உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நாட்டின் எதிர்காலம் என்ன ஆகும்: ராகுலுக்கு வந்தது கவலை

நாட்டின் எதிர்காலம் என்ன ஆகும்: ராகுலுக்கு வந்தது கவலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: கல்வியை ஆர்.எஸ்.எஸ்., கட்டுப்பாட்டில் எடுத்தால் இந்தியாவின் எதிர்காலம் அழிந்துவிடும் என்று காங்கிரஸ் எம்.பி., ராகுல் தெரிவித்துள்ளார்.டில்லியில் ஜந்தர் மந்தரில் தேசிய கல்விக்கொள்கைக்கு எதிரான போராட்டம் நடைபெற்றது.போராட்டத்தில் ராகுல் பேசியதாவது:இந்தியப் பல்கலைகளின் துணைவேந்தர்கள் மத்தியில் ஆர்.எஸ்.எஸ்., ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்பதை மாணவர் அமைப்புகள் மாணவர்களுக்குச் சொல்ல வேண்டும். வரும் காலத்தில், மாநிலப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் ஆர்.எஸ்.எஸ். பரிந்துரையின் பேரில் நியமிக்கப்படுவார்கள். இதை நாம் நிறுத்த வேண்டும்.ஆர்.எஸ்.எஸ்., கையில் கொஞ்சம் கொஞ்சமாக கல்வி முறை செல்கிறது. அப்படி சென்றால் யாருக்கும் வேலை கிடைக்காது. வேலையின்மை, பணவீக்கம் மற்றும் கல்வி முறை பற்றி பிரதமர் ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை. அனைத்து வளங்களையும் அதானி மற்றும் அம்பானியிடம் ஒப்படைத்து, நிறுவனங்களை ஆர்.எஸ்.எஸ்.யிடம் ஒப்படைப்பது தான் அவர்கள் மாடல்.நமது சித்தாந்தங்கள் மற்றும் கொள்கைகளில் சில வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் நாட்டின் கல்வி முறையில் நாம் ஒருபோதும் சமரசம் செய்ய முடியாது. இந்தப் போராட்டத்தை நாம் ஒன்றாகப் போராடி ஆர்.எஸ்.எஸ்.-ஐ பின்னுக்குத் தள்ளுவோம்.இவ்வாறு ராகுல் பேசினார்.மேலும் பேசுகையில், கடந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடி பார்லிமென்டில் மகா கும்பமேளா குறித்துக் கருத்து தெரிவித்ததை நினைவு கூர்ந்த ராகுல், பிரதமர் வேலையின்மை மற்றும் பணவீக்கம் குறித்தும் பேசியிருக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

TRE
மார் 25, 2025 14:09

ஏன் தின மலர் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் னு எழுது


TRE
மார் 25, 2025 13:57

RSS பிஜேபி ஐ ஒழித்தாலே நாட்டின் எதிர்காலம் சரியாகிவிடும்


V GOPALAN
மார் 25, 2025 09:16

Rahulji is worried no billion looting issues like 2 G Common Wealth Game Benami Shell companies and terror atrocities like Mumbai Bangalore and hyderabad bombBlast. Stone pelting by congress supported terror youths at our Army men, Kashmir is totally disconnected from Pakistan abd Afghanistan. Sonia Gandhi family is becoming mad everyday . Better let them settle in Italy. Ony family colliding with Rajiv killers like dmk thiruma and vaiko is Soni Sani family


R.Natatarajan
மார் 25, 2025 07:01

ராக்ஹுலும் சோனியா ப்ரியங்ஹா குடும்பம் அரசியலில் ஒதுங்கி இருந்தாலெ பாரதம் சரியாக வளரும்


krishna
மார் 24, 2025 23:17

GET LOST


Kanns
மார் 24, 2025 22:29

Having Repeatedly Divided Nation& People incl Sabotaging Education With Suppressed Hisyory etc for AntiPeople& AntiNation Vested-Selfishness Power MegaLoots etc, Congress Party& Leaders Have No Rights to Talk But Prosecuted-Punished


S. Neelakanta Pillai
மார் 24, 2025 22:08

மன்னிக்கவும், tong ஸ்லிப் ஆகிவிட்டது. காங்கிரஸ் எதிர்காலம் என்ன ஆகும் என்பதற்கு பதிலாக நாட்டின் எதிர்காலம் என்று சொல்லிவிட்டார். பாவம்.


Anbuselvan
மார் 24, 2025 21:51

இவர் பேச ஆரம்பிச்சுட்டாரா - இனி பிஜேபி க்கு வெற்றி முகம்தான்.


Kumar Kumzi
மார் 24, 2025 21:28

இத்தாலிக்காரன் ஒனக்கு ஏன் எங்கள் இந்தியாவின் மீது கவலை உன்னை இத்தாலிக்கு நாடு கடத்தினால் இந்தியா அமைதியக இருக்கும்


Iyer
மார் 24, 2025 21:25

நமது கல்வித்துறை சிறந்து விளங்கணும் என்றால் - நமது பழைய குருகுல SYSTEM த்தை மீண்டும் தொடங்கி - நமது EDUCATION SYSTEM முழுவதும் RSS கையில் ஒப்படைக்கணும். ஒன்றுக்கும் விளங்காத பாடத்திட்டங்களை ஒழித்துக்கட்டி - யோகா, பிராணாயாமம், த்யானம், சூர்யநமஸ்கரம், ஆர்கானிக் பார்மிங் போன்ற பாடங்களை கட்டாயம் ஆக்கவேண்டும்


முக்கிய வீடியோ