உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வாக்காளர் அடையாள அட்டை மட்டுமே ஓட்டளிக்கும் முறையை உறுதி செய்யாது

வாக்காளர் அடையாள அட்டை மட்டுமே ஓட்டளிக்கும் முறையை உறுதி செய்யாது

புதுடில்லி : “வாக்காளர் அடையாள அட்டை மட்டுமே, ஒருவர் ஓட்டளிக்கும் முறையை உறுதி செய்யாது; சம்பந்தப்பட்டவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவது அவசியம்,” என, டில்லி தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. டில்லியில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இந்நிலையில், திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை தயாரிக்கும் பணியில் டில்லி தேர்தல் கமிஷன் ஈடுபட்டுள்ளது. வாக்காளர்களை சரிபார்க்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அந்தந்த பூத் அலுவலர்களால், கடந்த ஆக., - அக்., வரையிலான காலகட்டத்தில் வாக்காளர்களை சேர்க்கும் பணியும், பட்டியலில் இல்லாத நபர்களை நீக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, வரும் 6ம் தேதி புதிய பட்டியல் வெளியாக உள்ளது.இது குறித்து டில்லி தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்படுவதாவது:கடந்த அக்., 29ல் வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலில், பெயர் இல்லாதவர்களை சேர்க்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. வரும் 6ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே வெளியிடப்பட்ட பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் தங்கள் பெயரை பட்டியலில் சேர்க்கவும், இறந்தவர்களின் பெயரை நீக்கவும், அதற்கான படிவத்தை பூர்த்தி செய்து, தேர்தல் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். வாக்காளர் அடையாள அட்டை இருந்தால் மட்டுமே, ஓட்டளிக்கும் முறை உறுதி செய்யப்படாது. வாக்காளர் பட்டியலிலும் உங்கள் பெயர் இடம்பெற்றிருத்தல் அவசியம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Rengaraj
ஜன 02, 2025 11:07

ஓட்டுப்போட வேண்டும் என்றால் அவரவர் தங்கள் பகுதியில் தங்களுடைய வாக்குச்சாவடியில் வோட்டு உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும். வாக்காளர் அடையாள அட்டை இருந்தால் அந்த அடையாள எண்னை தேர்தல் கமிஷனின் இணையத்தளத்திலோ அல்லது அதற்கென உள்ள மொபைல் ஆப் மூலமாகவோ சரிபார்த்துக்கொள்ளலாம். நேரில் செல்ல வேண்டியதில்லை . வாக்காளர்கள் தங்கள் பெயரை சரிபார்க்க ஏதுவாக தேர்தல் கமிஷனும் அந்தந்த வாக்குச்சாவடி வாக்காளர் பட்டியலை தமிழ் அகரவரிசையிலோ அல்லது ஆங்கில எழுத்து வரிசையில அல்லது வாக்காளர் அடையாள எண் வரிசையிலோ வெளியிடவேண்டும்.


சாண்டில்யன்
ஜன 02, 2025 08:07

வாக்காளர் வசிப்பிட மாற்றம் செய்தால் உடனடியாக திருத்தம் செய்து கொள்ள வழியில்லை ஒரு குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே அந்த வழியுண்டாம் அது எப்போதுவருமென்று பார்த்துக் கொண்டே இருக்க முடிவதில்லை அடுத்து அது வந்தபோது எங்கள் வாக்கு சாவடியில் சென்று கேட்டால் என் வீடு எந்த வார்டில் உள்ளதென தெரியாததால் இரண்டு மூன்று முகாம்களுக்கு போய் அலைந்தும் நாலாவது இடத்துக்கு போகச் சொன்னார்கள் ஐந்து ஓட்டுகள் வீணானது ஓட்டளிப்பது நம் கடமையாம் தமிழ்நாட்டில் அதை தடுப்பது பிஜேபியின் தாரக மந்திரமாம்


SANKAR
ஜன 02, 2025 08:57

basically you are right. but you need not wait for a specific day. change can be applied for in PC or Cell portals. EC will register and give you a number. when appropriate time comes change will be made and you can download e card.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 02, 2025 10:09

தமிழ்நாட்டில் அதை தடுப்பது பிஜேபியின் தாரக மந்திரமாம் ..... உங்கள் திமுக அப்படிச் செய்ய விட்டுவிடுமா ???? உங்களைப்போன்ற சிறுபான்மையினர் ஒட்டுக்களை இழக்க திமுக தயாராக ருக்குமா ????


Kalyanaraman
ஜன 02, 2025 08:06

முட்டாள்தனமாக இருக்கிறதே ஒவ்வொரு முறை வாக்காளர் பட்டியல் அப்டேட் செய்யப்படும் போதும் ஒவ்வொரு வாக்காளனும் அந்த முகாமில் போய் தனது பெயர் உள்ளதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டுமா??


SANKAR
ஜன 02, 2025 08:59

can be done online. PC or cell phone enough


Subramanian
ஜன 02, 2025 06:45

Why not they introduce a process that the person whose name is d from the voter’s list gets a SMS so that he will know whether someone in’s deliberately trying to remove his or her name


Barakat Ali
ஜன 02, 2025 06:44

அப்ப வோட்டர் ஐடி எதுக்கு ????


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை