உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாஜ பார்வையில் இருந்து ஆர்எஸ்எஸ் இயக்கத்தை புரிந்து கொள்ள முயற்சிப்பது தவறு: மோகன் பகவத்

பாஜ பார்வையில் இருந்து ஆர்எஸ்எஸ் இயக்கத்தை புரிந்து கொள்ள முயற்சிப்பது தவறு: மோகன் பகவத்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: பாஜ பார்வையில் இருந்து ஆர்எஸ்எஸ் இயக்கத்தை புரிந்து கொள்ள முயற்சிப்பது மிக பெரிய தவறாகும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறி உள்ளார்.கோல்கட்டாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்து கொண்டு பேசுகையில் கூறியதாவது; ஆர்எஸ்எஸ் போல் வேறு எந்த இயக்கமும் இல்லை. ஒப்பீடுகள் மூலம் ஆர்எஸ்எஸ்சை புரிந்து கொள்வது மிக பெரிய தவறாகும். ஆர்எஸ்எஸ்சை புரிந்து கொள்ள, அதில் நேரடியாக ஈடுபடுவது அவசியம். ஏன் என்றால் வெளியில் இருந்து பார்க்கும் போது அதை புரிந்து கொள்ள முடியாது. காரணம் எல்லோரும் அதை தங்கள் சொந்த கண்ணோட்டத்தில் பார்க்கின்றனர். சங்கங்களின் தன்னார்வலர்கள் பல்வேறு துறைகளில் உள்ளனர். சிலர் அரசியலில் உள்ளனர், சிலர் அதிகாரமிக்க பதவிகளை வகிக்கின்றனர். எனவே பாஜ கண்ணாடியின் மூலம் ஆர்எஸ்எஸ்சை புரிந்து கொள்ள முயற்சிக்கிறார்கள். இது மிக பெரிய தவறு. மக்கள் ஆர்எஸ்எஸ் இயக்கத்தை அறிந்து இருக்கின்றனர். ஆனால் அதன் பணிகளை பற்றி அறிந்திருக்கவில்லை. இந்த இயக்கம் ஏன், எதற்காக நிறுவப்பட்டது? அதற்கான பதிலை ஒரே வாக்கியத்தில் சுருக்கமாக கூறலாம்.இந்தியா என்பது வெறும் புவியியல் பகுதி அல்ல. அது ஒரு நாகரிகம், கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தின் பெயராகும். அப்படிப்பட்ட ஒரு தேசத்தின் சமூகத்தை பாதுகாப்பது ஆர்எஸ்எஸ் பணியாகும். எந்த அரசியல் நோக்கத்துடனும் இது நிறுவப்பட்டது அல்ல. யாருக்கும் போட்டியாக இயங்கவில்லை. எந்த சூழ்நிலைக்கும் எதிர்வினையாக செயல்பட்டது இல்லை. யாருக்கும் எதிரானது அல்ல. ஆர்எஸ்எஸ் இந்து சமூகத்தின் அமைப்பு, மேம்பாடு மற்றும் பாதுகாப்பிற்காக செயல்படுகிறது. 1857ம் ஆண்டு ஆங்கிலேயர்களுக்கு எதிரான நாடு தழுவிய போராட்டம் நடந்தது. இருப்பினும் அந்த போரில் நாங்கள் தோற்றோம். இந்த தோல்வியின் பலனாக, அக்காலத்தின் சம தலைவர்கள் சிந்திக்க தொடங்கினர். நாம் ஒருமுறை தோற்கடிக்கப்பட்டு இருந்தாலும். மீண்டும் ஆயுதம் ஏந்தி, எதிர்ப்பை தெரிவித்து, ஆங்கிலேயர்களை விரட்டியடிக்க வேண்டும்.ஹிந்துக்கள் எப்போதுமே இந்த நாட்டிற்கு பொறுப்பானவர்களாகவே கருதப்படுகிறார்கள். நாட்டில் என்ன நடந்தாலும், நல்லது-கெட்டது எது நடந்தாலும் தங்களை ஹிந்துக்கள் என்று கருதாதவர்கள் அரிதாகவே கேள்வி கேட்கப்படுகிறார்கள். ஆனால், தங்களை ஹிந்துக்கள் என்று பெருமையுடன் சொல்லிக் கொள்பவர்களிடம் நாட்டுக்காக என்ன செய்துவிட்டீர்கள் என்று எப்போதும் கேட்கிறார்கள். ஏன் எனில் இது பாரம்பரியமாக ஹிந்துக்களின் நிலம். இவ்வாறு மோகன் பகவத் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

தஞ்சை மன்னர்
டிச 22, 2025 11:05

நாம் அமெரிக்கா சீனா சிங்கப்பூர் லண்டன் என்று சொல்லிக்கொண்டே இருக்கத்தான் போகிறோம் போல


Appan
டிச 21, 2025 20:45

உலகளவில் மதம் சார்ந்த அரசியல் வறுமை ஏழ்மையைத்தான் கொடுத்துள்ளது. பக்கத்து பாகிஸ்தான், மியன்மார், சிறி இலங்கை ..இப்படி சொல்லி கொண்டே போகலாம். அதற்க மதம் சரியில்லை என்று சொல்ல முடியாது, மதம் . மதம் சமூகத்தின் ஒழுக்கம், தர்மம், நல்லது கேட்டத்தை போதிக்கிறது. அரசியலில் மதம் ஆட்சிசெய்யல் சமூக கலாச்சாரத்தை பாதுகாக்க வேண்டும். இந்திய பன்முக நாடு. இதை மதித்து அரசியல் இருக்க வேண்டும். இல்லை நாட்டின் வளர்ச்சி பாதிக்க படும் .இது நாட்டின் ஒருமைக்கு எதிராக போகும்.


