ஆன்லைன் டிக்கெட் கட்டணம் அதிகம் ஏன்?
முன்பதிவு மையங்களை விட ஆன்லைனில் முன்பதிவு செய்யும் ரயில் டிக்கெட்டுகளுக்கு அதிக பணம் வசூலிப்பது தொடர்பாக, ராஜ்யசபாவில், கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ''தற்போது, 80 சதவீத முன்பதிவு டிக்கெட்டுகள் ஆன்லைன் வழியாகவே பதிவு செய்யப்படுகின்றன. ஆன்லைன் முன்பதிவின்போது பராமரிப்பு, இணைய டிக்கெட் உள்கட்டமைப்பு போன்றவற்றால் ஐ.ஆர்.சி.டி.சி.,க்கு கணிசமான செலவு ஏற்படுகிறது. மேலும், வங்கி பணப்பரிமாற்றத்துக்கான கட்டணத்தையும் பயணியர் செலுத்த வேண்டி இருக்கிறது. இதனால் ஆன்லைன் முன்பதிவு டிக்கெட் கட்டணம் அதிகமாக இருக்கிறது,'' என்று தெரிவித்தார்.