உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒடிஷாவில் அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள் விழித்துக்கொள்ளுமா பா.ஜ., அரசு?

ஒடிஷாவில் அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள் விழித்துக்கொள்ளுமா பா.ஜ., அரசு?

கடற்கரையோர மாநிலமான ஒடிஷா, நம் நாட்டின் ஏவுகணை சோதனைகளுக்கு பெயர் பெற்றது. புயல் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களின்போது இம்மாநிலம் அதிகம் பேசப்படும். தற்போது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடக்கும் மாநிலமாக ஒடிஷாவின் பெயர் அடிபடுகிறது. மிரட்டல் சமீபத்தில், இங்குள்ள பலிஹரிசந்தி கடற்கரையில் தனிமையில் பேசிக் கொண்டிருந்த காதலர்களை, ஒரு கும்பல், 'மொபைல் போனில்' படம்பிடித்து பணம் கேட்டு மிரட்டியது. அவர்கள் தர மறுத்ததால், அந்த கும்பலைச் சேர்ந்த இருவர், 19 வயது இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தனர். தடுக்க வந்த காதலனை மரத்தில் கட்டி வைத்து தாக்கினர். இந்த சம்பவம் ஒடிஷா முழுதும் அதிர்ச்சியை ஏற்படுத்த, தற்போது சமூக, அரசியல் பிரச்னையாக உருவெடுத்து இருக்கிறது. அடுத்ததாக, பாலசோரில் கல்லுாரி மாணவி தீக்குளிப்பு சம்பவம். பேராசிரியரின் பாலியல் துன்புறுத்தல் குறித்து பலமுறை அந்த மாணவி புகார் அளித்தும் கண்டுகொள்ளப்படவில்லை. அதன் விளைவு, மாணவியின் உயிரையே பறித்து விட்டது. இதனால், ஆவேசமடைந் த கல்லுாரி மாணவ - மாணவியர் மாநிலம் தழுவிய அளவில் போராட்டத்தை முன்னெடுத்தனர். வன்முறை, பதற்றத்தை தடுக்க கல்லுாரி மாணவியருக்காக, 'சக்திஸ்ரீ' என்ற பாதுகா ப்பு திட்டத்தை அரசு அமல்படுத்தியது. ஆனால், அது போராட்டத்துக்கான எதிர்வினையாக மட்டுமே இருந்ததே தவிர, குற்றங்களை தடுப்பதற்கான நடவடிக்கையாக இல்லை என பலர் விமர்சிக்கின்றனர். புள்ளி விபரம் மூன்றாவதாக புவனேஸ்வர் கமிஷனர் அலுவலகத்திற்குள்ளே யே நடந்த படுகொலை. அதுவும் போக்குவரத்து பெண் காவல ரை, அவரது கணவரே கொலை செய்திருக்கிறார். தேசிய ஆவண காப்பகத்தின் புள்ளி விபரங்களும், ஒடிஷாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்திருப்பதாகவே சுட்டிக் காட்டுகின்றன. பா.ஜ., தலைமையில் அங்கு ஆட்சி அமைந்துள்ள நிலையில், கடந்த 2024ல் மட்டும் பெண்களுக்கு எதிராக, 37,611 குற்றங்கள் பதிவாகி இருக்கின்றன. இந்த புள்ளி விபரத்தின் அடிப்படையில் உத்தர பிரதேசம், மஹாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஒடிஷா மூன்றாவது இடத்தில் இருக்கிறது. அதே சமயம் தனி நபர்களுக்கு எதிரான குற்றங்களில், ஒடிஷா முதலிடத்தில் இருக்கிறது. ஒரு லட்சம் பெண்களில் சராசரியாக 90.2 பேர் பாதிக்கப்படுவதாக மற்றொரு புள்ளி விபரம் சொல்கிறது. நிலை மை கைமீறி சென்று கொண்டிருப்பதால், பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஒடுக்கக்கோரி அம்மாநில சட்டசபையிலும் குரல்கள் ஒலிக்கின்றன. இதனால், மாவட்ட அளவில் கண்காணிப்புகளை தீவிரப்படுத்தி இருப்பதாக சொல்லி இருக்கிறார் பா.ஜ.,வைச் சேர்ந்த மாநில முதல்வரான மோகன் சரண் மாஜி. பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க தனிப்பிரிவு, 24 சிறப்பு போக்சோ நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவசர உதவி எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், 'இவை எல்லாம் ஏட்டு சுரைக்காய் போல வெறும் காகிதங்களில் மட்டுமே இருக்கின்றன. செயல்பாட்டுக்கு வரவில்லை' என, அதிருப்தி தெரிவித்திருக்கிறார் சமூக ஆர்வலரான நம்ரதா தாஸ். மறுபுறம் அம் மாநிலத்தைச் சேர்ந்த பெண்களோ, தங்களுக்கு பாதுகாப்பையும் கடந்து பொருளாதார, அரசியல் அதிகார அங்கீகாரம் வேண்டும் என குரல் எழுப்புகின்றனர். அந்த குரல் கோராபுத் மலைத்தொடர்களில் இருந்து, கட்டாக் வீதிகள் வரை எதிரொலிக்கிறது. ஒடிஷா அரசு இனியாவது விழித்துக்கொள்ள வேண்டும். - நமது சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Venugopal S
அக் 11, 2025 10:23

பெண்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நடக்கும் முதல் மூன்று மாநிலங்கள் உத்தரப் பிரதேசம், மஹாராஷ்டிரா, ஒரிஸ்ஸா.இவை எல்லாமே பா ஜ க ஆளும் மாநிலங்கள் என்பது பெருமை மிகுந்த சாதனை தான்!


pakalavan
அக் 11, 2025 09:58

பேருக்கு பின்னாடி சாதிய போட்ட நாதாரிங்க என்ன நியாயம் பேசிட்டு இருக்கிங்க?


Barakat Ali
அக் 11, 2025 09:30

இவைபோன்ற பாலியல் குற்றங்கள் தமிழகத்திலும் அதிகரித்துள்ளனவே ????


N Sasikumar Yadhav
அக் 11, 2025 08:05

தவறு செய்தவன் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும் . ஆனால் திராவிட களவானிங்க பாதிக்கப்பட்டவர்கள் மீதே வழக்கு போடுவார்கள்


திகழ் ஓவியன், Ajax Ontario
அக் 11, 2025 07:50

எல்லாம் இந்த விடியா மாடல். முன்நோடி. அது சரி யார் அந்த சார்


Kasimani Baskaran
அக் 11, 2025 06:01

சட்டத்தின் முன்ணனிருத்தி தண்டனை வாங்கிக்கொடுக்க வேண்டும். மெத்தனமான போக்கு மக்களிடையே ஒரு வித வெறுப்பை உண்டுபண்ணிவிடும்.


pmsamy
அக் 11, 2025 05:37

ஒடிசாவில் பாஜக ஆட்சி தான் நடக்குது அங்க குற்றங்கள் நடக்குதுன்னா அதுல பாஜக ஆட்சிக்கு பெரிய பங்கு இருக்கிறது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துறாங்க. ஒழிக பாஜக


pakalavan
அக் 11, 2025 05:33

எங்கே பிஜேபி ஆட்சி நடக்குதோ, அல்லது கூட்டனி ஆட்சி நடக்குதோ அங்கெல்லாம் பென்களுக்கு பாதுகாப்பில்லை என்பது உண்மை, பொள்ளாச்சி 200 பென்கள் கற்பழிப்பு சம்பவம் நடந்தது கூட அதிமுக BJP ஆட்சி காலத்தில்தான், ரேவன்னா 3000 பென்களை கற்பழித்தது கூட BJP ஆட்சி காலத்தில் தான்


SULLAN
அக் 11, 2025 04:36

உண்மை செய்தியை சொல்லவும் ஒரு தைரியம் வேணும்.


Priyan Vadanad
அக் 11, 2025 03:14

பாவக்கா கருத்துப்பதிவாளர்கள் இந்த பக்கத்துக்கே வரமாட்டார்கள். இந்த பகுதி அவர்கள் கண்ணிலேயே படாது. ஆனால் ஒரு சுண்டைக்காய் விஷயம் தமிழ்நாட்டில் வந்திருந்தால்கூட ஆனானப்பட்ட மலைகூட கடல்போல கொந்தளித்து விட்டேனா பார் என்று ஆர்ப்பரித்திருக்கும்.


சமீபத்திய செய்தி