உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / தலையங்கம் / புதிய குடியுரிமை மசோதா மோடி அரசின் சரியான முடிவு!

புதிய குடியுரிமை மசோதா மோடி அரசின் சரியான முடிவு!

இந்தியாவுக்குள் வரும் வெளிநாட்டினர் வருகையை நிர்வகிக்க, பாஸ்போர்ட் சட்டம் - 1920, வெளிநாட்டினர் பதிவு சட்டம் - 1939, வெளிநாட்டினர் சட்டம் - 1946 மற்றும் குடியுரிமை சட்டம் என, நான்கு விதமான சட்டங்கள் தற்போது அமலில் உள்ளன. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அமல்படுத்தப்பட்ட இந்தச் சட்டங்களை ஓரங்கட்டிவிட்டு, புதிய குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு தீர்மானித்து, சமீபத்தில் லோக்சபாவில், குடியுரிமை மற்றும் வெளிநாட்டினர் மசோதா - 2025ஐ தாக்கல் செய்தது.இந்த சட்டம் அமலுக்கு வந்தால், போலி பாஸ்போர்ட் மற்றும் போலி விசா பயன்படுத்தி இந்தியாவுக்குள் நுழைந்தாலோ அல்லது தங்கியிருந்தாலோ அல்லது இந்தியாவை விட்டு வெளியேறியது கண்டுபிடிக்கப்பட்டாலோ, ஏழு ஆண்டு சிறை, 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.மேலும், கல்வி, வேலை​வாய்ப்பு, மருத்துவ சிகிச்சை போன்றவற்றுக்காக, நீண்டகால விசாவில் இந்தியா வரும் வெளிநாட்டினர், 14 நாட்களுக்குள், வெளிநாட்டினர் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். அதேநேரத்தில், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் என்றால், 24 மணி நேரத்தில் பதிவு செய்ய வேண்டும். அது மட்டுமின்றி, அந்தமான் நிகோபார் தீவுகள், ஜம்மு - காஷ்மீர், உத்தரகண்ட், ஹிமாச்சல பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு செல்வதென்றால், சிறப்பு அனுமதியும் பெற வேண்டும்.விசா காலம் முடிந்த பின்னும், இந்தியாவில் தங்கியிருக்கும் வெளிநாட்டினரை கண்காணிக்கும் வகையில், ஹோட்டல்கள், பல்கலைகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகள் போன்றவை, வெளிநாட்டினர் குறித்த விபரங்களை, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும். விமானம் மற்றும் கப்பல்களில் வெளிநாட்டினர் வரும் தகவல்களை, சம்பந்தப்பட்ட விமான நிறுவனமும், கப்பல் நிறுவனமும் தெரிவிக்க வேண்டியது கட்டாயம் என்றும் மசோதாவில் கூறப்பட்டுள்ளது.வெளிநாட்டினரின் வருகையை ஒழுங்குபடுத்தவும், தேவையெனில், அவர்களுக்கு கட்டுப்பாடு​விதிக்கவும், இந்த புதிய சட்டமானது அதிகாரம் வழங்குகிறது. மொத்தத்தில் வெளிநாட்டினர் வருகை மற்றும் குடியுரிமை தொடர்பான அனைத்து விவகாரங்களையும் இதன் வாயிலாக கையாள முடியும். அத்துடன், நாட்டின் பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி மற்றும் சுற்றுலாவை மேம்படுத்துவது போன்றவற்றை கருத்தில் கொண்டும், இந்த சட்ட மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது.வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக குடியேறுவோரை தடுப்பதற்காக, குடியேற்றம் தொடர்பான விதிமுறைகளை கடுமையாக்கும் பணியில், உலகில் பல நாடுகள் ஈடுபட்டுள்ளன. சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிராகவே, பல நாடுகளில் சமூக, அரசியல் சூழ்நிலைகளும் உள்ளன. அந்த வரிசையில் தான், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசும், இந்த புதிய சட்ட மசோதாவை உருவாக்கியுள்ளது. இந்த மசோதா இன்னும் பார்லிமென்டில் நிறைவேற்றப்படவில்லை. நிறைவேறினால், அதிலுள்ள கடுமையான விதிமுறைகளும், தண்டனைகளும் அமலுக்கு வரும்.வெளிநாட்டினர் எவரும், நம்நாட்டில் தடையின்றி, அனுமதியின்றி தங்கியிருக்க, நம் அரசியல் சட்டம் உரிமை அளிக்கவில்லை. அதை மேலும் உறுதி செய்யும் வகையில், தேசத்தின் பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் எந்த வெளிநாட்டவரும், இந்திய மண்ணில் நுழையவோ, தங்கியிருக்கோ, இனி அனுமதிக்கப்பட மாட்டார்கள்.அதே நேரத்தில், இந்த சட்ட மசோதாவில் உள்ள சில விதிமுறைகள் மிகவும் கடுமையாக இருப்பதாகவும், அதிகாரிகளால் தவறாக பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும், அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும் உள்ளதாகவும், எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.அத்துடன், இந்த சட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை எதிர்த்து மேல்முறையீடு செய்யவும் வாய்ப்பு இல்லை என்ற புகாரும் கூறப்படுகிறது. எனவே, வெளிநாட்டவர்களுக்கு எதிராக, இந்தச் சட்டத்தை பயன்படுத்தும் விஷயத்தில், மத்திய அரசு எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். இல்லையெனில், உலக அரங்கில், நம் நாட்டின் கவுரவத்திற்கு பாதிப்பு ஏற்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Dharmavaan
மார் 24, 2025 16:51

தீவிரவாதிகளுக்கு என்ன கவுரவம்


senthilanandsankaran
மார் 24, 2025 12:32

முதலில் வெளிநாடுகள் எப்படி இந்தியர்களுக்கு விசா கொடுக்கிறது அதன் நிபந்தனைகள் என்ன என்பதை தெரிந்துகொண்டு இங்கு கருத்து கூறுங்கள் ..


K.n. Dhasarathan
மார் 24, 2025 11:20

எந்த ஒரு சட்டமானாலும் நாடாளுமன்றத்தில் வைத்து விவாதித்து, குற்றங்கள் குறைகளை நிவர்த்தி செய்து, சோதனை செய்து மசோதாவை சட்டமாக்க வேண்டும், முன்னாள் சட்டம் இயற்றியவர்கள் யாவரும் முட்டாள்கள் போலவும், இவர்களுக்குத்தான் ஞானம் இருப்பது போலவும் நடந்தால் எந்த மசோதாவும் நிறைவேற்ற முடியாது, இந்த அடிப்படையை மறந்தால் பெரும் போராட்டங்களை சந்த்தித்துதான் ஆஹா வேண்டும்.


ஆரூர் ரங்
மார் 24, 2025 12:02

பார்லிமெண்டில் விவாதத்துக்கு எதிர்கட்சிகள் தயாராக இல்லை. கூச்சல் குழப்பம் செய்ய மட்டுமே விரும்புகின்றனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை மதிக்கக் கூடாது. தாங்கள் விரும்பப்படுவதை ஆனால் மட்டுமே விவாதிக்க வேண்டும் என நினைக்கின்றனர். அதுதான் பிரச்சினையே.


Dharmavaan
மார் 24, 2025 16:53

காலத்துக்கேற்ற சட்டம் தேவை


P.Sekaran
மார் 24, 2025 10:34

இதற்கு முதல் ஆளாக எதிர்பார்களே. வந்தேரிகளை ஆதரிக்கும் திருட்டு திராவிட கூட்டம்.


hariharan
மார் 24, 2025 09:56

இந்திய தம்பதிகளுக்கு வெளிநாட்டில் பிறந்த குழந்தைக்கு அந்த நாட்டின் குடியுரிமை அங்கு பிறந்ததால் கிடைத்துவிடுகிறது. இந்த இந்திய தம்பதியினர் இந்தியா வருவதற்கு பிறந்த குழந்தைக்கு இந்திய விசா வாங்க வேண்டும். அதற்குரிய விண்ணப்பம் பெற்றோர்களால் பூர்த்தி செய்து, குழந்தையின் கட்டைவிரல் ரேகை வைக்க வேண்டுமாம். அநேகமாக வெளிநாடுகளில் கைரேகை வைக்கும் பழக்கம் என்னவென்றே தெரியாது. அவ்வாறு வைக்கப்பட்ட குழந்தையின் கைரேகையை நோட்டரி பப்ளிக் சான்றளிக்க வேண்டுமாம். பிறந்த பச்சிளம் குழந்தையின் கைரேகையை விண்ணப்பத்தில் பதியும் பொழுது அந்த குழந்தைக்கு ஏதேனும் தெரியுமா? குழந்தையின் கைரேகை முதிர்ச்சியடையும் பொழுதுதான் நிலையாக இருக்கும். ஒரு படிவத்தில் கைரேகை வைப்பதின் பொருள், அவரின் சுய நினைவு அனைத்தையும் சார்ந்தது இந்த கைரேகை. எப்பொழுதும் உறங்கிக்கொண்டு இருக்கும் குழந்தைக்கு என்ன தெரியும்? இதுபோல சட்டம் இயற்றிய உத்தமர் யார் என தேடுகிறேன்.


