உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நம் ராணுவம் பந்தாடிய பாக்., விமானங்களை பழுது நீக்கி தந்தது அமெரிக்க அரசு

நம் ராணுவம் பந்தாடிய பாக்., விமானங்களை பழுது நீக்கி தந்தது அமெரிக்க அரசு

புதுடில்லி : ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையின் போது, நம் ராணுவம் நடத்திய தாக்குதலால் சேதமடைந்த 'எப் - 16' ரக பாக்., போர் விமானங்கள், ரேடார்களை அமெரிக்கா பழுதுநீக்கி தந்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல் நடந்த பயங்கரவாத தாக்குதலில், 26 சுற்றுலா பயணியர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக நம் ராணுவம் நடத்திய, 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையில் அந்நாட்டின் ராணுவ உள்கட்டமைப்புகள் குறிவைத்து தகர்க்கப்பட்டன. முட்டுக்கட்டை குறிப்பாக, ஜகோபாபாதில் உள்ள ஷபாஸ் விமானப்படை தளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமெரிக்க தயாரிப்பான, 'எப் - 16' ரக போர் விமானங்கள் இரண்டு சேதமடைந்தன. ராவல்பிண்டி நுார் கான் விமானப்படை தளத்தில், 'எப் - 16' ரக போர் விமானம் மற்றும் அமெரிக்க, 'ஹெர்குலீஸ்' என்றழைக்கப்படும், 'சி - 130' விமானங்கள் துல்லியமாக தாக்கி அழிக்கப்பட்டன. அதே போல் சர்கோதா, ரஹிம்யார் கான் மற்றும் முஷாப் விமானப்படை தளங்களில் இருந்த ஓடுபாதைகள், ஹேங்கர்கள் மற்றும் தொலைதொடர்பு சாதனங்கள் ஆகியவையும் நம் விமானப்படை தாக்குதலில் கடுமையாக சேதமடைந்தன. இதனால் செய்வதறியாது திகைத்த பாகிஸ்தான் அரசு, சேதங்களை செப்பனிட ரகசிய அவசரகால நிதியில் இருந்து, 3,900 கோடி ரூபாய் வரை கடந்த மே மாதம் ஒதுக்கியது. இந்நிலையில், சேதங்களை சரிசெய்ய சீனா, முன்வந்தபோது, 'எப் - 16' ரக போர் விமானங்களின் தொழில்நுட்பங்கள் எங்கே சீனாவால் திருடப்பட்டு விடுமோ என அஞ்சி, அமெரிக்கா அதற்கு முட்டுக்கட்டை போட்டது. வெள்ளமே காரணம் இதனால், பழுது நீக்க அமெரிக்காவே உதவ வேண்டும் என பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர், அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்து கோரிக்கை விடுத்தார். இதைத் தொடர்ந்து தோஹா, அபுதாபி மற்றும் அமெரிக்காவின் மேரிலேண்ட் பகுதியில் இருந்த அமெரிக்க சிறப்பு நிபுணர்கள் குழுவை, டிரம்ப் நிர்வாகம் பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்தது. அவர்கள், சேதமான ராணுவ உள்கட்டமைப்புகளை சரிசெய்து தந்ததாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. நம் ராணுவத்தால் ஏற்படுத்தப்பட்ட பெரும்பாலான சேதங்களை அமெரிக்கா சீர்படுத்தி கொடுத்தாலும், ரஹிம்யார் கான் விமானப்படை ஓடுதளம் இதுவரை செப்பனிடப்படவில்லை என தெரிகிறது. அதற்கு தெற்கு பஞ்சாபில் ஏற்பட்ட கடுமையான வெள்ளமே காரணம் என கூறப்படுகிறது. இதற்கிடையே, எதிர்காலத்தில் இந்திய தாக்குதலை எதிர்கொள்ளும் வகையில் அதிநவீன ரேடார் அமைப்புகளை, அமெரிக்கா மற்றும் சீனாவிடம் இருந்து வாங்கவும் பாகிஸ்தான் விமானப்படை முடிவு செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

sankaranarayanan
அக் 07, 2025 11:47

பாகிஸ்தானின் விமானங்களை மட்டுந்தான் அமெரிக்க அதிபர் டிரம்பு தற்போது சரி செய்து கொடுக்க முடியும் ஆனால் அவர்களை சரி செய்ய முடியவே முடியாது அதற்கு இந்திய படை ஒன்றால்தான் முடியும்


Rathna
அக் 07, 2025 11:18

பாக்கிஸ்தான் ராணுவ விமான தளத்தில் நிரூபித்து இருந்த 5 - F16 வகை விமானங்கள் S400 ஏவுகணை மற்றும் இந்திய போர் விமான குண்டு வீச்சில் எரிந்து போனது. இது அமெரிக்கா ராணுவ திறனுக்கு விடப்பட்ட மிக பெரிய சவாலாகும். உலக ராணுவ சந்தையில், அமெரிக்காவின் பெயர் கெட்டு போனது. இதனால் இந்தியாவின் ஏற்றுமதி மீது அதிக அளவு வரி விதிக்கிறது.


