உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தலைமை நீதிபதி கவாயை தாக்க முயற்சி; சுப்ரீம் கோர்ட்டில் பரபரப்பு

தலைமை நீதிபதி கவாயை தாக்க முயற்சி; சுப்ரீம் கோர்ட்டில் பரபரப்பு

புதுடில்லி: டில்லியில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கவாயை வழக்கறிஞர் ஒருவர் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த வழக்கறிஞரை பாதுகாவலர்கள் வெளியேற்றினர்.சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதியாக கவாய் பதவி வகித்து வருகிறார். இவரை இன்று (அக் 06) மத்திய பிரதேசத்தில் கஜூராகோ கோவிலில் தலை இல்லாத சிலையை மாற்றக்கோரிய,வழக்கு விசாரணையின் போது வழக்கறிஞர் ஒருவர் தாக்க முயன்றார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=wjbsko90&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதுமட்டுமின்றி அந்த வழக்கறிஞர் கவாய் இருக்கைக்கு அருகே சென்று காலணியை வீச முயன்றார். பின்னர் அந்த வழக்கறிஞரை சுப்ரீம் கோர்ட்டில் இருந்த பாதுகாவலர்கள் வெளியேற்றினர்.அப்போது அந்த வழக்கறிஞர் கூச்சலிட்டவாறே வெளியே சென்றார். வழக்கு விசாரணையின் போது, ''சிலை மாற்றியமைப்பதற்கு கடவுளிடமே கேட்டுக் கொள்ளுங்கள்'' என தலைமைநீதிபதி கவாய் கூறியிருந்தார். அப்போது தலைமை நீதிபதி கவாய், எந்த தயக்கமும் இல்லாமல், நீதிமன்றத்தில் இருந்த வழக்கறிஞர்களை தங்கள் வாதங்களை தொடருமாறு கேட்டு கொண்டார். ''இதற்கெல்லாம் கவனம் சிதற தேவையில்லை. நாங்கள் கவனம் சிதறவில்லை. இதனால் எனக்கு எந்த பாதிப்பும் இல்லை'' என தலைமை நீதிபதி கவாய் தெரிவித்தார்.அனைத்து மதங்களையும் மதிப்பவன் நான் என்று தலைமை நீதிபதி கவாய் கூறினார். தலைமை நீதிபதி கவாய் மீது காலணி வீச முயன்ற வழக்கறிஞர் ராகேஷ் கிஷோரிடம் விசாரணை நடந்து வருகிறது. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியை தாக்க முயன்ற சம்பவம் பரபரப்பை கிளப்பி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 66 )

Vijay Muthumalai
அக் 08, 2025 05:50

கடவுளிடம் கேள் என்று சொல்ல நீதிமன்றம் எதற்கு? எல்லா மதத்தையும் மதிப்பவன் என்று தனக்குத் தானே சொல்வதனால் என்ன பிரயோசனம்? இப்படி சொல்லும் அனைவரும் குறி வைப்பது இந்து மதத்தை மட்டும் தான் இதே போன்ற கருத்தை மற்ற மதம் சம்பத்தப்பட்ட வழக்குகளிலும் எதிர்பார்க்க முடியுமா? இந்த வயதில் இவ்வளவு தெளிவு, உறுதி வழக்கறிஞர் ராகேஷ் கிஷோரை நான் ஒரு ஹீரோவாகப் பார்க்கிறேன்.


MARUTHU PANDIAR
அக் 07, 2025 19:42

இந்துமதக் கடவுளுக்கு சாதியில்லை என்று கிண்டலடித்திருக்கிறார். அவருடைய பதவியின் மாண்பு?


Krishnaswamy Balasundaram
அக் 07, 2025 14:40

The Supreme court judge very bad behaviour. The current CJI not qulified.


JAYACHANDRAN RAMAKRISHNAN
அக் 07, 2025 10:38

செக் ரிட்டர்ன் வழக்குகள் கூட விசாரித்து தீர்ப்பு வழங்கத் தெரியாதவர்கள் நீதிபதிகள் என்று சொல்லி கொள்பவர்கள் உள்ள நீதிமன்றங்களில் இருக்கும் நீதிபதிகள் எப்படி நடந்து கொள்வார்கள்.


Durai Kuppusami
அக் 07, 2025 08:23

அனைத்து மதங்களையும் மதிப்பவன் நான்...அதுசரி அந்த மாதிரி நீங்க நடந்துகொள்ள வில்லையே இதை நீங்க அந்த கடவுளிடம் கேளுங்கள் என்று எப்படி சொன்னீங்க இது தேவையில்லாத வார்த்தை... எப்படி பேசணும்னு தெரிஞ்சு பேசுங்க.....


தலைவன்
அக் 08, 2025 14:54

ஏனப்பா திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை ??? என்று பெரியவாயெலல்லாம் உங்களுக்கு சொல்லித்தரலியா??


Anantharaman Srinivasan
அக் 07, 2025 00:23

தலைமை நீதிபதிக்கு இந்து கடவுள்கள் மீது அப்படியென்ன எதிர்ப்பு ..? இந்திய நீதிமன்றமாக இருந்ததால் வெறும் காலணி வீச்சோடு நின்று விட்டது.


Jayaraman Ramaswamy
அக் 06, 2025 21:43

தகுதி இல்லாதவர்கள், தற்பெருமை உடையவர்கள் பதவிக்கு வந்தால் என்ன நடக்கும் என்பதை இந்த சம்பவம் எடுத்து காட்டுகிறது. இது இவருக்கும் பொருந்தும். கடவுளிடம் போய் கேளுங்கள் என்று சொன்னால் நீதி மன்றங்கள் தேவை இல்லை. எல்லோரும் எல்லாவற்றிற்கும் கடவுளிடம் முறை இடுவோம்.


ச பாலாஜி
அக் 06, 2025 21:28

வன்மமான பொறுப்பற்ற கருத்தை இத்தகைய பதவியிலிருப்பவர் வெளியிடுவது துரதிருஷ்டமானது. ஆயினும் எதிர் நடவடிக்கை ஏற்கதக்கதல்ல.


Madhavan
அக் 06, 2025 21:23

கோர்ட் வளாகங்கள் நீதி தேவதையின் இருப்பிடம் என்பதை ஒத்துக் கொள்வதானால் எவரும் இனி செருப்பு, ஷூ அணிந்து உள்ளே செல்லக் கூடாது, நீதிபதிகள் உள்பட.


D Natarajan
அக் 06, 2025 21:01

தவளை தன் வாயால் கெடும். அது போல ஏன் ஹிந்து கடவுளை பற்றி பேச வேண்டும். தன்னை திருத்திக்கொள்ள வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை