உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வாலிபரை நிர்வாண படம் எடுத்து மிரட்டிய இளம்பெண்கள் கைது

வாலிபரை நிர்வாண படம் எடுத்து மிரட்டிய இளம்பெண்கள் கைது

திருவனந்தபுரம்: கேரளாவில், வாலிபரை நிர்வாண படம் எடுத்து மிரட்டி, பணம் பறித்த, இரு பெண்கள் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம், மலப்புரத்தை சேர்ந்த வாலிபர், மாவேலி கரையைச் சேர்ந்த கவுரி நந்தா, 20, என்ற பெண்ணுடன் பழகினார். குந்தமங்கலத்தில், தன் வீட்டுக்கு அந்த வாலிபரை கவுரி நந்தா அழைத்து சென்று அவரை நிர்வாண படம் எடுத்துள்ளார். சில நாட்களுக்கு பின், அந்த பெண் மற்றும் அவருடன் இருந்த பனஞ்சேரியை சேர்ந்த அன்சிகா, 28, அவரது கணவர் முகமது அபிப், 30, ஆகியோர், வாலிபரிடம் நிர்வாண படத்தை காட்டி மிரட்டி, பணம் கேட்டனர். வாலிபர், தன் வசம் இருந்த பணத்தை எல்லாம் கொடுத்த பின்னரும், தொடர்ந்து மிரட்டி, 1 லட்சம் ரூபாய்க்கு மேல் பறித்துள்ளனர். பாதிக்கப்பட்ட வாலிபர் புகாரில், கவுரி நந்தா, அன்சிகா, முகமது அபிப் ஆகிய மூவரையும் கோழிக்கோடு குந்தமங்கலம் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

vinoth
செப் 12, 2025 15:43

எங்க கருது சொல்ல ஒருத்தனையும் காணோம்..


Senthoora
செப் 15, 2025 07:56

என்ன சொல்லுவேன், நல்ல கலியுகம் தான், வெளுத்துவாங்குங்க இந்தகாலத்து பெண்களே, ஏதோதோ இந்தப்பொண்ணுங்க, பசங்கள போட்டுத்தள்ளுறாங்க, இப்படி எல்லாம் கவிஞர் கண்ணதாசன் பாடி கவி உலகுக்கு கேவலப்படுத்தாமல் போய்விட்டார், சந்தோசப்படுங்க.


baala
செப் 15, 2025 10:46

இதுக்கு காரணம் திராவிட மாடல் தான்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை