உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லி ஐகோர்ட் நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியது

டில்லி ஐகோர்ட் நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியது

புதுடில்லி: டில்லி ஐகோர்ட் நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டு கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து அவரை பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக வெளியான தகவலுக்கு சுப்ரீம் கோர்ட் விளக்கம் அளித்து உள்ளது. பணம் பறிமுதல் செய்யப்பட்டதற்கும், இதற்கும் தொடர்பில்லை. அவரை பணியிட மாற்றம் செய்வது என முன்னரே முடிவு எடுக்கப்பட்டு விட்டதாக தெரிவித்து உள்ளது.டில்லி ஐகோர்ட் நீதிபதி யஷ்வந்த் வர்மா, ஹோலி பண்டிகை விடுமுறைக்காக வெளியூர் சென்றிருந்தார். அந்த வேளையில், அவரது குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், நீதிபதியின் குடும்பத்தினர், உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் அளித்தனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=7t08or1h&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதன்பேரில், தீயை அணைக்க வந்த போது, நீதிபதியின் வீட்டில் கட்டு கட்டாக ரூபாய் நோட்டுக்கள் இருப்பதை போலீசார் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும், அதனை பறிமுதல் செய்து விசாரணை தொடங்கியுள்ளனர். இந்த சம்பவம் நீதித்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட் கொலீஜியம் அமைப்பில் உள்ள 5 உறுப்பினர் நீதிபதிகளும் ஒருமனதாக திட்டமிட்டுள்ளனர். டில்லியில் இருந்து அலகாபாத் ஐகோர்ட்டிற்கு யஷ்வந்த் வர்மாவை பணியிட மாற்றம் செய்யவும் கொலிஜியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.

விளக்கம்

இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான தவறான மற்றும் வதந்தி பரவி வருகிறது.டில்லி ஐகோர்ட்டின் இரண்டாவது மூத்த நீதிபதியான யஷ்வந்த் சர்மாவை, அலகாபாத் ஐகோர்ட்டிற்கு இடமாற்றம் செய்வது என முன்னரே எடுக்கப்பட்ட முடிவு. தற்போதைய நிகழ்வுக்கு அப்பாற்பட்டது. பணியிட மாற்றம் குறித்த முடிவை, நேற்று ( மார்ச் 20) சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி மற்றும் நான்கு மூத்த நீதிபதிகள் அடங்கிய கொலிஜியம் ஆய்வு செய்தது. தொடர்ந்து சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், சம்பந்தப்பட்ட ஐகோர்ட் தலைமை நீதிபதிகள் மற்றும் நீதிபதியஷ்வந்த் வர்மாவுக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது. அவர்களிடம் இருந்து வந்த பதிலை பொறுத்து, கொலிஜியம் ஒரு தீர்மானத்திற்கு வரும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. ஆனால், அவரை ஏற்க முடியாது எனக்கூறி அலகாபாத் ஐகோர்ட் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.அதேவேளையில், ஒரு சிலரோ, நீதித்துறைக்கு களங்கத்தை ஏற்படுத்திய யஷ்வந்த் வர்மா மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். மேலும், அவரை பதவி விலகவும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த முடிவை திரும்பப் பெற வேண்டும். அலகாபாத் ஐகோர்ட் என்ன குப்பைத் தொட்டியா என கேள்வி எழுப்பி உள்ளனர்.

யார் இவர்

கடந்த 1969 ம் ஆண்டு ஜன.,6 ல் பிரயாக்ராஜ் நகரில் பிறந்தவர் யஷ்வந்த் வர்மா. டில்லி பல்கலை.யின் ஹன்ஸ்ராஜ் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்த இவர், ம.பி.,யின் ரேவா பல்கலையில் சட்டப்படிப்பு படித்தார்.1992 ஆக., 8 ல் அலகாபாத் ஐகோர்ட்டில் வழக்கறிஞராக பதிவு செய்து கொண்டார். அலகாபாத் ஐகோர்ட்டில் மாநில அரசின் வழக்கறிஞராகவும் பணியாற்றி உள்ளார்.2014 ல் அதே ஐகோர்ட்டில் கூடுதல் நீதிபதியாக பதவியேற்றார். 2016 ல் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.இவர் அரசியலமைப்பு, தொழிலாளர் பிரச்னை தொழிற்சாலை நிர்வாகம் , மாநகராட்சிகள் மற்றும் வரிகள் குறித்த வழக்குகளை விசாரித்து வந்துள்ளார்.

தீயணைப்புத்துறை திடீர் பல்டி

இதற்கிடையே நீதிபதி வீட்டில் அப்படி ஏதுவும் பணம் கண்டெடுக்கவில்லை என தீயணைப்புத்துறை திடீரென பல்டி அடித்து இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. இது குறித்து அத்துறையின் தலைவர் அதுல் கார்க் கூறியது, சம்பவம் அறித்து அவரது வீட்டின் ஸ்டோர் ரூம்மில் பற்றிய தீயை 15 நிமிடம் போராடி அணைத்தோம் இதில் தீயில் கருகிய பொருட்களை மீட்டபோது ஸ்டேஷனரி பொருட்கள் இருந்தன. பணம் எதுவும் கண்டெடுக்கவில்லை என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 60 )

Anantharaman Srinivasan
மார் 22, 2025 23:55

நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் பணம் சிக்கிய சம்பவம் மத்திய மோடி அரசின் நேர்மையான ஆட்சிக்கு மற்றுமோர் மைல் கல்.


baala
மார் 24, 2025 09:33

அருமை. இவரின் தீர்ப்புகள் எப்படி இருந்து இருக்கும் என்று இதை வைத்தே முடிவு செய்யலாம்.


