உள்ளூர் செய்திகள்

நீட் தேர்வு மையத்தை சுற்றி தடை உத்தரவு

பெங்களூரு: பெங்களூரில் நீட் தேர்வு நடக்கும், மையங்களை சுற்றி தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங் பிறப்பித்த உத்தரவு:நீட் மறுதேர்வு 21ம் தேதி நடக்கிறது. தேர்வு சுமுகமாகவும், முறைகேடுகளும் இன்றி நடப்பதை தடுக்கும் வகையில், தேர்வு மையங்களை சுற்றி 200 மீ., பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.தேர்வு நேரத்தில் இப்பகுதியில் ஜெராக்ஸ் கடைகள், சைபர் சென்டர்கள் மூடப்பட வேண்டும். தேர்வு மையத்தை சுற்றி யாரும் தேவையின்றி நடமாட கூடாது. குழுக்களாக செல்ல கூடாது. இதை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களும் சரியான நேரத்தில் மையத்திற்கு வந்து விட வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்