தமிழ்நாடு இந்து சமய அறநிலைய சார்நிலைப் பணிக்கான எழுத்துத் தேர்வு அறிவிப்பு
சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயல் அலுவலர் நிலை-I, தமிழ்நாடு இந்து சமய அறநிலைய சார்நிலைப் பணிக்கான எழுத்துத் தேர்வு ஜன.,6, 7 தேதிகளில் நடக்க உள்ளது.டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ள அறிக்கை:தேர்வர்கள் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in/www.tnpscexams.in ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.