உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கொடுமை கொடுமை என்று போராட போனால் அங்கே இன்னொரு பெருங்கொடுமை; மேற்கு வங்கத்தில் மீண்டும் சம்பவம்

கொடுமை கொடுமை என்று போராட போனால் அங்கே இன்னொரு பெருங்கொடுமை; மேற்கு வங்கத்தில் மீண்டும் சம்பவம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் இளம்பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைக் கண்டித்து நடந்த போராட்டத்தில் பங்கேற்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம்

கடந்த மாதம் கோல்கட்டாவின் ஆ.ஜி., கர் மருத்துவமனையில் பணியில் இருந்த இளம் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவத்தைக் கண்டித்தும், குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று அடுத்தடுத்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

போராட்டம்

அந்த வகையில், அம்ரா திலோத்தமா எனும் அமைப்பு சார்பில் இளம்பெண் டாக்டர் கொலை சம்பவத்தைக் கண்டித்து கோல்கட்டாவில் போராட்டம் நடைபெற்றது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொல்லை

இந்த நிலையில், போராட்டத்தில் பங்கேற்ற பெண் ஒருவருக்கு அங்கிருந்த நபர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, அந்த நபரை மடக்கி பிடித்த சக போராட்டக்காரர்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், விரைந்து வந்த போலீசார், அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக் கூறி, அங்கிருந்து அனுப்பி வைத்தார்.

புகார்

இதனால், கடுப்பான அந்தப் பெண், போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று பாலியல் தொல்லை கொடுத்த நபர் மற்றும் அந்த நபரை விடுவித்த போலீஸ்காரர் மீது புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அங்கிருந்த சி.சி.டி.வி., கேமராக்களை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Mohan
செப் 02, 2024 12:28

மேற்கு வங்க மக்கள் புத்திசாலிகள் என நாடு முழுவதும் அறியப்பட்டது தேச விடுதலை காலத்தில் மட்டுமே 70 வயதுக்குமேல் உள்ளவர்களுக்கு ஞாபகம் இருக்கும். கலையரங்கம் ஒன்றில் நடந்த நிகழ்ச்சியின் போது அதை பார்க்க வந்த மற்றும் கலைநிகழ்ச்சி நிகழ்த்திய "பெண்கள்"" வயது வித்தியாசமின்றி , அங்கிருந்த ஆண்களால் அடையாளம் தெரியாத மின்வநியோகத்தை நிறுத்தி, கும்பலாக கற்பழிக்கப்பட்டனர். இந்த செய்தி லேட்டாக தெரிந்து நாடே கொந்தளித்தும்,, குற்றவாளிகள் தப்பித்து விட்ட சோகம் ஒரு ஆறாத வடு. திரும்ப திரும்ப குற்ற பின்னணி உள்ளவர்கள் ஆட்சிக்கு வந்ததால் மேற்கு வங்கம் சொல்லிக்கொள்ளும்படி வளரவில்லை. அரசியல் பின்னணி உள்ளோரே வளர்ந்தனர். மாநிலம் முன்னேறவில்லை. இந்தியா பிச்சைக்காரர்கள் நிறைந்த நாடு என மேற்கத்திய நாடுகள் நினைக்க வங்காள புத்திசாலிகளே காரணம். இந்து மதத்தினையும் பழக்க வழக்கங்களையும் கேவலமாக இவர்களே சித்தரித்தனர். இப்போது புதிய தலைமுறை பொங்குகிறது. கேவலமாக நாட்டை சித்தரித்தவர்களை இளைய சமுதாயம் கண்டுபிடித்து முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும்


gmm
செப் 02, 2024 10:41

மன நலம் பாதித்தவர் என்று அனைத்து டாக்டரால் கூட முடியாது. மன நல மருத்துவர் சான்று தேவை. போலீஸ் மிரட்டி சான்று பெறும்? மன நோயாளி என்று போலீசார் எப்படி கூறி விடுவிக்க முடியும்? பெண் டாக்டர் கொலையில் உச்ச நீதிமன்றம் தானே விசாரித்தது. தண்டிக்க முடியவில்லை. கபில் விசாரணை பாதையை மாற்றி விட்டார்? உரிய நேரத்தில் தண்டிக்க முடியவில்லை என்றால், பயம் நீங்கும் குற்றம் அதிகரிக்கும். கொலை, குற்றம் மறைக்க மம்தா நிர்வாகம் முயற்சி. ஆட்சி கலைப்பு தான் நிவாரணம்.


Kumar Kumzi
செப் 02, 2024 09:21

ஓஹ் திருட்டு திராவிஷ மாடல் கூலிப்படைகள் தான் போலருக்கு வாழ்க விடியல் ஹாஹாஹா


SIVA
செப் 02, 2024 08:53

மக்களின் தகுதிக்கு ஏற்பவெ ஆட்சியாளர்களின் தகுதி இருக்கும் , இதே மேற்கு வங்கத்தில் தெலுங்கு சின்னமாவில் வருவது போன்று ஒரு நபர் ஒரு ஊரில் உள்ள பல பெண்களை கொடுமை செய்தான் , ஒரு வாரம் பரபரப்பாக பேச பட்டது , இப்போது அதன் நிலை என்ன , மக்கள் மாக்கள் மாறாதவரை எதுவும் எங்கும் மாற போவது இல்லை , கவுன்சிலர் முதல் எம் எல் எ , எம் எம்பி என்று ஊரில் உள்ள பொறுக்கிகளையும் பொறம்போக்குகளையும் தேர்ந்து எடுப்பது , அப்புறம் ஒப்பாரி வைப்பது , டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி எனும் ஒரு நல்ல மனிதர் 1996 சட்டசபை தேர்தலில் மதுரையில் எம் எல் எ வேட்பாளராக நின்றார் , பெட்ரா வாக்குகள் மொத்தம் ஆயிரம் மட்டுமே , அவருடைய கதை ஒரு படமாக வந்து வெற்றி பெற்றது , மனிதன் சினிமாவில் மட்டுமே நல்லவர்களை ஆதரிக்கின்றான் ....


சமூக நல விரும்பி
செப் 02, 2024 08:25

மத்திய அரசு இன்னும் என் மௌனம் சாதிக்கிறது. உடனடியாக அங்கு ஜனாதிபதி ஆட்சி அமுல் படுத்துவது மிகவும் அவசரம் மற்றும் அவசியம்


Shekar
செப் 02, 2024 09:58

அய்யா... மத்திய அரசு ஜனாதிபதி ஆட்சி அமல் படுத்தினால், இவர்கள் நீதிமன்றம் செல்வார்கள். மக்கள் பணி செவ்வனே நடக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தொடரவேண்டும் என்று சொல்லக்கூடும். ராகுல் காந்திக்கு ஆறுவருடம் தேர்தலில் நிற்க தடை, இரண்டு வருடம் சிறை அப்படின்னு தீர்ப்பு வந்தது. மேல் நீதிமன்றம் என்னசொன்னது, மக்கள் சேவையாற்ற தண்டனையை நிறுத்தி வைப்பதாக சொன்னார்கள். அதன் பின் அவர் இரண்டு தொகுதியில் போட்டியிட்டு எம்பியாக உள்ளார். நம்ம தங்க முடிக்காரரும் சிறை தண்டனை பெற்றார். என்ன ஆச்சு நீதிமன்றம் தண்டனையை நிறுத்தி அவரை எம்எல்ஏ யாக தொடர அனுமதித்தது. அதுமட்டுமல்ல தண்டனை பெற்ற இவருக்கு எம்எல்ஏ யாக பதவி பிரமாணம் செய்ய தயங்கிய கவர்னரை மிரட்டியது. மேலே சொன்ன இரு வழக்குகளிலுமே அவர்கள் குற்றம் செய்தது மறுக்கப்படவில்லை, தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. எத்தனை காலத்திற்கோ தெரியவில்லை. போகிற போக்கை பார்த்தல் மேற்கு வங்க கற்பழிப்பு குற்றவாளி போலீஸ்க்கு உதவும் குழுவில் இருப்பதால் அவன் சேவை நாட்டுக்கு தேவை என அவன் தண்டனையும் நிறுத்தி விடுவார்களோ என்று பயமாக உள்ளது. நீதிமன்றங்கள் தங்கள் மனநிலையை மாற்றிக்கொள்ளாவிட்டால் நாடு மோசமான நிலையை அடையும்


VENKATASUBRAMANIAN
செப் 02, 2024 08:22

தமிழகத்தில் இதைப்பற்றி கவலை இல்லை. இங்கே அதைவிட மோசமாக நடக்கிறது. ஆர்எஸ்பாரதி ஊடகங்கள் இதைப்பற்றி பேசாது. அதிமுக அண்ணாமலை பற்றி ஒப்பாரி வைப்பார்கள். இவர்களை பத்திரிக்கையாளர்கள் என்று சொலவதே வெட்கக்கேடு.


நிக்கோல்தாம்சன்
செப் 02, 2024 08:09

அந்த பெண்ணின் துணிவை பாராட்டுகிறேன் , விடுவித்த காவலருக்கு இனி அரசு பணி எதற்கு ? அவரது வீட்டிலேயே தொழில் தொடங்கட்டும்


Kumar
செப் 02, 2024 08:07

முருங்கைக்காய் ரொம்ப விளைஞ்சிடுச்சோ


sridhar
செப் 02, 2024 07:59

தமிழகத்தில் கோவிலை இடித்துவிட்டு ஒரு ஹிந்து , மனநலம் பாதித்த முதியவர் செய்தார் என்று போலீஸ் விடும் கட்டுக்கதை போல அங்கே ஒரு மனநலம் பாதித்த முதியர் கதை ஓடுகிறது .


Tagore
செப் 02, 2024 07:48

It is now a right time to dismiss the soorpanakai and restore law and order in WB


சமீபத்திய செய்தி