வாசகர்கள் கருத்துகள் ( 27 )
அப்படியே ஒரு லோன் கேட்டுப்பார்க்க வேண்டும் .நகைக்கடன் மட்டும் தான் அப்படியே அப்பவே கொடுப்பார்கள் .தொழில் கடன் கல்விக்கடன் தனியார் கடன் எல்லாம் ஆறு மாதம் ஆகி விடும் .ஒரு வாரம் கம்ப்யூட்டர் இல்லாமல் வேலை செய்ய முடியுமா ?.யாராலும் முடியாது .
மொழி வாரியாக அவர்கள் நடந்து கொள்வதும் மிகுந்த சிரமத்தை தருகிறது
குறிப்பாக ஸ்டேட் பேங்க்ல் இது போல நடக்கிறது.சில கவுண்டர்களில் நீண்ட நேரம் போன் ல் பேசி காக்க வைப்பர்கள். வயதானவர்களை மதிப்பதே இல்லை. ஹிந்தி மட்டுமே தெரிந்த ஊழியர்கள் என்றால் நம் பாடு சிரமம்தான்.
என்ன செய்யா வடநாட்டுக்காரன் ஆந்திர காரன் கஷ்டப்பட்டு வருட கணக்கில் படித்து பேங்க் வேலைக்கு வருகிறான் நம்ம டுமீளர்கள் டாஸ்மாக் கீழ் கால் கடுக்க நின்னு போதை வராதா கேட் அந்த சாய வாங்கி குடிக்கவே நேரம் இல்லை
உண்மைதான்
ஒரு தவணை சேமிப்பு ஸ்டேட் வங்கியில் போட்டால் உடனே ரசீது கொடுத்து விடுவார்கள். ஆனால் தனியார் வங்கியில் அடுத்தநாள் வர சொல்வார்கள் இரண்டு போக்குவரத்து செலவு .பொதுத்துறை வங்கிகள் கோடிக்கானவர்களுக்கு சாமானியன் முதல் பெரும் பணக்காரர்வரை சேவை செய்கின்றன .தனியார் வங்கிகள் ஒரு குறிப்பிட்ட மேல் தட்டு வர்க்கத்தினருக்கு மட்டுமே சேவை அளிக்கிறது
இவனுங்கள இப்படி தான் கையும் களவுமா பிடிக்கனும்.. சோம்பேரிங்க
இந்த பெருசு எல்லாம் எதுக்கு.. வங்கிக்கு வந்து உயிரை எடுக்குது.... மைண்ட் வாய்ஸ் ஆப் ஊழியர்கள்
திமிரு பிடித்த பொது துறை வங்கி ஊழியர்கள் மக்களை மதிப்பதே இல்லை. இதனாலேயே பலர் தனியார் வங்கிகள் பக்கம் செல்கிறார்கள். மதிய உணவு நேரம், டீ பிரேக் என்று வெளியில் சென்றால் திரும்ப வருவதில்லை. சரியான பதில்கள் கிடையாது. பென்ஷனர்கள் இவர்களிடம் படும் பாடு மிக கேவலம். ஆனால் அக்கவுண்டை டேபிட் செய்வதில் கருத்தாக உள்ளனர். சீக்கிரம் மூடு விழாவை நோக்கி செல்கிறார்கள்.
மாலை நான்கு மணிக்கு கேஷ் வர்த்தகம் மட்டும் தான் கிளோஸ் செய்யும்படி rbi சொல்லி இருக்கு. ஆனால் இவங்க வங்கி கதவை சாத்தி விட்டு வாடிக்கையாளர்களை அனுமதிப்பதில்லை. Non cash வர்த்தகம் 5 மணி வரை செய்யலாம் , செய்வதில்லை .
சொல்லாம கொள்ளாம திடீனு ஆய்வுக்கு போறாங்களாம். இவரோட ஆபீஸ்ல திடீர் ஆய்வு நடத்தினா தெரியும் இவிங்க லட்சணம்.
பொதுத்துறை வங்கியில் சில அதிகாரிகள் சரியாக உள்ளனர். சிலர் சொல்லும்படி இல்லை. பல இடங்களில் அதிகாரிகளுக்கு பொறுமை, பொறுப்பு இல்லை. பொதுத்துறை வங்கிகளின் இணையங்கள் சுத்த வேஸ்ட். மொபைல் செயலிகள் கேட்கவே வேண்டாம். அதுவும் ஸ்டேட் வங்கி சுத்தம். நமது வேலைகளை விட்டு விட்டு இந்த வங்கிகளின் பின்னாலேயே ஓட வேண்டும். அப்போது தான் வங்கிக் கணக்கு சரியாக இருக்கும், செயலிகள் சரியாக வேலை செய்யும். நாம் பயன்படுத்தும் ரகசிய சொல்/கடவு எண் திடீரென்று காணாமல் போகும். அதை சரி செய்ய எந்த வசதியும் கிடையாது. வங்கிக்குச் செல்லவும் என்கிற பதில் மட்டுமே வரும். வங்கிக்கு செல்ல வேண்டும் என்றால் ஒரு நாள் விடுமுறை எடுத்து செல்ல வேண்டும். இல்லையென்றால் வேலை ஆகாது. எங்கே நமது வங்கியின் கிளையை மூடிவிடுவார்களோ என்கிற பயத்தில் இருப்பவர்கள் வேலை செய்கின்றனர். அது தெரியாமல் வாடிக்கையாளர்களிடம் எரிந்து விழுபவர்கள் பலர் இருக்கிறார்கள். மொத்தத்தில் வங்கியிலும் நமக்குத் தெரிந்தவர் இருந்தால் வேகமாக வேலை நடக்கும். இல்லையென்றால் கால் கடுக்க காத்திருக்க வேண்டும்.