ஆண்டுக்கு இரண்டு முறை தேர்வு: சி.பி.எஸ்.இ., திட்டம்
புதுடில்லி: மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., ஏற்கனவே, பிப்., - மார்ச்சில், ஒருமுறை மட்டுமே, 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு, வாரிய தேர்வுகள் நடத்துகிறது. இந்நிலையில், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், புதிய தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தும் நோக்கில், ஆண்டுக்கு இரண்டு முறை தேர்வுகளை நடத்த சி.பி.எஸ்.இ., திட்டமிட்டுள்ளது.இது, வரும் கல்வியாண்டில் அமலாக உள்ளது. இது தொடர்பான விதிமுறைகள் விரைவில் வெளியிடப்பட உள்ளன.