ஆரூர் ரங்
மார் 24, 2025 11:07

பல அரபு நாடுகளில் வேலைக்குச் செல்லும் போது அடையாள அட்டை வழங்குவதற்கு முன் கைரேகை, கண் கருவிழி படம் எடுக்கிறார்கள். குழந்தைகளும் பெண்களும் கடத்தப்படுவது TRAFFICKING அதிகரிக்கும் இக்காலத்தில் அங்க அடையாளங்கள் பதியப்படுவது அத்தியாவசியமான ஒன்று.


Savitha
மார் 24, 2025 11:08

வெளிநாடுகளில் பிறந்த குழந்தையின் சான்றிதழ் வழங்கும் போது, குழந்தையின் பெயர், பெற்றோர் பெயர், முகவரி இவற்றோடு, குழந்தையின் கால் ரேகை அல்லது கை ரேகையையும் மையில் தொட்டு, பதிய வைக்கும் பழக்கம் இப்போதும் உள்ளது, குழந்தை மாறி விட்டால், இந்த ரேகை அடையாளம் மூலம் சரியான குழந்தையை கண்டுபிடிக்க இது இன்றும் அமலில் உள்ள ஒரு எளிய வழி, இது தெரியாமல் ரேகை மாறும், குழந்தைக்கு என்ன தெரியும் என்று உளர கூடாது, பிறந்ததில் இருந்து மாறாமல் இருப்பது நம் கை மற்றும் கால் பாதத்தின் ரேகைகள் மட்டுமே.


Dharmavaan
மார் 24, 2025 16:59

முட்டாள்களுக்கு விஞ்ஞானம் தெரியாது உனக்கு புரியவும் புரியாது


Mahesh Mu
மார் 24, 2025 09:44

இதில் அனைவருக்கும் எங்கே ஒரே நீதி இருக்கிறது?


vivek
மார் 24, 2025 10:42

அனைவருக்கும் ஒரே நீதி...பாகிஸ்தானில் இருக்கிறது...நீங்கள் அங்கு போகலாம்


Muthu
மார் 24, 2025 19:52

திமுக வை எதிர்த்து ஏதாவது வலைத்தளத்தில் பதிந்தால் இங்கே என்ன நடக்கிறது. எல்லோருக்கும் ஒரே நீதியா நடக்கிறது. மோடியை என்ன திட்டினாலும் கண்டு கொள்ளாது தமிழக போலீஸ்.. ஆனால் திமுகவின் தலைவர்களை திட்டினால் அதிகாலையில் போலீஸ் உங்கள் வீட்டில். ஊப்பி எல்லாம் ரொம்ப நியாயவான் மாதிரி பேசுறது


கிஜன்
மார் 24, 2025 07:28

பிரதமரை அருகில் வைத்துக்கொண்டு .... அமெரிக்கா அதிபர் ... USAID .... பணம் உங்களுக்கு வரவில்லையா .... ஒருவேளை அந்த குரூப்க்கு ... காங்க்கு ... சென்றிருக்கலாம் என்று கிண்டலாக கூறி பிரதமரை நெளிய வைத்தார் .... சுதந்திரம் வாங்கித்தந்த காங் ...கட்சிக்கு இந்த கேவலம் தேவையா ?


ஆரூர் ரங்
மார் 24, 2025 09:15

காங்கிரஸ் தான் சுதந்திரம் வாங்கிக் கொடுத்தது என்று நம்ப வைத்தது நேருவின் சாமர்த்தியம். அதே நேரத்தில் இன்னும் 50 நாடுகள் பெரிய போராட்டம் ஏதுமின்றி விடுதலை பெற்றன. அங்கெல்லாம் காந்தி நேரு இல்லையே.


Dharmavaan
மார் 24, 2025 16:56

இந்திரா காங்கிரஸ் சுதந்திரம் வாங்கி கொடுக்கவில்லை இது டூப்ளிகேட் திருட்டு காங்கிரஸ் ஒரிஜினல் காங்கிரஸ் சிண்டிகேட் என்று கேலி செய்யப்பட்டது


Dharmavaan
மார் 24, 2025 17:02

நேருவின் சாமர்த்தியம் அல்ல நம்பின மக்கள் அப்பாவிகள்


naranam
மார் 24, 2025 06:34

சட்ட விரோதமாக நம் நாட்டில் தங்கியுள்ள பங்களாதேஷில் கும் ரோஹிங்யாக்களும் உடனடியாக வெளியேற்றப் பட வேண்டும். சட்ட விரோதம் குடியேறிகளுக்கு உதவி செய்வோர் யாராக இருந்தாலும் அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை