உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்திய மக்கள் தொகை எவ்வளவு? ஐ.நா., ஆய்வறிக்கையில் வெளியான சுவாரஸ்ய தகவல்!

இந்திய மக்கள் தொகை எவ்வளவு? ஐ.நா., ஆய்வறிக்கையில் வெளியான சுவாரஸ்ய தகவல்!

நியூயார்க்: இந்திய மக்கள் தொகை 146 கோடியை எட்டியுள்ளது. அதே நேரத்தில் கருவுறுதல் விகிதம் குறைந்து வருகிறது என ஐ.நா., ஆய்வறிக்கை தகவல் தெரிவிக்கின்றன.மக்கள் தொகை தொடர்பாக, ஐ.நா., வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறி இருப்பதாவது: 2025ம் ஆண்டில் இந்திய மக்கள் தொகை 146 கோடியை எட்டியுள்ளது. இந்தியா அதிக மக்கள் தொகை கொண்ட நாடாகத் தொடர்ந்தாலும், நாட்டின் மொத்த கருவுறுதல் விகிதம் 1.9 ஆகக் குறைந்துள்ளது. மொத்த மக்கள் தொகையில், * 24% பேர் 0-14 வயதுடையவர்கள்,* 17% பேர் 10-19 வயதுடையவர்கள்,* 26% பேர் 10-24 வயதுடையவர்கள்,* 7% பேர் 65 வயதுக்கும் மேற்பட்டவர்கள்.பிறப்பு விகிதம் குறைந்து வந்தாலும், இந்தியாவின் இளைஞர் மக்கள் தொகை குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. மக்கள் தொகையில் 68 சதவீதம் பேர் 15-64 வயதுடையவர்கள். நாட்டில் 68% பேர் வேலைக்கு போகும் தகுதி உடையவர்களாக உள்ளனர்.2025ம் ஆண்டு நிலவரப்படி, பிறக்கும் போது ஆயுட்காலம் ஆண்களுக்கு 71 வயது வரையும், பெண்களுக்கு 74 வயது வரையும் என கணிக்கப்பட்டுள்ளது. 1960ம் ஆண்டில், இந்தியாவின் மக்கள் தொகை 43.6 கோடியாக இருந்தபோது, ​​சராசரி பெண்ணுக்கு கிட்டத்தட்ட ஆறு குழந்தைகள் இருந்தன.கிட்டத்தட்ட 150 கோடி மக்கள் தொகையுடன் இந்தியா இப்போது உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக உள்ளது. 40 ஆண்டுகளுக்குப் பிறகு, அது குறைய வாய்ப்புள்ளது. அந்தக் காலகட்டத்தில் இந்தியாவில் மக்கள் தொகை எண்ணிக்கை 170 கோடியாக இருக்கும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Rangarajan Cv
ஜூன் 10, 2025 20:37

150cr population should be accommodated in 32.87lac sq km area. India should do better town planning by going vertical so that people living in streets , slums can be minimised. Better living conditions for all


Saai Sundharamurthy AVK
ஜூன் 10, 2025 20:18

ஒவ்வொரு நாட்டிலும் உள்ள மக்கள் தொகையை ஐ. நா. எதற்கு ஆராய்கிறது ?????


Padmasridharan
ஜூன் 10, 2025 19:49

குழந்தைகளை பெக்காமலே இந்திய பொருளாதாரத்தை வளர்த்த இளைஞர்கள் மக்கள் தொகையை கட்டுப்படுத்தியிருக்கிறார்கள். குடும்ப சந்தோசத்தை காணாமலே சாகக்கிடக்கின்றனர். இதனால் என்ன பயன் சாமி


Nada Rajan
ஜூன் 10, 2025 19:37

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
ஜூன் 10, 2025 19:02

வாய்ப்பு இல்லை ,நான் எனக்கு ஒன்னு நமக்கு ஒன்னுன்னு இருக்கேன் மொத்தம் 3 , அவன் எனக்கு மூணு நமக்கு ஒவ்வொண்ணும் 4 னு போயிட்டு இருக்கான்


Balasubramanian
ஜூன் 10, 2025 18:22

முப்பது கோடி முகமுடையாள் என்று பாடினார் பாரதியார்! அது சுதந்திரம் பெறுவதற்கு முன்பு!! அன்றைய பாரதம் நாடு இன்று பாகிஸ்தான் பங்களாதேஷ் என்று பிரிந்த பிறகும் 146 கோடி ஜனத்தொகை என்றால்? ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் பத்து கோடி ஜனத்தொகை பெருகி வருகிறது! இதுவே சற்று பாதியாக இருந்து இருந்தால் இன்று உலக நாடுகளில் முன்னணி நாடாக இருந்து இருப்போம்! ஆனால் இன்னும் நாடு இளைய பாரதமாக (50 சதவீதம் இளைஞர்கள்) திகழ்வது மகிழ்ச்சி அளிக்கிறது!