால் பகதூர் சாஸ்திரி, காமராஜ் வழியை கடைபிடிப்பவர்கள் போல பேசுகிறார். இவருடைய சொந்த ஊரான ஹாசன் மற்றும் சுற்றுவட்டாரங்களில் இவர்கள் பெயரில் உள்ள நிலங்கள் எத்தனையோ...


அப்புசாமி
அக் 02, 2024 11:53

திருடிட்டு மாட்டிக்கக்.கூடாது.


புதிய வீடியோ