உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தீர்ப்பு நிலுவையில் உள்ள வழக்குகள் விபரம் கேட்கிறது சுப்ரீம் கோர்ட்

தீர்ப்பு நிலுவையில் உள்ள வழக்குகள் விபரம் கேட்கிறது சுப்ரீம் கோர்ட்

புதுடில்லி : குற்றவியல் வழக்குகளில் தீர்ப்புகள் வழங்காததற்காக ஜார்க்கண்ட் மாநில உயர் நீதிமன்றத்தக்கு, உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், தீர்ப்புகள் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து ஒரு மாதத்திற்குள் அறிக்கை அளிக்கும்படி அனைத்து உயர் நீதிமன்றங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.ஜார்க்கண்டில் பல்வேறு வழக்குகளில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நான்கு பேர், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில், 'ஆயுள் தண்டனையை ரத்து செய்யக் கோரி ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் நாங்கள் தாக்கல் செய்த மனுக்களின் விசாரணை முடிந்த நிலையில், 2022ல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. மூன்று ஆண்டுகள் கடந்தும் இன்னும் தீர்ப்பு வழங்கப்படவில்லை' என, தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை, நீதிபதிகள் சூர்யகாந்த், கோட்டீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, ஜார்க்கண்ட் உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ஜனவரி 2022 முதல், டிசம்பர் 2024 வரை டிவிஷன் பெஞ்ச் விசாரித்த 56 குற்றவியல் மேல்முறையீடுகளில், தீர்ப்பு நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த தகவலால் அதிருப்தி அடைந்த நீதிபதிகள், நீண்ட காலமாக தீர்ப்பு நிலுவையில் வைக்கப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்தனர்.'உயர் நீதிமன்றத்தின் இத்தகைய செயல்பாடுகளை ஏற்க முடியாது. இந்த விவகாரத்தில் சில வழிகாட்டும் விதிமுறைகள் பிறப்பிக்கப்படும். 'எனவே, 2025 ஜனவரி 31 அல்லது அதற்கு முன்னர் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு, இன்றுவரை தீர்ப்பு அறிவிக்கப்படாத வழக்குகள் குறித்து நான்கு வாரங்களுக்குள் அனைத்து உயர் நீதிமன்றங்களும் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

vgoodmail3
மே 07, 2025 14:10

தூங்கும் வழக்குகள் 5.28 கோடி 5.28 Cr . இதற்கு ஒரே தீர்வு NO SALARY, BENEFITS - IF NO JUDGEMENTS , IS THE ONLY SOLUTION...


vgoodmail3
மே 07, 2025 11:51

நன்று...


Sudha
மே 06, 2025 16:24

இது வெறும் ஆரம்பம்


Anvar
மே 06, 2025 13:30

இவ்ளோ வழக்குகள் தேங்கி கிடைக்கும்போது நீதி மன்றத்திற்கு ஏன் மாத கணக்கில் விடுமுறை? வருஷ கணக்கில் இழுத்தடிப்பது


sivakumar Thappali Krishnamoorthy
மே 06, 2025 11:13

லச்ச கணக்கான வழுக்குகள் நீதி மன்றத்தில் தேங்கி கிடக்கு.. ஆனால் அரசியல் வழக்குகள் உடனடியா, ஒத்திவைப்பும், தீர்ப்பும், மேல்முறை, எல்லாம் நடக்குது.. என்ன மாயமோ? நல்ல கவனிப்பு போல


M S RAGHUNATHAN
மே 06, 2025 11:05

The SC should also get the following details and put it in public domain. 1. How many judgements of District Courts are set aside by HCs and how many judgements of HCs are overturned by SC. The HC and SC should say whether the judges have not applied their minds or have not correctly interpreted the law while overturning the judgements. What steps the CJs of HC and CJI have been taken initiated against such judges starting from district judiciary. Where is the Judicial Accountability? Or does SC and HC think they are not accoun to the public.


Ramalingam Shanmugam
மே 06, 2025 10:59

நீங்க என்ன ஒழுங்கு


duruvasar
மே 06, 2025 09:17

தண்டனை கொடுக்கப்பட்ட பொன்முடியின் தீர்ப்பு 1 1/2 வருட காலமாக ஏன் உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவில் நிறுத்திவைக்கப்பட்டிருருகிறது என்பதை முதலில் இவர்கள் விளக்கவேண்டும்.


M S RAGHUNATHAN
மே 06, 2025 07:41

உச்ச நீதி மன்றத்திலும், உயர் நீதி மன்றத்திலும் நிலுவையில் உள்ள வழக்குகளின் பட்டியல் யார் தருவார்கள். ஏன் நிலுவையில் உள்ளது என்ற விவரம் யார் தருவார்கள். எந்தெந்த நீதிபதிகளின் தீர்ப்புகள் மாற்றி எழுதப் பட்டது, அதற்கு என்ன காரணம், நீதிபதிகள் ஏன் சரியான சட்ட தீர்ப்பு கொடுக்கவில்லை என்று கேட்டால் பரவாயில்லை.


சாமானியன்
மே 06, 2025 04:38

செம மறதியாக இருக்கும்.உச்சநீதிமன்றம் கவர்னர், ஜனாதிபதிக்கே காலக்கெடு விதிக்கும்போது மக்கள் நீதிமன்றங்களையும் அதே கேள்வி கேட்கத்தான் செய்வார்கள். அனுபவமே ஆசான்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை