உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சஞ்சு சாம்சனின் வாழ்க்கையை சீரழித்ததே அந்த 4 பேரு தான் ; தந்தை வேதனை

சஞ்சு சாம்சனின் வாழ்க்கையை சீரழித்ததே அந்த 4 பேரு தான் ; தந்தை வேதனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: தனது மகனின் வாழ்க்கையை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்கள் தோனி, கோலி மற்றும் ரோகித் ஷர்மா தான் காரணம் என்று சஞ்சு சாம்சனின் தந்தை விஸ்வநாத் குற்றம்சாட்டியுள்ளார். கேரளாவைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன், அணியில் இடம் கிடைக்காமல் தொடர்ந்து அவதிப்பட்டு வருகிறார். தற்போது, தென்னாப்ரிக்காவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடருக்கான அணியில் சேர்க்கப்பட்டார். முதல் போட்டியில் சதம் அடித்த சாம்சன், அடுத்தடுத்த 2 போட்டிகளில் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். டி20 கிரிக்கெட் போட்டிகளில் அடுத்தடுத்து சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். முன்னணி வீரர்களான கோலி, ரோகித் ஷர்மா, ஜடேஜா ஆகியோர் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்து விட்டதால், இனி சஞ்சு சாம்சன் இந்திய அணியில் நிலையான இடத்தை பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தன் மகனின் கிரிக்கெட் வாழ்க்கையை சீரழித்ததே முன்னாள் கேப்டன்களான தோனி, கோலி, ரோகித் ஷர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தான், என்று சஞ்சு சாம்சனின் தந்தை விஸ்வநாத் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக மலையாள மீடியா ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது: முன்னாள் கேப்டன்களான தோனி, கோலி, ரோகித் ஷர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் என் மகனுக்கு போதிய வாய்ப்பை வழங்கவில்லை. இதனால், என் மகனின் கிரிக்கெட் வாழ்க்கையின் முக்கியமான 10 ஆண்டுகள் சீரழிந்து விட்டது. பல வேதனைகள், அவமானங்களை கடந்து என் மகன் தற்போது வலிமையாக எழுந்து நிற்கிறான், எனக் கூறினார். வங்கதேசத்திற்கு எதிரான கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் சஞ்சு சாம்சன் சதம் அடித்தது குறித்து விமர்சித்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்தின் விமர்சனத்திற்கும், விஸ்வநாத் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது: என் மகனின் ஆட்டம் குறித்து ஸ்ரீகாந்த்திடம் இருந்து வந்த கமென்ட் என்னை மிகவும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. 'வங்கதேசத்திற்கு எதிராக மட்டுமே சஞ்சு சாம்சன் சதம் அடிப்பார்', என ஸ்ரீகாந்த் கூறியுள்ளார். வங்கதேசத்திற்கு எதிராக ஸ்ரீகாந்த் வெறும் 26 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். ஆனால், என் மகன் சஞ்சு சாம்சன் சதம் அடித்துள்ளார். சச்சின், ராகுல் டிராவிட் போல அவனும் சிறந்த வீரன், குறைந்தபட்சம் அதையாவது மதிக்க வேண்டும், என வேதனையுடன் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Bala
நவ 14, 2024 17:24

தென்னக இரயில்வேயில் விளையாட்டு சங்கத்தில் இது போன்ற மலையாளிகளின் ஆதிக்கத்தால் வாய்ப்பு பரி போன ஏராளமான நம் தமிழக வீரர்களை பட்டியலிட முடியும். ஈயத்தை பார்த்து பித்தளை இளிக்க கூடாது. இந்த ஆள் இவ்வளவு காலம் ஏன் இதை கூறவில்லை??


senthil kumar
நவ 14, 2024 16:15

No consistency from him, then who will give opportunity. still many tamilnadu players are there who are good and they are waiting for opportunity. he should not talk same as yuvarj father. In cricket only talk about numbers. many new players came in ipl one ipl they are top and next ipl nothing 3rd ipl they are out. one example of Good player is Sandeep sharma bowler showing Consistency in all ipl still he didn't get chance to play for national level team continously. Mukesh Sharma, Saini, Deepak Chahar. everyone wants money by playing national team.


Arasu
நவ 14, 2024 14:33

ராகுல் டிராவிட், அணில் கும்ப்ளே போன்ற கர்நாடகாவை சேர்ந்தர்வர்களை .. கோச் ஆக போடா கூடாது


Narasimhan
நவ 14, 2024 14:08

இங்கேயும் வடக்குக்குத்தான் முக்கியத்துவம். தென்னிந்திய வீரர்களுக்கு எப்போதுமே இரண்டாம்தர தான். பும்ராவை காட்டிலும் அதிக விக்கெட் எடுத்தவர் அஸ்வின். ஆனால் BCCI ஒப்பந்தத்தில் பும்ரா A+ ஆனால் அஸ்வின் A தான். இதுபோல் தான் சஞ்சய் சாம்சன் கதையும். சொல்லிக்கொண்டே போகலாம். கேள்வி கேட்டால் பிரிவினைவாதி என்பார்கள்.


நிக்கோல்தாம்சன்
நவ 14, 2024 14:07

மலையாள புத்தியை காட்டிவிட்டான் , எங்கே போனாலும் தங்களுக்கே முன்னுரிமை என்று பக்கத்து மாநிலங்களையெல்லாம் குப்பை போட்டு பாழ்படுத்தி , தமிழக ட்ரைனை எல்லாம் அபகரித்து அசிங்கமாய் நடந்து கொள்ளுபவர்களுக்கு அடுத்தவரை குறை சொல்லுவதே வேலை


ponssasi
நவ 14, 2024 14:06

யாரையும் குறைத்து மதிப்பிடக்கூடாது, வீரர்கள் தனக்கான இடத்தை நிரந்தரமாக தக்கவைக்க போராடத்தான் செய்வார்கள், அனைவரும் போராடித்தான் வந்துள்ளனர் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பாவது கிட்டியது சிலருக்கு அந்த வாய்ப்பும் இல்லை.


r ravichandran
நவ 14, 2024 13:58

எம் எஸ் தோனி மீது இவருக்கு என்ன வன்மம் என்று தெரியவில்லை. அவர் ஓய்வு பெற்று 4 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. மேலும் கிரிக்கட் விமர்சனங்களை இவர் தனி பட்ட தாக்குதலாக எடுத்து கொள்ள கூடாது.


vadivelu
நவ 15, 2024 07:15

எம் எஸ் டோனி விக்கெட் கீப்பர், சஞ்சுவும் விக்கெட் கீப்பர், தினேஷ் கார்த்திக்கும் விக்கெட் கீப்பர். அதெப்படி மூன்று பெரும் ஒரு டீமில் இருக்க முடியும். சிறந்தவர் டோனி என்பதால் சஞ்சு தேர்வாக வில்லை.


Anand
நவ 14, 2024 13:55

அவர்கள் சீரழித்தார்களோ இல்லையோ ஆனால் உன்னோட வாயால் சீரழிக்கப்போகிறாய்.....


Bala
நவ 14, 2024 13:39

நுணலும் தன் வாயால் கெடும். இது தேவை இல்லாத பேச்சு.


M.COM.N.K.K.
நவ 14, 2024 13:34

குறைசொல்வது என்பது எப்போதும் மனிதனின் ஓர் இயல்பான ஒன்றுதான் இதை சகிப்புத்தன்மையோடு ஏற்றுக்கொள்வதுதான் உண்மையான மனிதனுக்கு அழகு


சமீபத்திய செய்தி