உள்ளூர் செய்திகள்

உலக புத்தக விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி

ஊட்டி : ஊட்டி மாவட்ட மைய நுாலகத்தில், தமிழ்நாடு அரசு பொது நுாலகத்துறை,- நீலகிரி மாவட்ட நுாலக ஆணை குழு மற்றும் வாசகர் வட்டம் சார்பில், உலக புத்தகத்தின் விழா கொண்டாடப்பட்டது.காலை, 9:30 மணிமுதல் மாலை, 5:00 மணிவரை நடந்த நிகழ்ச்சியில், 'மாணவர்களின் வெற்றியில் பெரிதும் பங்கு வகிப்பவர்கள், சமுதாயம், மாணவர்கள், பெற்றோர்' என்ற தலைப்பில், கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.தொடர்ந்து, வாசிப்பை நேசிப்போம் சுவாசிப்போம் என்ற தலைப்பில், விவாதமும் இடம்பெற்றது. இதில், திரளான வாசகர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்