உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்த காலத்தில் அதெல்லாம் பார்க்க முடியாது; ரஷ்யா உறவு குறித்த கேள்விக்கு ஜெய்சங்கர் பதில்

இந்த காலத்தில் அதெல்லாம் பார்க்க முடியாது; ரஷ்யா உறவு குறித்த கேள்விக்கு ஜெய்சங்கர் பதில்

புதுடில்லி: ''ரஷ்யாவுடன் நாங்கள் நட்புறவு வைத்தால், ஆஸ்திரேலியா கோபப்படும் என்பதை ஏற்க முடியாது. இந்த காலத்தில் அதையெல்லாம் பார்க்க முடியாது,'' என, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்டார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=m872w3c5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அப்போது அங்குள்ள 'டிவி சேனல்' ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டி, தற்போது ஒளிபரப்பாகியுள்ளது. அந்தப் பேட்டியில், ஜெய்சங்கர் கூறியுள்ளதாவது:உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளதால், ரஷ்யா மீது பல நாடுகள் பொருளாதாரத் தடை விதித்துள்ளன. நாங்கள் ரஷ்யாவுடன் நட்புறவுடன் உள்ளோம். இதற்கு ஆஸ்திரேலியா கோபப்படும் என்பதை எல்லாம் இந்த காலத்தில் பார்க்க முடியாது. தற்போது நட்புறவு என்பது தனிப்பட்ட அம்சம் கிடையாது.உதாரணத்துக்கு, எங்கள் அண்டை நாடான பாகிஸ்தானுடன் பல நாடுகள் நட்புறவு வைத்துள்ளன. அதற்காக நாங்கள் எவ்வளவு கோபப்பட வேண்டும். பல நாடுகள் தடை விதித்திருந்தபோதும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கினோம். எங்களுக்கு கிடைத்த வாய்ப்பை நாங்கள் பயன்படுத்தாமல் இருந்திருந்தாலும், சர்வதேச அளவில், கச்சா எண்ணெய்க்கு பெரும் தட்டுப்பாடு, சிக்கல் ஏற்பட்டிருக்கும். இது உலக நாடுகள் பலவற்றிலும், விலைவாசி உயர்வை ஏற்படுத்தியிருக்கும். எங்களுடைய நடவடிக்கையால் அது தவிர்க்கப்பட்டுள்ளது.மேலும், ரஷ்யாவுடன் நல்ல நட்பு உள்ளதால்தான், போரைத் தவிர்த்து, பேச்சில் ஈடுபடும்படி எங்களால் கூற முடிகிறது. அதற்கு உதவவும் தயாராக உள்ளோம் என்று கூற முடிகிறது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

