உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஓட்டுப்பதிவு இயந்திரத்தின் மீது சந்தேகம்: மறுதேர்தல் நடத்த முயன்ற கிராம மக்களால் பதற்றம்

ஓட்டுப்பதிவு இயந்திரத்தின் மீது சந்தேகம்: மறுதேர்தல் நடத்த முயன்ற கிராம மக்களால் பதற்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சோலாப்பூர்: மஹாராஷ்டிராவின் மார்க்கட்வாடி கிராமத்தில் ஓட்டுப்பதிவு இயந்திரத்தின் மீது சந்தேகம் எழுப்பிய மக்கள், மறு தேர்தல் நடத்த ஓட்டுச்சீட்டு முறையில் நேற்று ஏற்பாடு செய்ததை அடுத்து பதற்றம் நிலவியது.மஹாராஷ்டிரா சட்டசபைக்கு சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில், பா.ஜ., - சிவசேனா, தேசியவாத காங்.,கின் மஹாயுதி கூட்டணி, 230 இடங்களில் அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது.சோலாப்பூர் மாவட்டத்தின் மல்ஷிராஸ் சட்டசபை தொகுதியில், பா.ஜ., வேட்பாளர் ராம் சத்புதேவை, தேசியவாத காங்., சரத்பவார் பிரிவை சேர்ந்த உத்தம் ஜன்கர், 13,147 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். மல்ஷிராஸ் தொகுதிக்கு உட்பட்ட மார்க்கட்வாடி கிராம மக்கள், இந்த வெற்றியில் சந்தேகம் எழுப்பினர். இந்த கிராமத்தில் மொத்தம், 2,000 ஓட்டுகள் உள்ளன; 1,900 பேர் ஓட்டளித்துள்ளனர்.இதுவரை, தேசியவாத காங்., வேட்பாளர் உத்தம் ஜன்கருக்கு ஆதரவாகவே இந்த கிராமத்தில் ஓட்டளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த முறை, ஜன்கர் 843 ஓட்டுகள் மட்டுமே பெற்றுள்ளார்; பா.ஜ., வேட்பாளர் சத்புதே 1,003 ஓட்டுகள் பெற்றுள்ளார். இதனால், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தின் மீது சந்தேகம் கிளப்பிய கிராம மக்கள், ஓட்டுச்சீட்டு முறையில் மறுதேர்தல் நடத்தும்படி மாவட்ட நிர்வாகத்தை அணுகினர். கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.இதையடுத்து, மார்க்கட்வாடி கிராமத்தில் ஓடடுச்சீட்டு முறையில் மறு தேர்தல் நடத்த இருப்பதாக கிராம மக்கள் நேற்று அறிவித்தனர். இதைத் தொடர்ந்து, டிச., 2 முதல் 5 வரை இந்த கிராமத்தில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

Narasimhan
டிச 04, 2024 17:48

நீ 40 எம் பி சீட் வாங்கியது நேர்மையென்றால் இது 100 பங்கு நேர்மைதான். வாங்கின காசுக்கு மேல கூவுற


Sampath Kumar
டிச 04, 2024 16:39

இந்த ஒரு கிராமம் மட்டும் ள்ள இந்திய முழுக்க இதே நிலை தான் அலையை ஒட்டு மறைத்தான் சிறந்தது பிஜேபி காரனின் தில்லு முள்ளுக்கு தேர்தல் கமிசன் துணை போவது சனநாயக படு கொலை ஆகுமிது குறித்து எந்த ட்சி காரணம் வாய்திறக்க வில்லை என்பது ஆச்சரியம் களவாணி அரசியில் வியாதிகள்


vbs manian
டிச 04, 2024 16:38

பயங்கரம். தோற்று போன எல்லோரும் ஆரம்பித்து விடுவார்கள். சட்டப்படி இயங்கும் நிர்வாக அமைப்புக்கு சவால்.


nisar ahmad
டிச 04, 2024 16:13

இதை எல்லா இடங்களிலும் செய்து ஓட்டுச்சீட்டு முறை வாக்கெடுப்பு நடத்தவேண்டும் அப்படி நடத்தினால் பஜக 100 இடத்திலௌ கூட ஜெயிக்காது அதனால் தான் தடுக்கிறார்கள்.


