இயக்குநர் நியமனம்: தினமலர் செய்தி எதிரொலி
உலக தமிழ்ச்சங்கத்தில் இயக்குநராக இருந்த சம்சுதீன் பணி ஓய்வு பெற்றார். அதற்கு பின் புதிய இயக்குநர் நியமிக்கப்படவில்லை. இதனால் முக்கிய பணிகள் முடங்கின. மின்சாரம், தொலைபேசி கட்டணம் செலுத்த கூட டம்மி காசோலை வழங்கியுள்ளோம், முக்கிய திட்டங்களுக்கு அரசிடம் நிதி கேட்டு பெறவும் முடியவில்லை என அலுவலர்கள் தெரிவித்திருந்தனர்.இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக இயக்குனராக அருள் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றார்.