புதுச்சேரியில் ஈஷா யோகா வகுப்பு நாளை துவக்கம்
புதுச்சேரி: புதுச்சேரியில் ஈஷா யோகா வகுப்புகள் நாளை மறுநாள் 17ம் தேதி துவங்கி 7 நாட்கள் நடக்கிறது.புதுச்சேரி, முத்தியால்பேட்டை ஆறுமுகா திருமண நிலையத்தில் ஈஷா யோகா வகுப்பு நாளை மறுநாள் 17ம் தேதி ஈஷா யோகா வகுப்பு துவங்கி 7 நாட்கள் நடக்கிறது. இந்த யோகா வகுப்புகள் தினமும், காலை 6:00 மணி முதல் 8:30 மணி வரை, மாலை 6:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை நடக்கிறது. இந்த வகுப்பில் ஷாம்பவி மஹாமுத்ரா என்ற சக்தி வாய்ந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. யோகா வகுப்பில் கலந்து கொள்வதால் ஆஸ்துமா, ஒற்றை தலைவலி, நீரிழிவு, முதுகு வலி, செரிமான கோளாறுகள், மனக்கவலை, மன அழுத்தம், துாக்கமின்மை போன்ற பிரச்னைகளில் இருந்து விடுபடலாம். பயிற்சி வகுப்பில், 15 வயதிற்கு மேற்பட்ட ஆண், பெண் அனைவரும் கலந்து கொள்ளலாம்.விருப்பம் உள்ளவர்கள் 94432 77486, 9443275040, 8300016000 ஆகிய மொபைல் எண்களை தொடர்பு கொண்டு, முன்பதிவு செய்து கொள்ளலாம். நிகழ்ச்சி ஏற்பாடுகளை புதுச்சேரி ஈஷா தன்னார்வத் தொண்டர்கள் செய்து வருகின்றனர்.