உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியாவின் வளர்ச்சிக்கு அமெரிக்க வரிவிதிப்பு தடையாக இருக்காது; சொல்கிறார் ஆர்பிஐ கவர்னர்

இந்தியாவின் வளர்ச்சிக்கு அமெரிக்க வரிவிதிப்பு தடையாக இருக்காது; சொல்கிறார் ஆர்பிஐ கவர்னர்

புதுடில்லி: இந்தியாவின் வளர்ச்சிக்கு அமெரிக்காவின் வரிவிதிப்பு நடவடிக்கை பெரிய தடையாக இருக்காது என்று ஆர்பிஐ கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்திரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது; உலகப் பொருளாதாரத்தில் பல சவால்கள் இருந்தும், இந்தியா கடந்த ஆண்டு 8 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. இந்தியா பெரும்பாலும் உள்நாட்டு பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டது.எனவே, வெளிநாட்டு (அமெரிக்கா) வரிவிதிப்பு நடவடிக்கைகள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. அமெரிக்காவின் வரி விதிப்பால் சர்வதேச வர்த்தகம் சீர்குலைந்ததுடன், பல்வேறு நாடுகளின் பொருளாதார வளர்ச்சியையும் பாதித்துள்ளது.கொரோனா மற்றும் ரஷ்யா - உக்ரைன் போரினால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து விரைவாக மீண்டு வந்துள்ளோம். பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். 8 சதவீதத்தில் இருந்து 1.5 சதவீதமாகக் குறைத்திருப்பது, 8 ஆண்டுகளில் இல்லாத ஒன்று. மத்திய அரசு மற்றும் நிதிக் குழுவினர் ஒருங்கிணைந்து செயல்படுவது தான் இந்த நிலைக்கு காரணமாக இருக்கிறது. அதேபோல, அமெரிக்க டாலருக்கு நிகராக, இந்திய ரூபாயின் மதிப்பு, மற்ற நாடுகளின் கரன்சியைப் போல் அதிகம் மதிப்பிழக்கவில்லை, இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

hariharan
அக் 16, 2025 11:46

அமெரிக்காவின் வரி விதிப்பினால் சில சங்கடங்களை ஏற்படுத்தியது உண்மை. ஆனால் இந்தியா என்றைக்கும் எவரையும் சார்ந்திருக்கக்கூடாது என உறைக்க வைத்தது. நமது பொருள்களை வேறு நாடுகளுக்கு கட்டுப்படியாகும் விலையில் விற்பதற்கு இது வழிவகை செய்திருக்கிறது. புதுப்புது ஒப்பந்தங்கள் வேறு நாடுகளுடன் செய்வதற்கு தக்க தருணம். வேறு நாடுகளிலிருந்து இறக்குமதியை எதிர்பார்க்காமல் நாமே உற்பத்தி செய்ய காலம் கனிந்துவிட்டது. நமது தயாரிப்புகளை உள்நாட்டு சந்தையிலேயே விற்பனை செய்தால் கைமேல் வருவாய் கிடைக்கும். மற்றவர் கையை தலையணையாக வைத்து உறங்குவதை விட்டு ஒழிப்பதற்கு நல்ல வாய்ப்பு. இதுவும் கடந்து போகும். வளமான இந்தியா உருவாகும். ஆனால் சாலைகளையும் நீர் வழித்தடங்களையும், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் உபயோகப்படுத்தும் வசதிகளை மலேசியா,,சிங்கப்பூர் போல சுத்தமாகப் பேண வேண்டும். லஞ்சம், சிபாரிசு, தறமற்ற வேலையாட்கள், கட்டுமானம் இவற்றை அறவே ஒழிக்க வேண்டும். நமது சுற்றுலாத்தலங்களை அனைவரும் பயன்படுத்த மக்களை ஊக்குவிக்க வேண்டும்.


ஜெய்ஹிந்த்புரம்
அக் 16, 2025 09:42

“அமெரிக்க வரி விதிப்பின் காரணமாக அமெரிக்காவுக்கான இந்திய ஏற்றுமதி நாலு மாதத்தில் 37.5% சரிவு”, என்று இன்னொரு செய்தி இன்று வெளியாகியுள்ளது. ஆர்பிஐ கவர்னரும் புளுக வேண்டிய நிர்பந்தம். ஏன்?


Amsi Ramesh
அக் 16, 2025 10:47

அமெரிகாவுடனான வர்த்தகம் குறைந்திருக்கிறது உண்மையே.... பிற நாடுகளுடனான வர்த்தகம் உயர்ந்துள்ளதே


vivek
அக் 16, 2025 11:14

அதை டாஸ்மாக் வருமானத்தை வைத்து சரிகட்டலாம்...உனக்கு இருநூறும் தரலாம்


ஆரூர் ரங்
அக் 16, 2025 11:57

இந்தாண்டு மட்டும் அமெரிக்கா செலுத்த வேண்டிய கடனும் வட்டியும் 9 டிரில்லியன் டாலர்கள் என்கிறார்கள். நிதியில்லாத நிலையில் அரசு இயந்திரம் ஸ்தம்பித்துள்ளது. கிட்டத்தட்ட திவால் நாட்டுக்கு ஏற்றுமதி பண்ணா என்ன கிடைக்கும்?


Kumar Kumzi
அக் 16, 2025 12:51

எப்போதும் இந்தியாவுக்கு எதிராக தான் கருத்து சொல்லுவா


KOVAIKARAN
அக் 16, 2025 09:08

உண்மைதான். நமது இந்திய நாட்டின் பொருளாதாரம் வலுவாகவே உள்ளது. மற்ற வளர்ந்த, வளர்ந்துகொண்டிருக்கும் நாடுகளில் அவர்களது currency குறைந்த அளவிற்கு நமது ரூபாய் மதிப்பு குறைவான அளவிலேயே மதிப்பு தந்துள்ளது. நமது இந்திய பொருளாதார வளர்ச்சி மற்ற நாடுகளின் வளர்ச்சியை அதிகம் என்று INTERNATIONAL MONETARY FUND என்றழைக்கப்படும் சர்வதேச நாணய நிதியம் சமீபத்தில் கூறியுள்ளது என்று நாம் தினமலர் மற்றும் பிற ஆங்கில நாளிதழ்களில் வாசித்து தெரிந்து கொண்டோம். இந்தியாவின் பொருளாதாரத்தை உலகிலேயே பெரிய சந்தையான நம் நாட்டின் சந்தையையே ஈட்டிக்கொடுக்கும். எனவே, இந்தியாவின் வளர்ச்சிக்கு அமெரிக்க வரிவிதிப்பு தடையாக இருக்காது என்று உறுதியாக கூறலாம்.