உள்ளூர் செய்திகள்

சுப்பலட்சுமி லட்சுமிபதி கல்லூரியில் வணிகவியல் தேசிய கருத்தரங்கு

மதுரை: மதுரை-அருப்புக்கோட்டை ரோடு சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லூரி, வணிகவியல் துறை சார்பில் தேசிய கருத்தரங்கு நடந்தது. "2020ல் வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள்" என்ற தலைப்பில், நடந்த கருத்தரங்கில், துறைத் தலைவி அமுதா வரவேற்றார். முதல்வர் சீனிவாசன் தலைமை வகித்தார். முதல்வர்(பொறுப்பு) சண்முகம் முன்னிலை வகித்தார். இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதுநிலை மேலாளர் பாண்டுரெங்கன் துவக்கி வைத்தார். 83 ஆய்வாளர்கள், ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். கருத்தரங்க அமர்வுகளில் புதுச்சேரி பல்கலை வணிகவியல் துறைத் தலைவர் நடராஜன், திருவேடகம் விவேகானந்தா கல்லூரி பேராசிரியர் (ஓய்வு) லட்சுமணன், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் மண்டல மேலாளர் மோகன்குமார் பேசினர். பேராசிரியர்கள் விஜயரகுநாதன், சவுடீஸ்வரி ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்