KR india
நவ 14, 2024 19:30

திரு. ஆரூர் ரங் என்ற வாசகர் அவர்களுக்கு எமது பதில் - மத்திய நிதி அமைச்சர் அவர்கள் தனது துறையில் சிறப்பாக செயல்பட்டால், அவரை பாராட்டுவதில் எந்தவித தயக்கம் இல்லை ஆனால் யதார்த்தம் அப்படி இல்லை வருமான வரி துறையை எடுத்துக் கொண்டால், Income Tax Due Date 31-July க்கு பிறகு கூடுதலாக, 15 நாட்கள் மட்டும் Due Date நீட்டிக்க பல பேர் வேண்டுகோள் விடுத்தும், அவர் உதவி செய்ய வில்லை சரி நீட்டிக்க வேண்டாம். வருமான வரி இணையதளத்தையாவது தொழில்நுட்ப பிழை இல்லாமல் 24 மணி நேரமும் சரியாக செயல்படும் படி ஆவண செய்திருக்க வேண்டும். கடந்த ஜூலை கடைசி வாரத்தில், பல நாள்கள் IT இணையதளம் Maintenance We will resume at 3 a.m என்று காண்பித்தது ஆனால் காலை 5.30 க்கு தான் வேலை செய்தது. என்னிடம் முழு ஆதாரம் Screenshot proof இன்னும் உள்ளது கடைசி ஒரு வாரம் வெவ்வேறு நேரங்களில் இந்த தொழில்நுட்ப பிரச்சினை வந்தது. சரியாக தூங்காமல் கடுமையாக உழைத்தேன் எனினும் 2 வாடிக்கையாளர் விடுபட்டு விட்டது. கிட்டத்தட்ட ரூபாய் 50,000 மேல் எனக்கு நஷ்டம் காரணம் 01-ஆகஸ்ட் முதல் OLD TAX SCHEME BLOCK செய்து விட்டனர். NEW TAX SCHEME மூலமே வரி தாக்கல் செய்ய வேண்டி வந்தது. எனது வாடிக்கையாளருக்கு OLD TAX SCHEME தான் நல்ல லாபமாக இருந்தது. NEW TAX SCHEME மூலம் வரி தாக்கல் செய்யும் போது கூடுதலாக 52,500 Tax Challan கட்ட வேண்டி வந்து விட்டது. அது போக 5000 தாமத கட்டணம் வேறு வந்தது. அது போக Interest, மற்றும் Non Payment of Advance Tax Penalty வேறு சரி அதை விடுங்கள் Ministry of Corporate Affairs-க்கும் நிர்மலா அம்மையார் தான் மந்திரி. வருமான வரித்துறையை கூட ஏற்றுக் கொள்ளலாம். MCA என்று சுருக்கமாக அழைக்கப் படும் Ministry of Corporate Affairs துறையில் உள்ள அபராதத்தை கேட்டால் தலையை சுற்றும் DPT-3 Form என்ற ஒரு படிவம் உண்டு வருடா வருடம் 30 ஜூன் குள் தாக்கல் செய்ய வேண்டும். அது ஒரு பணம் புடுங்கும் வழிப்பறி படிவம் என்று கூட கூறலாம். Company Balance Sheet and Profit and Loss Account Statement உள்ள சில தரவுகளை 30-ஜூன் க்குள் பெரும்பாலான நிறுவனங்களால் பண்ண முடிய வில்லை. ஏனெனில் நிறுவனங்கள் Company Audit முடிய ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் முதல் வாரம் ஆகிவிடும். இதனால் சிறிய நிறுவனங்கள் வருடா வருடம் அபராதம் கட்ட வேண்டி உள்ளது. இதற்கு காங்கிரஸ் அரசாங்கமே பரவாயில்லை என்று கூற வைக்கிறது. கம்பெனி விதிமுறைகள் மட்டும் அல்லாமல், MCA இணையதள தொழில்நுட்ப பிரச்சினையும் உள்ளது. முன்பு காங்கிரஸ்ஆட்சியின் போது TATA Consultancy Service கீழ் சேவை அருமையாக இருந்தது. அவர்களின் ஒப்பந்தம் முடிந்த பின்பு BJP ஆட்சியில் இன்போசிஸ் contract கொடுக்கப் பட்டது. அது ஏதோ சுமாராக இருந்தது. அந்த contract முடிந்ததும் இப்போதுள்ள MCA contract என்பது ஒரு நிறுவனம் எவ்வாறு செயல்பட கூடாது என்பதற்கு உதாரணமாக உள்ளது படிவங்கள் upload செய்ய Offline முறை மூலமாக நிரப்பி Online முறையில் தாக்கல் செய்து வந்தோம் அது எளிமையாக இருந்தது. இப்போது அப்படி இல்லை Even a small Technical issue every time professionals are required to submit Grievance to their portal which is annoying அப்படியே முறையிட்டால், அதற்கு முறையான தீர்வும் கிடைப்பதில்லை ஒருமுறை எனக்கு தீர்வு பதிலில் எந்த பதிலும் பதியாமல் அதாவது Just Blank in Resolution Space RESOLVED என்று அவர்களாகவே முடித்து விட்டனர். இவற்றை எல்லாம் திருமதி. நிர்மலா அவர்கள் கவனத்தில் கொண்டு தங்கள் பணிக்காலத்திலேயே தங்கள் துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் நன்றி


Rpalnivelu
நவ 14, 2024 16:46

நான் மற்றும் எனது என்பதுதான் சரியான பாலிசி. கம்யூனிசம் எல்லாம் செத்துப் போன பாலிசி.


Joy Kizha
நவ 14, 2024 14:03

It is wrong to say US sells weapons. Long they have funds to quell the terrorism and bring back the radicals to normal life. It is Middle East countries that sold F16 to Pakistan. Whatever Pakistan purchased from USA directly never got delivered. This is the truth. Please read the information correctly from internet and then blame America.


SUBBU,
நவ 14, 2024 16:51

Long they have funds to quell the terrorism and bring back the radicals to normal life. ha ha ha GOOD COMEDY.


aaruthirumalai
நவ 14, 2024 11:12

திரு KR அவர்களின் கருத்து சரியானது. நமது வெளியுறவு அமைச்சரின் முக பாவனையை பாருங்க நன்றாக இருக்கும்.


SUBBU,MADURAI
நவ 14, 2024 13:09

US sells lethal weapons to terror state Pakistan. But Indian companies selling spare parts and circuits to Russia face sanctions! Another shining example of American hypocrisy.


KR india
நவ 14, 2024 10:19

பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான, இன்றைய மத்திய அரசாங்கத்தில் உள்ள மிகச் சிறந்த அமைச்சர்களில், நம் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய் சங்கர் அவர்களும் ஒருவர். "கடுமை" காட்ட வேண்டிய இடத்தில் "கடுமை", "கனிவு" காட்ட வேண்டிய இடத்தில் கனிவு, "பணிவு" காட்ட வேண்டிய இடத்தில் "பணிவு" என்று மனுஷன் "தூள்" கிளப்புகிறார் மேலும், அமைச்சர் ஜெய் சங்கர் அவர்கள், தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட "தமிழர்" என்பது ஒவ்வொரு தமிழனும் பெருமைப் பட வேண்டிய ஒன்று இந்த அளவு பாராட்டு பெரும் அளவிற்கு, தமிழகத்தை சேர்ந்த மற்றொரு மத்திய அமைச்சர் "நிர்மலா சீதாராமன்" நடந்து கொள்கிறார்களா? என்றால் "இல்லை" என்பதே பதில் மத்திய அரசுக்கு "வரி வசூல்" மூலம் கூடுதல் நிதி பெற்று தருகிறார் என்பதில் ஐயமில்லை மத்திய அரசுக்கு மட்டும் நல்ல பிள்ளையாய் இருந்தால் போதுமா? மக்களும் விரும்பும் வண்ணம் நடந்து கொள்ள வேண்டாமா? "ஏழை / நடுத்தர" மக்களின் கூடுதல் வரிச்சுமை / தாமத வரி தாக்கல் அபராதம் போன்றவற்றை நீக்க வேண்டும். "ஏழை / நடுத்தர" மக்கள் தானே வரிசையில் நின்று ஒட்டு போடுகின்றனர். "அனைத்துத் தரப்பினரும்" / "அனைத்து கட்சியினரும்" கூட பாராட்டத் தக்க வகையில் செயல்படும், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் "ஜெய் சங்கர்" அவர்களை போன்று, சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் "நிதின் கட்காரி" போன்று, உள்துறை அமைச்சர் "ராஜ்நாத் சிங்" அவர்களை போன்று, , நிர்மலா அவர்களும் அவர் சார்ந்த "நிதி" துறையில், இன்னும் சிறந்த நிர்வாகத்தை, மக்கள் விரும்பும் வண்ணம் தர வேண்டும் நன்றி


ஆரூர் ரங்
நவ 14, 2024 17:50

நிதியமைச்சர் யாரும் 10 சதவீதம் பேரைக்கூட திருப்திப்படுத்த இயலாது. அவரது கட்டுப்பாட்டில் இல்லாத ஜிஎஸ்டி கவுன்சில் செய்யும் தவறுகளையும் அவர்தான் செய்ததாக பிரச்சாரம் செய்கிறார்கள். மேலும் பெண் என்பதால் திட்டுக்கள் வசவுகள் மிக அதிகம்.


Respect Fellow Humans
நவ 14, 2024 10:16

நாம் தான் அந்த ரோட போடுறோம்னா நடுல தான் தம்பி நின்னாகனும்


SUDESH ANNAMALAI
நவ 14, 2024 09:46

மோடி தலைமையிலான அரசு தொலை நோக்கு பார்வையுடன் செயல் படுவது அடுத்த சந்ததியினர் பயனடைவார்கள்


veeramani
நவ 14, 2024 09:34

மய்ய அரசின் உயர்ந்த பொறுப்பு வகித்தவர் என்ற உரையில் எனது கருத்து ... அன்றைய கலகட்டடத்தில் 1964, 1971 பாகிஸ்தானுடன் யுத்தம் நடந்த பொது இந்தியாவின் நண்பன் ரஷ்யர்கள். பங்களாதேஷ் சண்டையின் பொது அமெரிக்கா ஒரு நாசகராக்கப்பலை பாகிஸ்தானின் அதிபர் யஹியாஹா ன் விருப்பப்படி அந்தமான் அருகே நிறுத்தியபோது இந்தியாவின் நண்பன் ராஷியா மிகப்பெரிய ஒரு கப்பலை விசாகப்பட்டினம் அனுப்பியது. மேலும் கார்கில் போரின்போது ராணுவ தளவாடங்கள் கொடுத்து உதவியது ரஷ்யா மட்டும்தான். மேலும் பிரான்ஸ் நாடும் உதவியது , ஆனால் கேடுகெட்ட இங்கிலாந்தும் அமெரிக்காவும் இல்லை என கைவிரித்தது . இந்திய வான்வெளி ஆராய்ச்சிக்கு கிரையோஜெனிக் என்ஜின் கொடுத்தது ரஷ்யா மட்டும்தான். இந்த விஷயத்தில் அமெரிக்கா எப்படியெல்லாம் விளையாண்டது என எங்களுக்கு தெரியும், இன்று வரை இந்திய ராணுவத்தின் MIG விமானத்தை கொடுப்பவர் எங்களது உயிர் நண்பன் ரஷ்யா மட்டும்தான் . தேவைப்பட்டால் ரஷ்யாவிற்காக எங்கு வேண்டுமானாலு சண்டையில்பங்கு எடுக்க இந்திய ராணுவம் தயார். அதே போல் இஸ்ரேல் சகோதரர்களும் கார்கிலில் உதவினார். எப்பொழுதும் இந்தியா தனது நண்பர்களுக்கு எதுவும் செய்யும்.


அப்பாவி
நவ 14, 2024 08:43

நானும் அதே பாலிசிதான். எந்த ஊட்ல கல்யாணம் நடந்தாலும் பூந்து சாப்புடுவேன்.


hari
நவ 14, 2024 17:54

அது எங்களுக்கு தெரியமே.... அது மட்டுமா.... அங்கே காலனிகளும் காணாமல் போவதாக தகவல்.....


Akash
நவ 14, 2024 07:12

Exactly what Seeman said...either be on this side of the road or the other side...if you are in the middle of the road you will get run over