உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / லோக்சபாவில் வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதா தாக்கல்

லோக்சபாவில் வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதா தாக்கல்

புதுடில்லி: வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதா, லோக்சபாவில் இன்று (ஏப்ரல் 02) மதியம், 12:00 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டடது. எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவை ஏற்காததால், சபையில் விறுவிறுப்பான விவாதம் நடந்து வருகிறது.சமூக நலத்திட்டங்களுக்காக முஸ்லிம்கள் எழுதி வைக்கும் சொத்துக்களை நிர்வகிக்க வக்ப் வாரியம் அமைக்கப்பட்டது; இவை, இதற்கென உருவாக்கப்பட்ட வக்ப் வாரிய சட்டப்படி நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. இந்த சட்டத்தில் சில திருத்தங்களை மத்திய அரசு செய்துள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=y2pcztrr&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பார்லி., குளிர்கால கூட்டத்தொடரில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது, எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. இதைத் தொடர்ந்து கூட்டுக்குழு ஆய்வுக்கு மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. பா.ஜ., எம்.பி., ஜெகதாம்பிகா பால் கூட்டுக்குழுவுக்கு தலைமை வகித்தார். முஸ்லிம்கள் தரப்பை மளமளவென அழைத்து ஆலோசனை நடத்தி விரைவாக பணிகளை முடித்தார். இந்நிலையில் இன்று (ஏப்ரல் 02) லோக்சபாவில் வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதாவை மதியம் 12:10 மணிக்கு, பார்லிமென்ட் விவகாரம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தாக்கல் செய்தார்.

விரிவான ஆலோசனை

பின்னர் கிரண் ரிஜிஜூ பேசியதாவது: வக்ப் சட்டத்திருத்தத்திற்கு 97 லட்சம் கோரிக்கைகள் பெறப்பட்டு உள்ளது. பார்லிமென்ட் வரலாற்றில் வேறு எந்த மசோதாவிற்கும் இவ்வளவு விரிவாக ஆலோசனை நடை பெற்றதில்லை. இவ்வாறு அவர் பேசினார்.மசோதா மீது விறுவிறுப்பான விவாதம் நடந்து வருகிறது. மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.

காங்கிரஸ் குற்றச்சாட்டு

லோக்சபாவில் காங்கிரஸ் எம்.பி., வேணுகோபால் பேசியதாவது: இந்த வக்ப் மசோதாவில் தங்களது கருத்துகளை முன் வைக்க எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். நீங்க சட்டத்தையே தகர்க்கிறீர்கள். திருத்தம் செய்ய பல விதிகள் உள்ளன. இதற்கு கருத்து தெரிவிக்க நேரமே அளிக்கவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.இதற்கிடையே, சர்ச்சைக்குரிய வகையில் மசோதா அம்சங்கள் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.

அமித்ஷா பதில்

இதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 'பார்லிமென்ட் கூட்டுக்குழு பரிசீலனையில் எதிர்க்கட்சிகள் தங்களின் கருத்துக்களை முன்வைத்துள்ளனர்' என பதில் அளித்தார்.வக்ப் வாரிய சொத்துக்களை நிர்வகிக்கும் கவுன்சிலில், பெண்களையும் உறுப்பினராக்குவது, வக்ப் சொத்துக்களின் மீதான பிரச்னைகளில் மாவட்ட கலெக்டரே இறுதி முடிவு எடுப்பது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

GMM
ஏப் 02, 2025 20:06

காங்கிரஸ் , பிஜேபி , திராவிடம் .. ஓட்டு வங்கியை கைப்பற்ற போட்டி போட்டு சிறுபான்மை சலுகைகளை அதிகரித்து வருகின்றனர். வக்பு வாரியம் சட்டம் /திருத்தம் தேவையற்றது. இந்துக்கள் சுமார் 50 வருட ஆவணம் பராமரிக்க முடியவில்லை. 500 வருட ஆவணம் கிருத்துவர், இஸ்லாமியரிடம் எப்படி இருக்கும். ? அரசிடம் ஆவண காப்பகத்தில் இருக்க வேண்டாமா. ? நாட்டின் நீதிமன்றமும் , அரசியல் கட்சிகளும் இந்துக்களை ஏமாற்றி வருகின்றன. சுதந்திரம் பின் அரசியல் சட்டம் அனைத்தையும் புதுப்பித்து இருக்க வேண்டும். பிரிட்டிஷ் ஓட்டுரிமைக்கு தகுதி நிர்ணயித்து இருந்தது. அனைவருக்கும் ஓட்டு என்று மாற்றியதால், ஒற்றுமையற்ற இந்துக்கள் 2ம் தர குடிகளாக மாற்றப்பட்டு வருகின்றனர் . வக்ப் சட்டம் செல்லும். திருத்தலாம் .ஓட்டுரிமை தகுதி செல்லாது. திருத்தம் முடியாது. எப்படி. ? கிருத்துவர், இஸ்லாமியர் உழைத்தால் , இந்துக்களுக்கு அது போல் துணை கிடைக்காது. ஆனால் வெளிநாட்டு கட்டளை ஆதிக்கம் செலுத்த வழிகூறுகிறது.


GMM
ஏப் 02, 2025 17:00

இந்தியாவில் முஸ்லீம் கிருத்தவர் பிழைக்க குடியேறியவர்கள். இந்து கலாச்சாரத்திற்கு முற்றிலும் மாறுபட்ட கொள்கை. இவர்கள் மூதாதயர் இங்கு இருந்த வரலாறு இல்லை. நிலம் உரிமை பூர்விக குடிகளுக்கு மட்டும். வக்பு வாரிய சட்டம், , முஸ்லீம் பர்சனல் லா போன்றவை இந்திய சூழலுக்கு ஒத்து வராது . இதனை மத்திய அரசு நீக்க வேண்டும். இந்திய முஸ்லீம் மக்களுக்கு ஏற்றால் போல் புதிய சட்டம் இயற்ற வேண்டும். சர்வதேச கிருத்துவர், இஸ்லாமியருக்கு ஏற்றார் போல் சட்டம் தேவையா ? தேச பற்று மிக்க மத இணக்கம் வளர்க்க சட்டம் வேண்டும். பொது சிவில், கிரிமினல் ,1947 பின் சொத்துரிமை ஏற்பு சட்டம் தேவை.


Kumar Kumzi
ஏப் 02, 2025 16:32

வரும் போது சொத்துக்களோட வந்தானா


Krishna
ஏப் 02, 2025 15:49

வாக்ட் வாரியத்தினால் ஏழை இஸ்மானியர்களுக்கு பயன் இருப்பதாக தெரியவில்லை.


M Ramachandran
ஏப் 02, 2025 15:00

ஆகா இன்னைக்கு ஓசி பஜ்ஜி போண்டாக்கு ஆபத்தா


ஆரூர் ரங்
ஏப் 02, 2025 14:34

மூலப்பத்திரம் கூட அளிக்காமல் வாய் வார்த்தையாக வக்ஃபு க்கு சொத்து எழுதி வைக்க பழைய சட்டம் இடமளிக்கிறது என்றால் அதனை மாற்றத்தான் வேண்டும். வக்ஃபு வாரியம் தன்னிஷ்டத்திற்கு மாற்று மத வழிபாட்டுத்தலங்களை தன்னுடையது என அறிவிப்பது மத மோதல்களை ஏற்படுத்தாதா? இந்து ஆலயங்களை அரசே நிர்வகிக்க அறநிலையத்துறை சட்டம் இருப்பதைப் போல மற்ற சமயங்களுக்கு சட்டமே இயற்றக் கூடாதா ?


ஆரூர் ரங்
ஏப் 02, 2025 14:27

பெரும்பான்மையான ஜமாஅத் களில் பெண்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கத் தயங்கும் நிலையில் வக்ஃபு வாரியத்தில் இடம் என்றால் விடுவார்களா? மசூதிகளில் கூட அனுமதிப்பதில்லை. இன்னும்கூட இஸ்லாம் ஆண் பெண் சமத்துவ மதம் என்று திராவிட ஆட்கள் பேசுவது சிரிப்பை வரவழைக்கிறது.


Amar Akbar Antony
ஏப் 02, 2025 14:15

சமூக நலத்திட்டங்களுக்காக முஸ்லிம்கள் எழுதி வைக்கும் சொத்துக்களை நிர்வகிக்க வக்ப் வாரியம் அமைக்கப்பட்டது இதுதான் அடிப்படை உண்மையென்றால் எங்கிருந்து அவர்களுக்கு கிராமம் கிடைத்தது? கிடைத்ததெல்லாம் வக்ப்புக்கு சொந்தமானது என்பதால் தான் பிரச்சினையே? அதெப்படி அந்த மார்கத்திற்கே உரிய தந்திரம் கொஞ்சமா இருப்பாக ஆனால் கொஞ்சகாலத்திலேயே அந்த ஏரியா அவர்களாகவே இருப்பர் பின்னர் அந்த ஏரியாவே தங்களோடது என்பர். உதாரணம் லண்டன்.


கல்யாணராமன்
ஏப் 02, 2025 16:16

உண்மையை விளக்கி எழுதி விற்பனையில் பாதிப்பு ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் என்று கருதுகிறது.


தேச நேசன்
ஏப் 02, 2025 14:15

மசோதா நிறைவேற இறைவனை பிரார்த்திக்கிறேன்.


Oru Indiyan
ஏப் 02, 2025 13:23

இந்த கும்பல் எதிர் கட்சிகள் இல்லை. எதிரி நாடுகளின் கைக்கூலிகள். கூலிக்கு மாரடிக்கும் கட்சிகள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை