உள்ளூர் செய்திகள்

கூடுதல் ஆசிரியர் நியமிக்க வலியுறுத்தல்

சேலம்: மேட்டூர், பி.என்.பட்டி, கருமலைக்கூடலில் உள்ள ஜவகர் அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியர், பெற்றோருடன் நேற்று சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.அதில், நாங்கள் படிக்கும் அரசு நிதி உதவி பெறும் உயர்நிலைப்பள்ளியில், 6 முதல், 10ம் வகுப்பு வரை, 43 மாணவர்கள் படிக்கிறோம். இரு ஆசிரியர்கள் உள்ளனர். அதில் ஒருவர், ஜூன், 30ல் ஓய்வு பெறுகிறார். ஜூலையில் இருந்து ஓராசிரியர் பள்ளியாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளதால், கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என கூறியிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்