உள்ளூர் செய்திகள்

பள்ளிகளுக்கு குண்டு மிரட்டல் இன்டர்போல் உதவுமா?

பெங்களூரு: பெங்களூரில் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் சம்பவங்கள், கடந்த ஓராண்டாக அதிகரித்து உள்ளது. சமீபத்தில், 68 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதுகுறித்து சி.ஐ.டி., போலீசார் விசாரிக்கின்றனர்.விசாரணையில் சுவிட்சர்லாந்து நாட்டின் வி.பி.என்., என்ற இணையதளத்தை பயன்படுத்தி, மர்மநபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.இதனால் அவர்களை கைது செய்ய, இன்டர்போல் எனும் சர்வதேச போலீசாரின் உதவியை, சி.ஐ.டி., போலீசார் நாடி உள்ளனர். மேலும் சர்வதேச நீதிமன்றங்களின் உதவிகளை  கேட்டு உள்ளனர். வழக்கு தொடர்பான ஆவணங்களை, சர்வதேச போலீசார், நீதிமன்றங்களுக்கு சி.ஐ.டி., போலீசார், மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைத்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்