GMM
டிச 21, 2025 18:25

அரசியலில் இருந்து விலகி கொள்வது இயக்க விருப்பம். இலக்கு ஒன்று என்று இருக்க வேண்டும். அணு ஆயுத போர் வராது. சமஸ்கிருத மந்திரம் கட்டாயம். அர்ச்சனை பயில மத்திய அரசு, தனியார் பள்ளிகள் வசதி செய்ய வேண்டும்.


Sundar R
டிச 21, 2025 17:29

THE FOLLOWING IS THE MESSAGE TO BE UNDERSTOOD FROM SHRI MOHAN BAGHAWATJI, SARCHANGCHALAK, RSS FROM KOLKATA TODAY: If a person proudly says that he is a Hindu, many people are asking him, "What have you done for this country?". If a person feels ashamed about calling himself as a Hindu and finds pleasure in being in the company of the Anti-Hindus, doesnt care even a hair about both good and bad that are happening in our country and votes only for Anti-nationals, Separatists, Sessionists, Anti-socials, Anti-Hindu, Anti-Hindi, Universally known Huge Corruptive parties in every election are very very rarely questioned by or sometimes not at all questioned by any people. Only those who think themselves as true Hindus are feeling and talking with others about their responsibility, care and the development of our country.


SUBBU,MADURAI
டிச 21, 2025 17:28

RSS Already Started Working On Ground to Defeat DMK in TamilNadu. Moreover, RSS BJP Held Meeting on Who to Project Against Stalin.


SUBBU,MADURAI
டிச 21, 2025 17:22

RSS Chief Mohan Bhagwat: Even if India becomes a $3 trillion economy, its nothing new many nations are rich. But the world LACKS what we have: religion and spirituality. When we grow in this, the world will see us as Vishwaguru!


SUBBU,MADURAI
டிச 21, 2025 17:19

தமிழ் நாட்டின் வரலாற்றை திராவிட இயக்கங்கள் இல்லாமல் எழுத முடியாது என்று திமுகவினர் கூறும் போது இந்தியாவின் வரலாற்றை RSS இல்லாமல் எழுத முடியாது. இஸ்லாமிய தீவிரவாதிகளிடமிருந்து ஹிந்துக்களைக் காப்பதற்காக உருவாக்கப்பட்ட அமைப்புதான் RSS இயக்கம். ஆனால் 500 ஆண்டுகளுக்கு மேல் அடிமைகளாகவே இருந்த ஹிந்துக்களால் RSS எனும் தூய இயக்கத்தை இன்னும் முழுமையாக புரிந்துகொள்ள முடியவில்லை அதற்கு காரணம் இங்குள்ள திராவிட கட்சிகள்...


SUBBU,MADURAI
டிச 21, 2025 17:15

உக்ரைனை போட்டு தாக்கும் ரஷ்யாவின் போர் தளவாடங்களின் பெரும் பகுதியை நாம் அனுப்புவதாக நம் மோடியின் அரசாங்கம் மீது எப்படி அநியாயமாக குற்றம் சாட்டப்படுகிறது என்பதை நீங்கள் கவனித்தீர்களா?(நாம் அனுப்புவது உண்மைதான்) நம்மை குற்றம் சொன்ன அனைவரும் இப்போது ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்கிறார்கள். ஐரோப்பா, சீனா, அமெரிக்கா போன்ற நாடுகள். ஆனால் எப்படியோ பழி இந்திய அரசாங்கத்தின் மீது விழுந்துள்ளது! இதேபோல்தான் ஆர்.எஸ்.எஸ் நாஜிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக அநியாயமாக குற்றம் சாட்டப்பட்டது. கம்யூனிஸ்டுகள், தேவாலயம், பெரிய அமெரிக்க நிறுவனங்கள் என அனைவரும் நாஜிகளுடன் ஒப்பந்தங்கள் வைத்திருந்தனர் ஆனால் எப்படியோ பழி ஆர்.எஸ்.எஸ் மீது விழுந்தது! இது எத்தனை பேருக்கு தெரியும்?


SUBBU,MADURAI
டிச 21, 2025 17:00

RSS was formed 100 years ago


ஆரூர் ரங்
டிச 21, 2025 16:52

ஒவ்வொரு மாநில பாரதீய ஜனதா துணை அல்லது இணை அமைப்புச் செயலாளராக ஒரு ஆர்எஸ்எஸ் பிரதிநிதிதானே இருக்கிறார்? அவருடைய ஆணைப்படிதானே மற்றவர்கள் செயல்பட்டு வருகிறார்கள்? இன்னமும் ஆர்எஸ்எஸ் க்கும் பிஜெபிக்கும் தொடர்பில்லை என எப்படிக் கூறுகின்றனர்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை