ராக்கிங் கொடுமை: இன்ஜினியரிங் மாணவர் தற்கொலை
ஐதராபாத்: ஐதராபாத்திலுள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் பயின்ற முதலாமாண்டு மாணவர் சாய்நாத், சீனியர் மாணவர்களின் ராக்கிங் கொடுமையை தாங்க முடியாமல் ரயிலில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன், இனி ராக்கிங்கில் யாரும் ஈடுபட வேண்டாம் என உருமாக கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அக்கடிதத்தை கைபற்றிய போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.