ஆரூர் ரங்
அக் 07, 2025 11:14

ராணுவ சப்ளைக்கு சீனா, அமெரிக்காவை நம்பியிருக்கும் வரை பாகிஸ்தான் பற்றி நமக்கு பயமில்லை. இது போன்ற சாதனங்களை ரிப்பேர் (ஆக்கி) அளித்த சேவைக்காகவே அமைதிக்கான நோபல் பரிசை அளிக்கலாம். இ‌ந்த டப்பா விமானங்களை நம்பி போர் புரியப்போகும் பாக் விமானி( தியாகி)களுக்கு அட்வான்ஸ் அஞ்சலி.


Ramesh Sargam
அக் 07, 2025 09:28

அடுத்தமுறை பாகிஸ்தான் வாலாட்டினால் அவர்கள் விமானங்கள் பழுது அடையாது, முற்றிலும் நாசம் செய்யப்படும் பழுதே செய்யமுடியாத அளவுக்கு.


முதல் தமிழன்
அக் 07, 2025 08:57

எதுக்கும் இன்னொரு ஆபரேஷன் பெயரை சொல்லுவோம். பீகார் தேர்தல் வேற கண்ணுல பயம் காட்டுது. அப்புறம் நிறைய தேர்தல் வருது சீக்கிரம். பாக்கிஸ்தான் பேரை வெச்சி செய்யணும்.


Mohan
அக் 07, 2025 09:43

இருந்தாலும் உங்க அளவுக்கு முடியுமா ..


Keshavan.J
அக் 07, 2025 10:35

இன்று முதல் நீ முதல் தமிழன் அல்ல நீ ....


Kudandhaiyaar
அக் 07, 2025 11:34

வன்மமும் சகோதரபாசமும் ஒருங்கே வெளிப்படுத்தியதற்கு நன்றி.


shyamnats
அக் 07, 2025 08:31

அமெரிக்கா என்றுமே நமக்கு நம்பகமான நாடாக இருந்ததில்லை. பாகிஸ்தான் போன்ற நாடுகளை கொம்பு சீவி விட்டு நம்மை பதட்டத்தில், சிக்கல்களில் வைப்பதே அந்த நாட்டின் கொள்கையாக இருந்திருக்கிறது. சரியான முறையில் அமெரிக்காவை கையாள வேண்டும்.


duruvasar
அக் 07, 2025 07:53

வீடியோ ஆதாரமிருந்தால்தான் நம்புவோம். வீடியோ வெளியிட்டாலும் அது கட்டிங் அண்ட் ஓட்டிங் என சொல்லிவிடுவோம். இப்ப என்ன செய்வீங்க ? ட்ராவிடனை ஏமாற்றவேமுடியாது


Iyer
அக் 07, 2025 07:22

ஏற்கனவே அமெரிக்க போர் விமானங்கள் ""சுத்த உதவாக்கரை"" என்ற உண்மை வெளிப்பட்டுவிட்டது. பழுது நீக்கப்பட்ட விமானங்கள் - என்ன செய்துவிடமுடியும்?


Anand
அக் 07, 2025 10:35

இனி அவைகளை விமானம் மாதிரி நிறுத்தி வைத்துக்கொள்ளவேண்டியதுதான்.


Sahadevan
அக் 07, 2025 06:53

சரிசெய்ய முடியாத அளவிற்கு தாக்குதல் இருந்திற்க வேண்டும். அறைகுறையாக விட்டது சரியில்லை. வருங்காலத்தில் வெளிநாட்டு துரோகிகளை விட உள்நாட்டு துரோகிகளின் தாக்குதல் தான் அதிகம் இருக்கும்


Santhakumar Srinivasalu
அக் 07, 2025 05:57

விமானங்களை சரிசெய்து பாக்கை நமக்கு எதிராக பயங்கரவாத்தை வளர்த்து விடுகிறார ட்ரம்ப்!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை