உள்ளூர் செய்திகள்

திருக்கோவிலூர் கல்லூரியில் அறிவியல் தின கொண்டாட்டம்

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் கலை அறிவியல் கல்லுாரியில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப் பட்டது. கல்லுாரி தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கி னார். கல்லுாரி முதல்வர் கண்ணன் சிறப்புரை ஆற்றி னார். இயற்பியல், வேதியியல், நுண்ணுயிரியல் துறைகளை சேர்ந்த அறிவியல் மன்ற மாணவர்கள், பேராசிரியர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். பேராசிரியர் பாபு வரவேற்றார். அறிவியல் முன்னேற்றம், அதனால் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து மாணவர்கள் பேசினர். இயற்பியல் துறைத்தலைவர் சந்திரசேகரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். வேதியியல் துறைத்தலைவர் மணிகண்டன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்