பள்ளியில் மயங்கி விழுந்த பிளஸ் 1 மாணவி உயிரிழப்பு
திருநெல்வேலி: திருநெல்வேலி, தலைவன்கோட்டையை சேர்ந்த அந்தோணிசாமி மகள் ஜெயராணி. புளியங்குடியில் தனியார் பள்ளியில் பிளஸ் 1 மாணவி. குறைந்த ரத்த அழுத்த பாதிப்பு இருந்தது. இதற்காக மாத்திரைகள் எடுத்துக்கொண்டார். நேற்றுமுன்தினம் பள்ளியில் இருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இறந்தார்.