தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் மாற்றம்
டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 2, 2ஏ தேர்வு குளறுபடிகளை அடுத்து, அனைத்து தரப்பிலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.இதனால், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சண்முகசுந்தரத்தை காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றி தமிழக அரசு நேற்று இரவு உத்தரவிட்டது. புதிய அலுவலராக வெங்கட பிரியா நியமிக்கப்பட்டுள்ளார்.