GMM
டிச 04, 2024 14:12

ஓட்டு பதிவு இயந்திரம் - சட்ட பூர்வமானது. மாற்ற முடியாது. கள்ள ஓட்டு, செல்லாத ஓட்டு முடியாது. விரைவில் எண்ணிவிடலாம். வாக்கு சீட்டு. - தற்போது சட்டப்படி செல்லாது. ஓட்டு பெட்டியை எடுத்து செல்ல முடியும். செல்லாத ஓட்டு பதிவாகும். கள்ள ஓட்டு போட முடியும். விரைவில் எண்ண முடியாது. இது ஒரு சட்ட விரோத செயல். தேர்தல் ஆணையம், நீதிமன்றம் அமைதி காப்பது நல்லதல்ல. நாளை ஒரு தீர்ப்பின் மீது கட்ட பஞ்சாயத்து அமைத்து மறு விசாரணை செய்து குழப்பம் விளைவிக்க முடியும். ? எல்லையற்ற சுதந்திரம் ஆபத்தில் முடியும்.


Kanns
டிச 04, 2024 13:49

Why BJP leaders modi-shah Afraid of Ballot-PapersThat itself Proves EVM Hackings& Manipulations incl very planned few% Vote-Swings for BJP Wins& to Discredit traditionally Strong ShivSena& NCP. EvenAdvanced Countries have BallotPapers


Velayutham rajeswaran
டிச 04, 2024 15:20

why congress is afraid of EVM


xyzabc
டிச 04, 2024 12:54

நாராயணா, கோவை சென்னை இடங்களில் பா ஜ க வாக்களிப்பவர்கள் பெயர்கள் லிஸ்டில் இருந்து மாயமானது நினைவுக்கு வருகிறது.


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 04, 2024 12:47

எதிர்க்கூட்டணியின் தூண்டுதல்.... வேறென்ன??


Barakat Ali
டிச 04, 2024 11:59

இந்த கிராமத்தில் மொத்தம், 2,000 ஓட்டுகள் உள்ளன 1,900 பேர் ஓட்டளித்துள்ளனர் ....... இதுலதான் இருக்கு சூக்குமம் ...... வாங்கின காசுக்கு எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு விசுவாசம் ..... மக்களே ஊழலின் அங்கமாக மாறிவிட்டனர் .......


Narayanan Muthu
டிச 04, 2024 11:21

மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகளில் எதிர் கட்சி அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல சாமானிய மக்களுக்கும் சந்தேகம் வலுத்து வருகிறது. தேர்தல் ஆணையம் மற்றும் பிஜேபியின் மைண்ட் வாய்ஸ் "கொஞ்சம் ஓவராதான் போயிட்டோமோ" .


Narasimhan
டிச 04, 2024 12:27

முதலில் காந்தி குடும்பத்தை காங்கிரசில் இருந்து அகற்ற சொல்லுங்கள். தானாகவே காங்கிரசுக்கு கூடுதல் வாக்குகள் கிடைக்கும். 40 எம் பி சீட் இங்க வாங்கியபோது ஓவரா தோன்ற வில்லையோ? உனக்கு வந்தா ரத்தம்


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 04, 2024 13:23

அதே போல தமிழக தேர்தல் முடிவுகளில் கூட எங்களுக்கு ஆரம்பம் முதலே சந்தேகம்தான் ... .உனக்கு படியளக்கும் புலிகேசி மன்னரை அமைச்சரவையுடன் பதவி விலகி, சட்ட சபையைக் கலைக்க ஆளுநருக்கு பரிந்துரை செயும்படி கேளேன் ....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை