வாசகர்கள் கருத்துகள் ( 17 )
அப்படியே வளர்த்துவிடுற போறீங்க. குஜராத்துக்கு மேல எந்த மாநிலம் மேல வராம கங்கணம் கட்டிக்கிட்டு வேலை பார்த்த எங்க இந்தியா உருப்படும். அதுலேயும் குறிப்பா அந்த ரெண்டு மாநிலத்துக்கு அள்ளி கொடுத்தது மிச்ச மாநிலங்கள் எல்லாம் கண்டு கொள்ளாமலே போவது. இது எல்லாம் அழகா?
மத்தியில் பாஜக ஆட்சியில் இருக்கும் வரை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் இந்தியா முன்னேறிய நாடாக ஆகாது !
பெரும்பாலான மக்களுக்கு அன்றாட வாழ்க்கை மற்றும் எதிர்கால வாழ்க்கை பற்றிய பிரச்சினைகள், சிக்கல்கள்.. அவர்களுக்கு இந்தியா எவ்வகையில் வளரும் நாடு என்று கூடத் தெரியாது. அரசு நிர்வாகம் தீர்மானிக்கலாம் 2047ல் இந்தியா வளர்ந்த நாடாக வேண்டும் என்று. அது பற்றி எவ்வித அறிதலும் புரிதலும் இல்லாத பெரும்பான்மையினர் எந்த விதத்தில் அவர்கள் பங்களிப்பைத் தர முடியும்? அரசின் நோக்கங்கள், இலக்குகள் பற்றிய புரிதல், தெளிவு மற்றும் பங்களிப்புச் செய்வதில் ஆர்வம் ஆகியவற்றை மக்கள் அனைவரும் பெற அரசு முனைப்புக் காட்ட வேண்டும்.
நிதி வேண்டுவோர் அங்கு சென்றிருப்பார்கள். செல்லாதவர்கள் நிதி வேண்டாம் என்று சொன்னதாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். மெட்ரோ திட்டங்களுக்கு நிதி இல்லை என்பவர்களுக்கு திட்டத்துக்கான மதிப்பீடுகளை கொடுக்கவேண்டும் என்பது கூடவா தெரியாது? திறமையற்றவர்களை ஆட்சிப்பீடத்தில் ஏற்றி வைத்தது தமிழன் செய்த ஹிமாலயதவறு.
எதற்கு இந்த கூட்டம், புயல் வெள்ளம் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு மத்திய குழு வந்தது, நிர்மலா வந்தார், உள்துறை அமைச்சர் சொன்னார், ஆனால் காசு மட்டும் வரலை, மாநில அரசு என்ன கேட்டாலும், குழு பரிந்துரைத்ததை காட்ட வேண்டியதுதானே ? இவ்வளவுதான் சேத மதிப்பு, இவ்வளவுதான் தர முடியும், என்று சொல்ல வேண்டியதுதானே, ஏன் வெளிப்படைத்தன்மை இல்லை ? நிதி அமைச்சர் ஏன் வாயை திறக்கவில்லை ? இவர்கள் எதோ மகாராஜாக்கள் போலவும், மாநிலங்கள் பிட்சை கேட்பது போலவும் நடப்பது ஏன் ? இவர்கள் தான் மாநிலங்களில் வரி என்னும் பெயரில் மகா சுரண்டல் செய்து, சரியாக சொன்னால் கொள்ளை அடித்து, தமிழக மக்களை வஞ்சிக்கிறார்கள், மக்கள் சாபம் சும்மா விடாது.
கொடுப்பதெல்லாம் பேக்கேஜ் போட்டு மகன் மருமகன் பாக்கெட்டுக்கு போகலாம்.
இந்த கூட்டத்தில் பங்குபெறும் மாநிலங்களுக்குத்தான் மத்திய நிதிகளில் முன்னுரிமைன்னு சொல்லிரனும். அப்புறம் பாருங்க லபோதிபோன்னு அடிச்சிக்குவானுங்க இந்தி கூட்டணி ஆளுங்க நிஜமாலுமே, இந்த மாதிரி கூட்டங்களில் பங்கு பெற்று அவரவர் மாநிலங்களின் முன்னேற்ற திட்டங்களை விவரித்து அதற்கான நிதி ஒதுக்கீடுகளை கோராத பொறுப்பற்ற முதல்வர்கள் கொண்ட மாநிலங்கள் ஒதுக்கப்பட்டால்தான், வளர்ச்சி இல்லாமல் தவிக்கும்போது சம்பந்தபட்ட மாநில மக்களுக்கு உரைக்கும்.
நீ பிஹாரி தானே , அப்படி தான் எழுதுவே .
இந்திய மக்கள் ஒரு விஷயத்தை புரிந்துக்கொள்ளவேண்டும். அது என்ன வென்றால் இந்திய ப்ளாக் கூட்டணியில் உள்ள கட்சி மாநில முதல்வர்கள் கேட்கும் நிதியை அப்படியே ஒரு பைசா கூட குறைக்காமல் கொடுக்கவேண்டும் இல்லாவிடில் தர்ணா, வெளி நடப்பு, ஆர்பாட்டம், போராட்டம். இதே தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் 1000ரூ கொடுப்பதற்கு ஆயிரம் யோசனை? ஆனால் 36000 கோடி நிதி கொடுக்க மோடிஜி அரசு 36000 முறை யோசிக்க வேண்டும். நம் கண்ணுக்கு தெரிந்து 1000 செலவு செய்து லட்ச ரூபாய் கேட்டால் தருவாங்களா? அதனால், மத்திய அரசு 297 கோடி கொடுத்தது நியாயம். தவிர 36000 கோடி நிதி தமிழகத்திற்கு கொடுத்தால் அந்த நிதியை 2026 தேர்தலில் ஓட்டுக்கு 5000 என பணத்தை வாரி இறைத்து மீண்டும் 234/234 என எல்லா தொகுதிகளிலும் மாபெரும் வெற்றி பெற்று மீண்டும் முதல்வர் ஸ்டாலின் சிம்ம சொப்பணத்தில் அமர்வார். அவர் மகன் துணை முதல்வராவார். அதற்குதான் அவ்வளவு கோடி நிதி. உண்மையில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை அலசி ஆராய்ந்து பட்ஜெட் போட்டால் 36000கோடி தமிழகத்திற்கு வருமா? மேலும், கடந்த காலத்தில் ஊரை சூறையாடும் அளவிற்கு தமிழகத்தில் வெளி நாடுகளை போல புயல்கள் உருவாக வில்லை? ஆகவே, மத்திய அரசு அளித்த 297 கோடி போதுமானது. மேலும் மத்திய அரசு மாநில அரசுக்கு நிதி ஒதுக்கும்போது, ஆடிட் தணிக்கை செய்து கணக்கு பார்க்கவேண்டும். அவ்வாறு பார்ப்பதில்லை. இதனால் மத்திய அரசு நிதி பணம் தவறாக மாநில அரசுகள் பயன்படுத்துகின்றன. இதை தட்டி கேட்டால் வெளிநடப்பு, போராட்டம், உருட்டல் மிரட்டல் ஆட்சி கவிழ்ப்பு ஆகிய துஷ்பிரயோக செயல்களுக்கு இந்திய ப்ளாக் கூட்டணி எப்போதும் பார்லிமென்டில் சபையை நடத்த விடாமல் வீணாக புறக்கணிக்கிறது இந்திய மக்களே பாரீர் இவர்களின் கூத்தை? இனியாவது மெஜாரிட்டி அரசுக்கு ஓட்டு போடுங்க. ஏனெனில் கூட்டணி ஆட்சி எப்போதும் " நித்திய கண்டம் பூர்ண ஆயுசு" என்ற கதைதான்.
அவர்களே ஆடி அவர்களே ஒருவரை ஒருவர் மெச்சிக் கொள்வார்கள்!
ஓசியா வந்த துணை முதல்வர் பதவி போல.. அப்படித்தானே வேணுகோபால்
பயனற்ற , நேரம் விரயம் செய்யும் கூட்டம் ..பிஹாருக்கும் , குஜராத் கும் தான் பயன் ..
மத்தியில் எந்த கட்சி ஆட்சி செய்தாலும் தமிழ்நாட்டிற்கு தேவையானதை கேட்டு பெற இது போன்ற கூட்டங்கள் மிக தேவையானதாக இருக்கும். அரசியல் காரணத்திற்காக இது போன்ற முக்கியமான கூட்டங்களை புறக்கணித்து தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை எடுத்து செல்லாதது மிக வருத்தமான விஷயம். முத்ரா யோஜனா கடன் திட்டத்தில் இந்தியாவில் அதிக அளவில் லோன் வாங்கப்படுவது தமிழ்நாட்டில் தான். இந்த கடன் அளவை 10 லட்சத்திலிருந்து 20 லட்சமாக உயர்த்தியது தமிழ்நாட்டிற்கு மிகப் பெரிய லாபம். அதே போன்று CSR திட்டத்தில் மாணவர்களை திறன் மேம்பாடு செய்வது தமிழ்நாட்டிற்கு மிகப் பெரிய பயனை கொடுக்கும். இப்படியெல்லாம் தமிழ்நாட்டுக்கு நன்மை பயக்கும் திட்டங்களை கொடுத்துள்ள இந்த பட்ஜெட்டை அரசியல் காரணமாக தமிழ்நாடு என்ற பெயர் இடம் பெறவில்லை என்று கூறுவது மிகவும் மொக்கையாக இருக்கிறது.
மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
27 minutes ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
27 minutes ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
38 minutes ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
39 minutes ago