உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாநிலமே கொந்தளிக்கிறது; மவுனமாக இருந்து தட்டிக் கழிப்பதா: மம்தாவுக்கு கவர்னர் கண்டிப்பு

மாநிலமே கொந்தளிக்கிறது; மவுனமாக இருந்து தட்டிக் கழிப்பதா: மம்தாவுக்கு கவர்னர் கண்டிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: '' மாநிலத்தின் வளர்ச்சிக்கு இடையூறாக உள்ள விஷயத்தில் மாநில அரசு அமைதியாக இருந்து பொறுப்பை தட்டிக்கழிக்கக் கூடாது'' என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை கவர்னர் ஆனந்த போஸ் கண்டித்துள்ளார்.கோல்கட்டாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவமனையில் இளம் பயிற்சி டாக்டர் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். நாடு முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இச்சம்பவத்திற்கு நீதி கேட்டு, பொது மக்கள் மற்றும் டாக்டர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=tei150st&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மாநில அரசுக்கு ஆனந்த போஸ் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அதில் கூறப்பட்டு உள்ளதாவது: மாநில அமைச்சரவை உடனடியாக கூடி, மக்கள் போராட்டம் குறித்து விவாதிப்பதுடன், அவர்களின் கோரிக்கையை ஏற்று கோல்கட்டா போலீஸ் கமிஷனரை மாற்றுவது குறித்து முடிவெடுக்க வேண்டும். மாநிலத்தின் வளர்ச்சிக்கு இடையூறாக உள்ள விஷயத்தில் மாநில அரசு அமைதியாக இருந்து பொறுப்பை தட்டிக்கழிக்கக்கூடாது. அரசியல் சாசனப்படி, சட்டத்தின் ஆட்சிக்கு உட்பட்டு செயல்பட வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பெற்றோர் குற்றச்சாட்டு

இளம் பயிற்சி மருத்துவரின் பெற்றோர் கூறுகையில், '' ஆரம்பம் முதலே போலீசார் சரியாக விசாரணை நடத்தவில்லை. ஆதாரங்களை அழிக்கவே முயற்சி செய்தனர். அனைவரும் எங்களுடன் இருக்க வேண்டும். நீதி எளிதில் கிடைத்து விடாது என்பது எங்களுக்கு தெரியும். ஆனால், அது கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். எங்களுடன் இருப்பவர்களே எனது பலமாக நினைக்கிறேன். தவறான தகவல்களை பரப்பி, வழக்கை திசை மாற்ற கோல்கட்டா போலீஸ் கமிஷனர் முயற்சி செய்தார்.''. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

25 நாடுகளில் போராட்டம்

இதனிடையே, பெண் டாக்டருக்கு நீதி கேட்டு நடந்து வரும் போராட்டம் இந்தியாவில் இருந்து பரவி 25 நாடுகளில் 130 நகரங்களில் நடந்தது. ஜப்பான், ஆஸ்திரேலியா, தைவான், சிங்கப்பூரில் முதலில் சிறிய அளவில் துவங்கிய இந்த போராட்டம்,பிறகு படிப்படியாக ஐரோப்பா கண்டத்திற்கு பரவியது. அமெரிக்காவில் 60 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

சிபிஐ அறிக்கை தாக்கல்

இந்நிலையில் பெண் டாக்டர் கொலை தொடர்பாக விசாரணை நடத்தும் சிபிஐ, உச்சநீதிமன்றத்தில் தகவல் அறிக்கையை தாக்கல் செய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Lion Drsekar
செப் 09, 2024 14:50

அப்படிதான் இங்கேயும் கொந்தளித்தது ,பெரிய பெட்டிகளில் புகார், அங்கு பல கோடி, இயந்திரத்தில் எல்லாமே பதிவாகியிருக்கிறது , நாளை கைது, . நாடகமே உலகம், இப்போது என்ன நிலை, மயான அமைதி இதுதான் உண்மை, ஆகவே படித்துவிட்டு எல்லா செய்திகளையும் மறப்பதே நல்லது, வந்தே மாதரம்


God yes Godyes
செப் 09, 2024 14:24

யோவ் டிஸ்மிஸ் சாட்டையை தூக்கு.


Nandakumar Naidu.
செப் 09, 2024 13:07

முதலில் இந்த ராட்சசியின் ஆட்சியை உடனடியாக டிஸ்மிஸ் செய்து விட்டு இவளை சிறையில் அடைத்து இவள் செய்த பாவங்களுக்காக கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்.


Venkatesan
செப் 09, 2024 12:34

மமதை அரசுக்கு அடிதடி தகறார் மற்றும் கட்ட பஞ்சாயத்து பண்ண தெரியும். மாநிலத்தை குட்டிசுவராக்க தெரியும். ஒழுங்கா அரசு நடத்த ... அது மட்டும் தெரியாது.


Barakat Ali
செப் 09, 2024 12:33

கூடிய விரைவில் ஒரு டீம்கா எம் பி யும் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு துக்ளக்காருக்கு கடிதம் எழுதுவார் ...... மக்களை போலி வாக்குறுதிகள் கொடுத்து ஆட்சியைப் பிடித்தோம் ... அனைத்து மக்களவைத் தொகுதிகளையும் கூட்டணி வென்றது .... ஆனால் மக்களுக்கு நாங்கள் செய்தது என்ன ???? அதனால் மனசாட்சி உறுத்துகிறது .... இனி பதவியில் தொடர விரும்பவில்லை ன்னு எழுதி கொடுப்பாரு ....


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 09, 2024 11:46

நீங்களா விலகிட்டா உங்களுக்கு மரியாதை ன்னு சொல்லுறாரு கவர்னர் .....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை