உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நாங்கள் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு: கார்கேவுக்கு மோகன் பகவத் பதிலடி

நாங்கள் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு: கார்கேவுக்கு மோகன் பகவத் பதிலடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: நாங்கள் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே சமீபத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை தடை செய்யப்பட வேண்டும் என்று கூறியதை அடுத்து, மோகன் பகவத் பதிலடி கொடுத்துள்ளார்.ஆர்எஸ்எஸ் அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று நான் வெளிப்படையாகவே கூறுகிறேன் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவரது மகனும் கர்நாடக அமைச்சருமான பிரியங்க் கார்கே அரசு நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களில் ஆர்.எஸ்.எஸ் நடவடிக்கைகளைத் தடை செய்யக் கோரினார். ஆர்.எஸ்.எஸ்ஸின் பதிவு எண் மற்றும் அவர்களின் நிதி ஆதாரத்தைக் கூட அவர் கேள்வி எழுப்பினார்.இந்நிலையில் பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சியில், பதிவு செய்யப்படாமல் செயல்படுவதற்காக ஆர்எஸ்எஸ்ஸை விமர்சிக்கும் காங்கிரஸ் தலைவர்களுக்கு அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத் பதிலடி கொடுத்து இருக்கிறார். அவர் பேசியதாவது: ஆர்எஸ்எஸ் தனிநபர்களின் அமைப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் அமைப்பு 1925ல் நிறுவப்பட்டது. எனவே நாங்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்தில் பதிவு செய்திருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா?சுதந்திரத்திற்குப் பிறகு, இந்திய அரசு பதிவை கட்டாயமாக்கவில்லை. நாங்கள் தனிநபர்களின் அமைப்பாக வகைப்படுத்தப்பட்டுள்ளோம், மேலும் நாங்கள் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு. வருமான வரித் துறையும் நீதிமன்றங்களும் ஆர்எஸ்எஸ்ஸை தனிநபர்களின் அமைப்பாகக் குறிப்பிட்டுள்ளன. மேலும் வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.நாங்கள் மூன்று முறை தடை செய்யப்பட்டோம். எனவே அரசாங்கம் எங்களை அங்கீகரித்துள்ளது. பதிவு செய்யப்படாதத்தற்கு பல விஷயங்கள் உள்ளன. ஹிந்து தர்மம் கூட பதிவு செய்யப்படவில்லை. ஆர்.எஸ்.எஸ்ஸில் காவி கொடி ஒரு குருவாகக் கருதப்பட்டாலும், இந்திய மூவர்ண கொடி மீது மிகுந்த மரியாதை வைத்து இருக்கிறோம். இவ்வாறு மோகன் பகவத் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

மணிமுருகன்
நவ 09, 2025 23:26

காங்கிரஸ் என்பது இந்திய மொழி அமைப்பா இந்தியாவில் தோன்றி இந்திய மொழியை பெயராக கொண்டு சுதந்திர போராட்டம் உலக யுத்தம் முதற்கொண்டு செஞ்சிலுவை சங்கத்திற்கு இணையாக பேசப்பட்ட ஒரு அமைப்பு யாரோ கொடுத்த பேரை வைத்து இன்று வரை ஓட்டிக்கொண்டிருக்கும் ஒரு அமைப்பு மற்றொரு அமைப்பை குற்றம் சொல்வது சரியாஇந்தியாவில் முதன்முதலில் 17-19 தோன்றிய சங்கம் பிரம்ம சமாஜ் தான் என்பதை மறக்க மறைக்கக் கூடாது காங்கிரஸ்


Krishna
நவ 09, 2025 20:01

Most of Indias Problems Will End If Divisive-Destructive AntiNation AntiNativePeople incl Culture ReligionLanguages Congress is Banned& all its Leaders are Jailed Without Bails.


என்றும் இந்தியன்
நவ 09, 2025 19:47

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே சமீபத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை தடை செய்யப்பட வேண்டும் என்று சொன்னார். அதை இப்படி படித்தால் உண்மை அர்த்தம் வரும் "காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே அமைப்பை தடை செய்யப்பட வேண்டும்"


Rathna
நவ 09, 2025 19:18

தேச விரோத சக்திகள், ஹவாலா செய்பவன், போதை பொருள் கடத்தி மதத்தை பரப்புபவன், குண்டு வைப்பவன், தேவை இல்லாமல் போராட்டம் செய்பவர்கள் எல்லாம் அரசியல் கட்சிகளால் பாதுகாக்க படுகிறார்கள். பல ஆயிரம் கோடி சொத்து சேர்த்தவன், அரசியல் அதிகாரம் செய்பவன் வேறு என்ன செய்வான். அவனுக்கு தேச பக்தி இயக்கங்களை பிடிக்கவில்லை.


SVR
நவ 09, 2025 18:38

ஆர் எஸ் எஸ் ரெஜிஸ்ட்ர் செய்யப்படட்டுத்தான் ஆக வேண்டும் என எந்த அரசியல் அமைப்பு சட்டத்தில் எந்த பிரிவில் சொல்லப்பட்டிருக்கிறது? எங்கும் இல்லை. அப்படி இருக்க இந்த கார்கே கூட்டம் ஏன் திரும்ப திரும்ப கூப்பாடு போட்டுக் கொண்டுருக்கிறது? எல்லாம் அரசியல் தான் காரணம். ஆர் எஸ் எஸ் கண்டிப்பாக காங்கிரசின் தயவில் இல்லை.


மனிதன்
நவ 09, 2025 17:04

பாவப்பட்டவனிடன் எல்லாம் எல்லா வரி என்ற பெயரில் கோவணத்தை உருவவேண்டியது, பிரிவினையை,வன்முறையை, தீவிரவாததை கற்றுத்தரும் அமைப்புக்கு வருமான வரிவிலக்கு.. நாடு வெளங்கிரும்....


bharathi
நவ 09, 2025 16:20

The Congress party have been asked to desolve after independence by Gandhi ji.. the so called named after Gandhi would respect him by implementing it?


Barakat Ali
நவ 09, 2025 15:33

சுதந்திரம் அடைந்த பின்னர் காந்தி என்ன சொன்னார் ???? சுதந்திரம் வாங்கிக்கொடுத்த கட்சி என்று சொல்லிச்சொல்லியே மக்களிடம் அக்கட்சி தொடர்ந்து ஒட்டு வாங்கிவிடும் என்று காந்தி எதிர்பார்த்தாரோ ???? அதை ஏன் காங்கிரஸ் செய்யவில்லை ????


சந்திரசேகர்
நவ 09, 2025 15:15

கருப்பு சிவப்பு நீலம் நிறத்திற்கு காவி நிறத்தை கண்டாலே எரிச்சல் தான் வருகிறது. ஏனென்றால் காவி ஒழுக்கம் மற்றும் தர்மத்தை போதிக்கிறது


Srini Raman
நவ 09, 2025 14:59

ஆர் எஸ் எஸ் அமைப்புதான் இந்துக்களுக்கு இருக்கும் ஒரே அமைப்பு. அதை ஏன் தடை செய்ய வேண்டும். சிறுபான்மையினருக்கு, பல கட்சிகள், பதிவு செய்யாத, செய்த அமைப்புகள் உள்ளனவே . அதை தடை செய்ய சொல்லி யாரும் கேக்க வில்லை.