Anantharaman Srinivasan
மார் 22, 2025 23:49

நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக தவறான வதந்தி பரவி வருகிறது. உண்மையில் அவர் வீட்டில் மாட்டிய பணம் only 996 ரூ 67 பைசா தான். நம்புங்க.


baala
மார் 22, 2025 10:42

அருமையான மனச்சாட்சி உள்ள ஒரு நீதிபதி.


baala
மார் 22, 2025 10:37

மாறுதல் மிக பெரிய தண்டனை.


Ray
மார் 22, 2025 15:24

ஒரு சின்ன நினைவூட்டல் அவரது சொந்த ஊருக்கு மாற்றல் மிகப் பெரிய தண்டனைதான். கொஞ்சம் விளக்கமாக சொல்ல வேண்டுமென்றால் சுனிதா வில்லயம்ஸ் போல ஊர் திரும்பவில்லை கோடிக்கணக்கில் ஊழல் செய்ததை அந்த பகவானே தீவிபத்து மூலம் வெட்ட வெளிச்சமாக்கி அந்த ஹோலி பண்டிகையன்று முகத்திலெல்லாம் கரி பூசிக் கொண்டு வருகிறார். எங்கும் ஊடுருவிவிடும் இந்த சர்மாக்களே இப்படித்தான் கொல்லைப்புறமாக வந்து கொள்ளையடிப்பார்கள் எந்த ஆட்சியானாலும் பிடிக்கவேண்டியவர்களைப் பிடித்து சிறு சிராய்ப்பு கூட இல்லாமல் காப்பாற்றப்பட்டு விடுவார்கள்.


VinothB
மார் 21, 2025 21:20

Mr. kulandai kannan comment "சென்னை ஐகோர்ட்டுக்கு டிரான்ஸ்பர் செய்யலாம்" Excellent comment, Super Ji...


Sivagiri
மார் 21, 2025 20:37

எடுத்தவனே பறித்துக் கொண்டாண்டீ . . மானே கொடுத்தவனே எடுத்துகொண்டாண்டீ . . .


Mediagoons
மார் 21, 2025 19:40

நீதிபதிக்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு ஒரு நியாயமா ? இந்த நீதிபதியை காவல் உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்கவேண்டும். இவர் கடந்த பலவருடங்களாக தேசத்தை சூறையாடும், பாஜ கார்போரேட்டு கும்பலுடன் சேர்ந்து ஒரு அரசுக்கு எதிராக சாதி செய்துள்ளார்


Mediagoons
மார் 21, 2025 19:37

உள்துறை அமைச்சர் இதற்க்கு தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் .


Shekar
மார் 22, 2025 07:08

ஆக, எடப்பாடி பதவி விலகவேண்டும்ன்னு சொல்லி போரடிச்சிருச்சி இல்லையா?


தாமரை மலர்கிறது
மார் 21, 2025 19:36

இந்தியா பணக்கார நாடாக மாறிவருகிறது. இன்றளவில் ஒரு கவுன்சிலர் பாக்கெட்இல் கையில் விட்டால் கூட சில கோடிகள் கிடைக்கும். நீதிபதி அவரது சம்பளத்தை அப்படியே சேர்த்துவைத்திருக்கலாம். அவரது அப்பா சம்பாரித்த பணத்திலேயே சிக்கனமாக வாழ்ந்திருப்பார். தேவை இல்லாமல் அவர் மீது அனாவசிய புகார் சொல்ல கூடாது. நீதிபதி விசாரணை போலவே அவரது பணிமாற்றம் தேவையற்றது. அவர் கொடுத்த நீதி அவரது நேர்மையை பறைசாற்றும்.


baala
மார் 22, 2025 10:38

அப்படி என்றால் முறையாக கணக்கு காட்டலாமே.


baala
மார் 24, 2025 09:36

சரி இவருக்கு என்ன தண்டனை. இடம் மாற்றம் பாவம் மிக கொடிய தண்டனை.


Mediagoons
மார் 21, 2025 19:33

பாஜவினரும் மோடியின் இந்து மதவாத அரசால் கோடிக்கணக்கணக்கான கோடிகள் ஆதாயம் பெற்ற அம்பானி அதானி போன்ற கார்போரேட்டுகளும் பாஜாவிற்கு எதிரான கட்சிகளை மிரட்ட அரசுகளை கவிழ்க்க வாரி இறைத்த லஞ்ச பணம். அனைத்துக்கும் காரணமான மத்திய மோடி அரசை உடனடியாக டிஸ்மிஸ் செய்யவேண்டும் . செய்வார்களா நீதித்துறையில் உள்ளவர்கள் ?.


Anantharaman Srinivasan
மார் 22, 2025 23:42

மோடி மாதிரி ஒரு யோக்கியரை குஜராத்தில் நீ எங்கு தேடினாலும் காணக்கிடைக்காது. மோடி அரசை உடனடியாக டிஸ்மிஸ் செய்யணுமா..?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை