உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நடைமுறைக்கு வந்தது வாயுயான் விதேயக் சட்டம்

நடைமுறைக்கு வந்தது வாயுயான் விதேயக் சட்டம்

புதுடில்லி :கடந்த, 90 ஆண்டுகளாக இருந்த விமானங்கள் சட்டத்துக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள, 'வாயுயான் விதேயக்' மசோதாவுக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்தார். இதையடுத்து இது சட்டமானது.விமானங்கள் தயாரிப்பு தொடர்பாக, 1931ல் அமல்படுத்தப்பட்டது விமானங்கள் சட்டம். இந்த சட்டம், 21 முறை திருத்தப்பட்டுள்ளது. தற்போதைய மற்றும் எதிர்கால தேவைக்கு ஏற்ப இந்தச் சட்டத்தை மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, வாயுயான் விதேயக் மசோதா லோக்சபாவில் கடந்த அக்டோபரில் நிறைவேறியது. நடப்பு குளிர்கால கூட்டத் தொடரில், கடந்த வாரம் இந்த மசோதா ராஜ்யசபாவில் குரல் ஓட்டெடுப்பில் நிறைவேறியது.இந்த மசோதாவுக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு, நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, இந்த சட்டம் அமலுக்கு வந்துள்ளது.விமானங்கள் வடிவமைப்பு, தயாரிப்பு, பராமரிப்பு, அதை சொந்தமாக வைத்திருப்பது, பயன்படுத்துவது, இயக்குவது, விற்பனை, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஆகியவற்றை கட்டுப்படுத்தும் மற்றும் ஒழுங்குபடுத்தும் நோக்கத்தோடு இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.பைலட்டுகளுக்கு பயிற்சி அளிப்பது, பயணியரின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தருவதுடன், சர்வதேச விதிகளை கடைப்பிடிக்கும் நோக்கத்தோடு, இந்தச் சட்டத்தில் பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. விமானத் துறையில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பான பிரிவுகளும் ஈடுபட்டுள்ளன.ராஜ்யசபாவில் இந்த மசோதா விவாதத்துக்கு வந்தபோது, சட்டத்துக்கு ஹிந்தியில் பெயர் வைக்கப்பட்டுள்ளதற்கு, திரிணமுல் காங்., - தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
டிச 13, 2024 14:07

இப்படி இந்தியில் பெயர் இருக்க கூடாது என நினைத்தால் குறுகிய மனப்பான்மை தவிர்த்து தேசியத்தோடு ஒன்றினைந்து குஜராத் மாநிலத்தவர் பிரதமர் ஆனது போல தமிழகத்திலும் இருந்து பிரதமர் ஆக வேண்டும். மாநில கட்சி தேசிய கட்சியாக வேண்டும். மொழிவாரி ஜாதி வாரி மதவாரி எண்ணங்கள் கூடாது.


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 13, 2024 11:34

ஹிந்தியில் பெயர் வைப்பது காலங்காலமாக - காங்கிரஸ் மற்றும் கூட்டணி அரசுகள்காலந்தொட்டு - இருந்துவரும் நடைமுறை ......... அவ்வளவு ஏன், திமுக மற்றும் த்ருணாமூல் இரண்டும் மத்திய அமைச்சரவையில் பங்குகொண்ட காலத்திலும் இந்த நடைமுறை இருந்தது ...... திமுக ஐடி டீமுக்காக இங்கே வேலை செய்பவர்களுக்கு இந்த உண்மை தெரியும் ..... இருந்தாலும் பழக்கத்தை விட முடியுங்களா ??


பாமரன்
டிச 13, 2024 08:16

எல்லா தரப்பு மக்களும் புரிந்து கொள்ள முடியாத கராபுரான்னு ஒரு பாஷையில் பெயர் வைப்பதை கூலிக்கு புகழ்ந்து பேசும் பகோடாஸ் இந்த சட்டம் ஹிந்தியில் மட்டுமே எழுதப்பட்டு இருக்கனும்னு சொல்லுமா?? அதுக்கு மட்டும் இங்கிலிபீஸ் தேவைப்படுதோ? கொஞ்சம் ப்ராக்டிகலா இருங்கய்யா... உங்களுக்கு கூட மூளை இருக்கனும்....


KavikumarRam
டிச 13, 2024 10:09

இப்படியே அரைவேக்காடாகவே உங்களை வைத்திருக்கும் திறமை திராவிட மாடலுக்கு மட்டுமே உண்டு.


Yes your honor
டிச 13, 2024 10:22

நீயும் கொஞ்சம் பிராக்டிகலா இருப்பா. நீதான் சிந்திக்க தெரியாம இப்படி எதோ உளறுகிறாய். ஆனால் உனது களவாணி கூட்டத்தில் பலபேர் இந்தி பேசக்கூடியவர்கள் தான். அப்படி உனக்கு இந்தி தேவையில்லை எனில் ராகுல் காந்தியையும் ஏற்றுக்கொள்ள கூடாது. அவரும் இந்தியிலும் ஆங்கிலத்திலும் தான் பேசுகிறார். இப்படியே எவ்வளவு நாட்கள் உருப்படாமல் திறிவீர்கள்?


பாமரன்
டிச 13, 2024 10:48

இந்த கவிக்குமார் மாதிரி முழுவதும் அழுகிப்போன மூளை நபர்கள் என்றுமே கேட்டதற்கு பதில் சொல்ல மாட்டாய்ங்க... ஏன்னா மூளை சலவை அப்படி...


Rpalni
டிச 13, 2024 08:11

...ஹிந்தியில் பெயர் வைக்கப்பட்டுள்ளதற்கு, திரிணமுல் காங்., - தி.மு.க.// அரபி அல்லது உருதுவில் வைத்தால் ஓகேவா மொழியையும் பிணத்தை வைத்துமே இவர்களது திருட்டு அரசியல்


Kalyanaraman
டிச 13, 2024 07:28

இவர்களுக்கு மத்திய அரசு எது செய்தாலும் எதிர்ப்பதே குறிக்கோள். எதிர்ப்பதற்காகவே எதிர்க்கிறார்கள்.


அப்பாவி
டிச 13, 2024 07:24

யாமறிந்த மொழிகளிலே இந்தி போல் இனிதாவதெங்கும் காணோம். பஹுத் அச்சா ஹைன்.


visu
டிச 13, 2024 06:39

இதுபோல சட்டங்களுக்கு ஹிந்தி ல் பேர் வைத்தால் எப்படி புரியும் தீவிரமாக எதிர்க்க வேண்டிய விஷயத்தில் எதிர் கட்சிகள் அலட்சியமாக உள்ளன


Balasubramanian
டிச 13, 2024 06:02

விமானம் கூட சம்ஸ்கிருதம் தானே! வாயு யான் என்பதும் அஃதே! தமிழில் தான் வேண்டும் என்றால் வளி உந்தி என்று வைக்கலாம் ஆனால் இப்படி ஒவ்வொரு மாநிலமும் அடம் பிடிக்க ஆரம்பித்தது விட்டால்?!


Balasubramanian
டிச 13, 2024 06:03

விமானம் கூட சம்ஸ்கிருதம் தானே! வாயு யான் என்பதும் அஃதே! தமிழில் தான் வேண்டும் என்றால் வளி உந்தி என்று வைக்கலாம் ஆனால் இப்படி ஒவ்வொரு மாநிலமும் அடம் பிடிக்க ஆரம்பித்தது விட்டால்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை