கல்வி வளர்ச்சிக்கு நிதி வழங்காமல் புறக்கணிப்பு: மோடி அரசுக்கு தி.மு.க., கண்டனம்
சென்னை: வரும், 2026 சட்டசபை தேர்தலில், தி.மு.க., 200 அல்லது 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற வேண்டும் என, தி.மு.க., செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.சென்னை அறிவாலயத்தில், தி.மு.க., செயற்குழு கூட்டம், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:*அம்பேத்கரை அவதுாறாக பேசி-, அவரது தியாகத்தை இழிவுபடுத்திய, உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கண்டனம்*தமிழகத்திற்கு நிலுவையில் இருந்த, மாநில பேரிடர் நிதியில் இருந்து, 944.80 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது.இது, வழக்கமான நிதி. பெஞ்சல் புயலுக்கு முதல்வர் கோரிய அவசர தொகையான 2,000 கோடி ரூபாய்; நிரந்தர மறு சீரமைப்புக்கான 6,675 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்காததற்கு கண்டனம். மாநில அரசு கேட்கும் பேரிடர் நிதியை மத்திய அரசு விரைவில் ஒதுக்க வேண்டும்*ஒரே நாடு; ஒரே தேர்தல் திட்டத்தை திணிக்க, அறிமுகம் செய்யப்பட்டுள்ள மசோதாவை முழுமையாக கைவிட வேண்டும்*டங்ஸ்டன் கனிமத்தை ஏலம் விடும் உரிமையை எடுத்துக் கொண்ட பா.ஜ., அரசுக்கும், அதற்கு ஓட்டு போட்ட அ.தி.மு.க., வுக்கும் கண்டனம்*தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்காமல், மத்திய அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. கல்வியை மாநில பட்டியலுக்கு மீண்டும் கொண்டு வர வேண்டும். மாநில உரிமைகளை கல்வித்துறையிலும் பறிக்கும் மத்திய அரசின் எதேச்சாதிகார போக்கு கண்டிக்கத்தக்கது*திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழாவை, டிசம்பர் 30, 31ம் தேதிகளில் தமிழகம் முழுதும் முன்னெடுத்து, சமத்துவத்தை நிலைநாட்டுவோம்*பொங்கல் திருநாளை, தமிழர் பண்பாட்டு திருவிழாவாக, கலை- இசை நிகழ்வுகள், பாரம்பரிய விளையாட்டுகள் நடத்தி, தமிழர்களின் தனித்துவத்தை நிலைநாட்ட வேண்டும்*தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, கச்சத்தீவை மீட்க வேண்டும்*வரும் 2026 சட்டசபை தேர்தலில், தி.மு.க., 200 அல்லது 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற, இன்றே புறப்படுவீர்; சாதனைகளை பாடுவீர். தி.மு.க., ஆட்சி வருங்காலங்களிலும் தொடர்ந்திடுவதை உறுதி செய்வீர்.இவை உட்பட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.